அந்நியன்

படம் டிபிக்கல் ஷங்கர் பார்முலாவுக்குள் அடங்குகிறது. அநியாயங்களைத் தட்டிக் கேட்க தள்ளப்படும் சாதாரணமான கதாநாயகன், ஆங்காங்கே புகுத்தப்பட்ட கிராபிக்ஸ், கொஞ்சமாய் ரிசர்ச் செய்து சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயமாக ‘கருடபுராணம்’ .அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூடா எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது?

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே .ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் அம்பியின் காரெக்டரில் நல்ல நகைச்சுவை மற்றும் நறுக் நாட்டு நல சிந்தனைகள். அன்னியனா அம்பியா என்று கேட்டால், அன்னியன் காரெக்டருக்குத் தான் முதல் பரிசு.

இன்னொரு ஹீரோ பீட்டர் ஹெய்ன்! ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை ..குறிப்பாக , கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி. பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.

விவேக் - வாரே வாவ். நீண்ட நாளுக்கப்புறம் ஒரு கலக்கல் காமெடி செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார்.

சதா அழகாயிருக்கிறார். பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.அந்நியனிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும் அந்த சில நிமிடங்களில் சதாவிடமிருந்து அருமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குனர். சதா சாதா..

லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பனன் மட்டுமே யோக்கியமானவன் போல காட்டப்படுவதும், அயோக்கியர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதோர் போன்று சித்தரிக்கப்படுவதும் இயக்குனரின் ஆதிக்க வெறியை நிலைநாட்டும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. சற்றே உற்று நோக்கினீர்களேயானால், சங்கீத அகாடெமி தலைவராக இருக்கும் நீலுவின் பாத்திரம் மட்டும் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்பட்டு, தவறு செய்பவராகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் கூட அன்னியரால் மிரட்டப்படுகிறாரேயொழிய, கொலை செய்யப்படுவதில்லை என்று ஆராய்ந்து நோக்கினால் யாராலும் சுலபமாய் கண்டுபிடிக்க முடியும்.’


பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரில் வாசகர் கேள்விகள் எல்லாம் எழுதுவாரே…அவரது பெயர் கூட படத்தில் ஒரு கதாபாத்திரமாய் உலாவ விட்டிருப்பது, ஷங்கர் டச் தான்.

பின் குறிப்பு:

இந்த விமர்சனத்திற்கான உளவியல் காரணீகளுக்கான காலக்கட்டம் 'அந்நியன்' வெளிவந்த அன்று முதலில் வெளியான விமர்சனத்திலிருந்து , நேற்று இரவு நான் அப்படத்தை பார்த்த பின் நண்பர் படத்தை பற்றிய கருத்தை கேட்கும்போது நான் முழித்த வரையிலான காலக்கட்டம் .

கருத்து உதவி : ஷங்கர் .

தொழில்நுட்ப உதவி : கன்ட்ரோல் சி, கன்ட்ரோல் வி ..

பொது சிவில் சட்டம்

இடஒதுக்கீடு, இரண்டாயிரம் வருடம் வன்கொடுமைகள் அனுபவித்தற்காக தாழ்த்தப்பட்டோர்க்கு வழங்கும் ஒரு சலுகை எனக்கூறும் நம் அரசாங்கங்கள், அந்த சலுகையை கிறிஸ்தவ தலித்களுக்கு வழங்க மறுப்பது எப்படி நீதியாகும்? கிறிஸ்தவருக்குள் சாதியில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் , கிறிஸ்தவ தலித்களும் இரண்டாயிரம் வருடமாக வன்கொடுமையை அனுபவித்தவர்களின் வாரிசுகள்தானே?

'சிறுபான்மையர் சட்டங்களை வைத்து தன் சொத்துக்களை காத்தும், தன் பாக்கெட்டுகளை நிரப்பும் ,தம் அதிகாரங்கள் குறைக்கப்படும் சூழல்களின் மட்டும் பொங்கியெழும் மத குருமார்களும், பணக்காரர்களும் , சாதாரண பொது மக்களின் பிரச்சினைகளின்போது 'மறு கன்னத்தையும்' காட்ட அறிவுரை வழங்கவும் தவறுவதில்லை ..பொது சிவில் சட்டம் பேசும் கட்சிகளும் , இந்த உரிமையை 'பொது சிவில்' சட்டதிற்குள் கொண்டு வருவதே இல்லை .


என்னுடைய முந்தைய பதிவில் இந்த கருத்து பத்தோடு பதினொன்றாக மறைந்துவிட்டது ..அந்த கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பதிவின் நோக்கம் .

வலைப்பதிவில் தமிழ் துரோகம் ..

மறைமுகமாக ஒரு தமிழின துரோகம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது ..இது எத்தனை பேருக்கு புரிந்துள்ளது எனத் தெரியவில்லை.. சொரணை கெட்ட தமிழன் எப்போதும் அப்படித்தான். தன் உரிமை பறிபோவதுகூட தெரியாமல் பராக்கு பார்த்துக்கொண்டிருப்பான் . தனக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைக்கும் வலைப்பதிவாளன் கூட இந்த விடயத்தில் ஏமாந்துதான் போகிறான் .. என்ன செய்வது அவனும் தமிழன் தானே .

நான் சொல்ல வருவது இன்னுமா புரியவில்லை.. தமிழனுக்கு புரியாது !.. பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகளை தெரியவிடாமல் , வலைப்பதிவில்(blogspot) உள்ள தமிழின துரோகிகள் , தமிழ்பெயர்களை ?????? என்று மாற்றும் தொழில்நுட்பத்தை செய்து, எல்லோரையும் ஆங்கிலத்தில் தம் பெயர்களை மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர் . நம் வலைப்பதிவரும் அவர்களின் சூழ்ச்சி தெரியாமல் , பெயர்களை ஆங்கிலத்தின் எழுதும் அவலச்சூழலில் மாட்டிகொண்டுள்ளனர் ..

இதனை கண்டிக்கும் வகையில் , என் பெயரை -L-L-D-a-s-u--..(எழுத்துகளின் மீது தார் அடிக்க முடியாமல் செய்திருக்கும் மைக்ரோசாஃப்டின் தமிழ் துரோகத்தையும் கண்டிக்கிறேன் )..

Image hosted by Photobucket.com

மாற்றியுள்ளேன் ..

பி.கு ...

தார் அடித்து நான் தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கையில் , என்னை தமிழ் வளர்ப்போர் லிஸ்டில் சேர்க்காமல், தன் பெயரிலே ஆங்கிலத்தை கலக்கும் அல்வாசிட்டி ,மற்றும் மாயவரத்தான், இட்லி வடை , பாலா போன்றோரை சேர்த்த தினமலர் போன்ற பார்ப்பண ஏடுகளை கண்டிக்கிறேன் .

பிதாவே எங்களை மன்னியும்

அன்பு சகோதரர்க்குள் சாதி பார்த்து தீண்டாமை வளர்த்து, தேவாலயத்தை பூர்வாஷிரமாக்கியதற்காக ,பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கல்லூரி , பள்ளி சொத்துக்களை காக்க உரிமை குரல் கொடுத்துவிட்டு , ஈராயிர வருஷ கொடுமைகளுக்கு ஆளான தலித்தின் உரிமைகளுக்கு (சாதி எங்களுக்குள் இல்லையென பொய் சொல்லி ) குரல் கொடுக்காத குற்றத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

அன்பை பரப்ப சொன்னவர் நீர் .. அரசியல், கலாச்சார விடயங்களுக்கான மதமாய் மாற்றி , வன்முறையில் செயல்படுவற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

கட்டாய மத மாற்றத்தை நீர் வெறுப்பீர் எனத்தெரிந்தும், சட்டம் கொண்டு வந்தோரை எதிர்த்து அரசியல் நடத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

யார் ஆட்சிக்கு வந்தாலும், மாலையோடு காத்திருக்கும் குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமது வார்த்தைகளை பேசாமல் , அரசியல் தலைவரின் கொ.ப.சே வாக இருந்ததற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் விழாக்களின் நாயகராக நீரில்லாமல், அரசியல் தலைவர்களின் நாயகர்களாக்கி, அவர்களின் நாய் பேச்சுகளுக்கு கைதட்டியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கூட்டத்தை நாடக குழுவாக்கி , ஊனமுற்றோராய் நடிப்போரை கதாநாயகர்களாக ஆக்கும் எங்கள் அவலங்களுக்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமக்கு ஏஜண்டுகள் நாங்கள், நாங்கள் ஜெபித்தால்தான் நீர் செவிமடுப்பீர் என ஊரை ஏமாற்றி ,ஜெபிக்க சொல்வோரிடம் , கூலி கேட்கும் ஏஜண்டாக இருப்பதற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

'மருத்துவர் நோயுற்றோர்க்கே' என்று நீர் சொன்னதை மறந்து , எங்கள் கான்வென்டுகளில் படித்த பணக்கார குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் கயமைத்தனத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

யாருக்கும் தெரியாத மொழி ஒன்றை பேசி இது உமது மொழியென கூறி உம்மை தனிமைப்படுத்திய குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .


பாப் பாடலை எதிர்த்து, அதற்கு சற்றும் குறைவில்லாத 'அல்லேலூயா' நடனம் ஆடி உம்மை கேவலப்படுத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உலகம் அழிய தேதி குறித்தமைக்காகவும், தேதியை வெட்கமில்லாமல் மாற்றி திரிந்தமைக்காகவும்,பிதாவே எங்களை மன்னியும் .

நானும் ரஜினியும்: ஒரு ஃப்ளாஷ் பேக்

பள்ளியில் படிக்கும்போது ஆன்டுக்கொருமுறை சினிமா கூட்டி செல்லும் என் அப்பா , ‘ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் ‘ என்ற எண்ணமுடையவராதலால் என்னை ரஜினி படம் பார்க்க அழைத்து கொண்டு போகாததில் வியப்பேதும் இல்லை . ஆதலால் நான் காலேஜ் வருமளவும் ரஜினி படம் பார்த்ததில்லை . ஆனால் அவர் படம் பார்க்கும் முன்னால் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு என் மெட்ராஸ் மாமாவின்
‘இன்ஃபுலன்ஷினால்’ வந்தது . ஏ வி எம்மில் மாப்பிள்ளை ஷூட்டிங் . என் வயது சிறுவன் ஒருவனும்( ஒரு டைரக்டர் பையன் , உம்மனாம் மூஞ்ஜீ .. விஜயாக இருக்குமென்று எனக்கு இப்போது சந்தேகம் .. நாட் ஷுயர்) நானும் நட்பாகி கொன்டு , மற்றவர்களோடு ரஜினிக்காகவும் அமலாவுக்காகவும் வெயிட் பண்ணிகொண்டிருந்தோம் . ரஜினி பைக்கில் ஸ்டையிலாக வருவார் , மேக்-கப் போட்டு கொள்ளமாட்டார் , தலை சீவ மாடார் என ரஜினி ரசிகனான என் நண்பன் சொன்ன வார்தைகளை நம்பி ரஜினியை பைக்கில் எதிர்பார்த்துகொன்டிருக்க, அவர் வந்ததோ காரில் .. முதல் ஏமாற்றம் .. மேக்-கப் போட்டிருந்ததும் , தலை சீவியதும் அடுத்தடுத்த எமாற்றங்கள் . ஏதோ அவரிடம் கை கொடுத்து , சிரிப்பை தனியே வாங்கினாலும் ரஜினிமட்டில் எனக்கு ஏமாற்றம் தான் . ‘சின்ன சின்ன ‘ நடிப்பசைவுகலுக்கும் சுற்றி இருந்தோர் கை தட்டியதும் நடிப்பு ஈஸி என்ற மன நிலையே வந்தது . ‘முதல் இரவு’ காட்சியாக அப்போது கருதப்பட்ட , ரஜினி-அமலா காலேஜ் சந்திப்பு காட்சியும் , ரஜினி- சிவாஜி ராவ் என்ற கமெடியனும் காலேஜ் ஹாஸ்டல் கேட் ஏறி குதிக்கிற ஸீனும் பார்த்துவிட்டு வந்தேன் . (வேறு ஷூட்டிங்கில் சீதாவை பார்க்கும் அவசரத்தில் சீதா அப்பா-அம்மாக்கிடையில் புகுந்ததால் சீதா அப்பா கோபம் கொண்டு திட்டியது தனி கதை) . .

கல்லூரி நாட்களில் ரஜினி படத்தை விடாது பார்த்தாலும் , பிறகு ரஜினியின் பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை, முக்கியமாக தில்லு முல்லு , ஜானி , முள்ளும் மலரும் , நெற்றிக்கன் ரசித்தாலும் மாப்பிள்ளை மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை .

பி . கு : தலைப்பு மட்டும் ஜூ.வி , குமுதம் ,…….. தலைப்புகளின் பாதிப்பு . கொஞ்சம் ஓவர்தான்னு தெரியும் .

சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!

இந்த தலைப்புதான் இந்த செய்தியை படிக்கத்தூண்டியது ..அடுத்த தேர்தலுக்குள் பல வாய்ப்புகளையும் எடை போடும் கட்டத்திற்குள் ஐயா உள்ளதால் , ரஜினியையும் கட்டிப்பிடிக்க ஆயத்தமாகிறார் என்ற எண்ணத்தோடு படிக்கும்போது , ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வாசிக்க நேர்ந்தது .( சுகாதாரத்துறை அமைச்சரை பாராட்டியது அதிர்ச்சி இல்லை!!) .

நுழைவுத்தேர்வை தடை செய்ததால்( இது சரியா என்பது தனி), ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசையை குலுக்கல் முறையில் தெரிவு செய்ய போகிறார்களாம் .. இந்த யோசனையை சொன்ன அதிகாரியை 'தமிழின(?) துரோகி' என ராமதாஸ் சொன்னாலும், 'முட்டாள் அதிகாரி' என்பதே சரி என நினைக்கிறேன் ..

மருத்துவ , பொறியர்துறை மேற்படிப்பு காரணீயாக தமிழ் இல்லாத காரணத்தால் , தமிழை கவனமெடுத்து படிக்கும் உந்துதல் தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்களுக்கே இருப்பதில்லை ..பலர் தமிழை ஒரு பாடமாகவே கூட தேர்வு செய்வதில்லை . தமிழையும் காரணீ பாடமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில், குலுக்கல் முறையை தேர்வு செய்த தமிழக அரசை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக கோரிக்கை விடுத்த முனைவர் ராமதாஸை இந்த விடயத்தில் பாராட்டுகிறேன்.

அடைக்கலராசும் பார்ப்பணீய சூழ்ச்சியும்

நம் வாழுகின்ற இந்த தருணத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சில பெரியோரை பற்றியும், அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட அடிகளையும், பார்ப்பணீயத்தினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் பதிந்து , இருநூறாயிரம் ஆண்டுகட்கு பிறகும் இணையத்தை பார்க்கும் நம் வழித்தோன்றல்களுக்கு , இந்த சூழ்நிலையை படம் பிடித்து காட்டும் புனிதப்பணியை மேற்கொண்டுள்ளேன் .

தமிழகத்தின் புனித பூமியாம் திருச்சியில் , நகரத்தந்தை என அழைக்கப்பட்டவரும் , சுதந்திர போராட்ட வீரருமான திரு லூர்துசாமியின் தவப்புதல்வராக பிறந்தவர் அடைக்கலராசு . சிறுவயதிலே ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உறுதுணையாகவும் இருந்தவர் இவர் . அன்னை இந்திராவின் சோசலிச கொள்கையினால் கவரப்பட்டு , இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சியான காங்கிரசில் இணைத்துக்கொண்டபோது, அன்னை இந்திரா எவ்வளவு மகிழ்ச்சியுற்றார் என்பதை திரு . எஸ் கே சாவ்லா தன் நூலில் விவரித்துள்ளார் .

ஏழைகளுக்கும் கூலி தொழிலாளர்க்கும் வேலை கொடுக்க எத்தனை கட்டடங்களை கட்டினார் , மக்களுக்கு மகிழ்ச்சியுற எத்தனை தியேட்டர்களை திறந்தார்.. ஏன், அவர் 80 அடி கட்-அவுட் தமிழகத்தில் முதன்முதலில் நிறுவியதும் ஏழைகளுக்காகத்தானே என நான் கூறினால் என்னை ஜாதி வெறியன் என ஜல்லியடிக்ககூடிய சாத்திய கூறுகள் இருந்தாலும் , நம் தமிழ் மக்களுக்கு உண்மைகளை உரக்கக்கூற நான் பின்வாங்கவில்லை .

சிங்கப்பூர்க்கு அவர் வருகை அளித்தபோது, அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு மணிநேரத்திலும், தமிழ், தமிழ் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய 'தமிழ்த்தாய்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அவரின் தமிழ்பற்றும் , இலக்கிய இலக்கண அறிவும் உங்களுக்கு விளங்கும் .

அவர் நாடாளுமன்றத்தில் இடியென முழங்கி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் எத்தனை ? அதனையெல்லாம் செய்தியாக வராமல் பார்த்துக்கொண்டன இந்த பார்ப்பண பத்திரிகைகள் .. இவரை விட்டால் , தமிழ்நாட்டை இஸ்ரேலுடன் இணைக்கும் தம்முடைய கனவுக்கு குறுக்குசால் ஓட்டி விடுவார் என பயந்த சோ போன்ற பார்ப்பணகும்பல் , மூப்பனார் என்ற நேர்மைய்ற்றவருடன் கூட்டு சேர்ந்து ஓரம் கட்டியதை மறுக்கமுடியுமா?

பின் குறிப்பு: தலைவர் ஓ.ப(http://lldasu.blogspot.com/2005/05/part-i.html), சோசலிசவாதி அண்ணன் அ.ரா போன்ற தமிழகத்தின் தலை சிறந்தோரைக்கூட அறிமுக படுத்த வேண்டியுள்ள இந்த தமிழ் சூழல் மிகுந்த அலுப்பினை தருகிறது .. நான் இந்த பணியை என் பணிச்சுமைக்குமிடையே செய்ய வேண்டியுள்ளது .. அடுத்து நீதியரசர் தூத்துக்குடி பெரியசாமியை இந்த தமிழ் மக்களுக்கும் , வழித்தோன்ரல்களுக்கும் அறிமுகப்படுத்துவேன் . இந்த கேடுகெட்ட தமிழர்க்காக, அய்யா தமிழ்க்குடிதாங்கியின் பெருமைகளை அலசிய குழலியாரும் (http://kuzhali.blogspot.com/2005/04/1.html) , அண்ணன் தொல். திருமாவை பற்றி மணிக்கூண்டாரும்(http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_111655887144691553.html) எழுதி இந்த திருப்பணியை என்க்கு முன்னரே செய்துள்ளனர் .

விஜயகாந்த் புது கட்சி

சிவாஜி , விஜய ராஜேந்தர் , பாக்யராஜ் வழியில் , கேப்டன் என அறுவருப்பே இல்லாமல், தன்னை வருணித்துக்கொள்ளும் திரு. விஜயகாந்த் அவர்கள் , புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாராம் .

http://thatstamil.indiainfo.com/news/2005/06/01/vijay.html

ரஜினிக்கு 6 தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு இவருக்கு தமிழ்நட்டின் 239 தொகுதிகளிலும் கிடைக்க வாழ்த்துகிறேன் .

பல சினிமா கதாநாயர்களை புறக்கணித்த தமிழ் சமூகம் இந்த 'மகாநடிகனை'யும் புறக்கணிக்கும் . தமிழ் சமுதாயம் சினிமா மாயையில் இல்லை என்பதையும் உலகுக்கு நிரூபிக்கும் .