தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..

என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..

1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?

2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?

3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?

ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!

டிஸ்க்ளைமர் ...

டிஸ்க்ளைமர் ...

அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..
ஆ) தங்கர் நடிகைகளை திட்டினதில் எனக்கு ஒரு வருத்தமுமில்லை .
இ) தஙகர் மன்னிப்பு கேட்டதும் என்னை பாதிக்கவுமில்லை ..
ஈ) பாலியல் தொழிலாளிகளின் மேல் மரியாதை வைத்திருப்போர் , நடிகைகளை அவர் பாலியல் தொழிலாளிகளோடு ஒப்பிட்டதை கண்டித்து கொதித்து எழுந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது .. அவர்கள் தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .


எனக்குள்ள ஒரே வருத்தம்.. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும் தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..