சத்யசாய் வீரப்பா சந்தனக்கடத்தல் பாபா

சத்ய சாய் பாபா . நல்ல பேச்சாளர் . மக்களை மயக்கும் சொல்வன்மை உடையவர் . அவர் வாயிலிருந்து லிங்கம் எடுப்பது , வெறும் கையிலிருந்து விபூதி எடுப்பது போன்றவற்றை செய்து, தாமே 'கடவுள்' என பறைசாற்றினார் . இதை கண்ட கூட்டம் இவரை தெய்வம் என்று வழிபட்டது . ( ரயிலை மறையச் செய்த பி.சி. சர்க்கார் இன்னும் பெரிய கடவுள்தானே!!) . இவருக்கு வெளிநாட்டு பக்தர்களும், பணக்கார/ அதிகாரவர்க்க பக்தகேடிகளும் குவிந்தனர் . இவரின் பக்தர்கள் மூலம் பெரும்வருமானம் இவருக்கு கிடைத்தது. இதன்மூலம் இவர் கல்விக்கூடங்களும் , தண்ணீர் பஞ்சம் போக்கும் பணிகளும் செய்தார் . இவரது கல்விக்கூடங்களில் படிக்கும் பக்தர்களின் குழந்தைகளை பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது , கொலைக்குற்றச்சாட்டு கூட உண்டு . இதனால் மாணவர்களே இவரை கொலை செய்யவும் முயன்றனர் . வீபூதி, லிங்கம் , செயின் எடுப்பது எல்லாம் சாதாரண, அடிமட்ட மாஜிக்குகளே என தோலுரித்துக்காட்டப்பட்டுள்ளது . ஆனாலும் , இவரின் நற்பணிகளுக்காக இவரை அரசாங்கமும் பத்திரிகைகளும் பாராட்டுகின்றன .


வீரப்பன் சந்தனகட்டை கடத்தியவர் . கொச்சையாகப் பேசக்கூடியவர். தன்னை 'பச்சைத்தமிழன்' என்று கூறிக்கொண்டார் . சில முக்கிய நபர்களை கடத்தினார். பணம் வசூல் செய்தவுடன் விடுவித்தார் . திரு.நாகப்பன் மற்றும் இவரை பிடிக்கவந்த காவல்துறையினரைக் கொன்றார் . பண வசூல் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தார் . அதன் மூலமோ மற்றும் காட்டிற்குள் தனியாக வரும் பெண்களிடமோ ஆண்களிடமோ பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் இல்லை . பல வழிகளில் முயற்சித்தும், இவரை காட்டிகொடுக்கவோ கொல்லவோ இவரிடம் உதவிபெற்றதாக சொல்லப்படும் மக்கள் செய்யவில்லை . இவரிடம் உதவிபெற்றதற்காகவும், காவல்துறையினரிடம், காட்டிகொடுக்காத , மேலும், அவர் ஒளிந்திருந்த ஊர்களில் வாழ்ந்த குற்றத்திற்காக பலர் பாலியல் பலாத்காரமும் , சிறைவாசமும் அடைந்தனர் . இவரின் குற்றத்திற்காக , காவற்துறையினாரால் கொல்லப்பட்டார் . இவரைக் கொன்றதற்காக , காவற்துறையினரை அரசாங்கமும், பத்திரிகைகளும் பாராட்டின .

நீதி: சந்தனக்கட்டையைவிட காவிச்சட்டைக்கு மதிப்பு அதிகம்.

பி.கு : தலைப்பை அப்படியேவும் படிக்கலாம் , சொற்களை மாற்றியும் படிக்கலாம் . அது உங்கள் விருப்பம் .

Inspired by : இணைய நாடோடி செல்லா , அல்வாசிட்டி விஜய்

3 comments:

said...

//நீதி: சந்தனக்கட்டையைவிட காவிச்சட்டைக்கு மதிப்பு அதிகம்.
//
இதுதாங்க கலக்கலே.... சும்மா நச் ன்னு இருக்கு

Anonymous said...

1. Saibaba did not kill police but Veerappan killed police...
2. There is no direct information that Saibaba Raped and tortured anyone but Veerappan killed/tortured people (who are against him) also he publically announced the same to threaten other people.
3. Saibaba getting money by people donation but veerappan got money by threaten people life.
4. Saibaba did helped for entire city for water but Veerappan money spend only people who were in his circle.


I donot have connection or beliefs on Saibaba. Also no support or regrets on Veerappan due to tamilan.

These above are simple questions. I am born and lived up in Sathyamangalam (between bannari and sathy)Suburb. We know how bad was all during those periods….

The question you are raised is no way compared between 2 people.

Let me put in this way Karunanidhi and Hitler....

1. Both were in Politics and both got power by utilizing foolishness of people.
2. Hitler & co trying to be conquers all the countries slowly.
Karunanidhi & co trying to be conquers all the wealth of India slowly.
3. Using power, suppresses any opposite opinion
4. Trying to be in power till death.
5. Karunanidhi says all tamil but to become a central minister we need to have Hindi(example Dhyanidhi)...So only Karunanidhi family can learn hindi others are killing tamil annai. To canvas there are too many tamil Koyabells.

Hitler M.Karunanidhi....

said...

நன்றி குழலி ..

அணானி ,

வீரப்பன் குற்றமற்றவர் எனக்கூறவேயில்லை . வீரப்பன் செய்த உதவிகள் , அவர் குற்றங்களை மறைக்கவில்லை . ஆனால் , பாபாவை பற்றி , பேசிப் பாருங்கள் .. அவர் என்னதான் ஏமாற்றினாலும் , அவர் இவ்வளவு செய்கிறாரே போன்ற தொணியில்தான் இருக்கும் .