வில்லன் விவேக்

சுனாமி மீட்பு பணியில் விவேக் ஓபராய் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது . அவரின் உடலுழைப்பும், செலவிட்ட காலமும் .... பிரமிப்பாக உள்ளது . இப்படியும் ஒரு மனிதர், அதுவும் சினிமா நடிகர் தற்போது இருப்பாரா என ஆச்சரியமாக உள்ளது . ஒரு ஹிந்தி நடிகர் செய்கிறாரே, லட்ச லட்சமாக தமிழில் சம்பாதித்த தமிழ் நடிகர்கள் ஒன்றும் பெரிதாக செய்யவில்லையே என்ற குரலும் தமிழகத்திலே கேட்கத்தான் செய்கிறது .

21 லட்சம் கொடுத்து விட்டு தன் 'தனி வழி'யில் போவதையோ அல்லது ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதையோ நாம் விமர்சிக்கமுடியாது . அது அவரவர்களின் சொந்த விருப்பம் . ஒவ்வொருவரும் அவரவருடைய பணத்தின், நேரத்தின் முதலாளிகள் .
ஆனால் ,அவர்கள் 'தமிழனுக்காக உயிரை கொடுப்பேன் ' என பஞ்ச் டயலாக் விடும்போது நம் தமிழினம் அவர்களின் பொய் முகத்தை உணர வேண்டும். தமிழக தமிழரை மேல் நாட்டு மேடைகளிலே விமர்சித்துவிட்டு வரும் நடிகர்களுக்கு மாலை போட , அவர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய போட்டி போடும் நம் தமிழினம் இனியாவது உணர்ந்து திருந்துமா? நல்ல வேலை, அவர்களில் எவரும் விவேக்கைப் போல் சேவை செய்யவில்லை . சிறு சிறு அசைவுகளுக்கும் அதிக சம்பளம் வங்கும் இவர்கள் , அதே விகிதப்படி , இந்த சேவைக்கு முதல்வர் நாற்காலி எதிர்பார்ப்பார்கள் .

ஒன்று மட்டும் நிச்சயம் , விஜயக்காந்த் , ரஜினிக்காந்த் போன்றோர்க்கு விவேக் ஒரு கொடூரமான வில்லன் . காமெடி விவேக்கின் கோபமே அதற்கு சாட்சி .

அஞ்சலி

போப் ஜான் பால் , தன்னை துப்பாக்கியால் சுட்ட மெஹ்மெட் அலி அக்கவோடு




Image hosted by Photobucket.com