தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள்

கல்வெட்டு அவர்களின் ஹலோவின் மற்றும் பொங்கல் பதிவுகளை தொடர்ந்து தமிழ் கிறிஸ்தவர்களின் திருவிழாக்களை பற்றி தெரிந்த சிலவற்றை எழுதலாம் என உத்தேசித்து எழுதியுள்ளேன் .


கிறிஸ்துவர்களின் திருவிழாக்களில் கிறிஸ்துமஸ் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில், சான்டா க்ளாசும்,. கிறிஸ்துமஸ் மரமும் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன் என்பது ஒரு புரியாத புதிர்தான் .

ஆனாலும், கிறிஸ்துவ நம்பிக்கையின்படி, கிறிஸ்துமஸைக் காட்டிலும் விசேடமான நாள் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்த நாள். எல்லோருமே பிறக்கிறோம் .. ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி , உயிர்த்த ஒரே ஒருவர் இயேசுதான்..ஆதாலால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி ஈஸ்டர்தான் கிறிஸ்துமஸை விட முக்கியமான நாள்.. இது பொதுவாக ஞாயிறன்று வருவதனாலும் , பல நாடுகளில் பொது விடுமுறை அட்டவணையில் இது இடம் பெறாததாலும், பலருக்கும் ஈஸ்டர் பற்றி தெரிவதில்லை . ஆனால் ஈஸ்டர் ஞாயிருக்கு முன் வரும் வெள்ளியன்று வரும் 'புனித வெள்ளி', பொது விடுமுறை நாள் என்பதால் பலருக்கும் தெரிந்த விழா.. தெரியாதது அது இயேசு இறந்த தினம் என்பது . பல நண்பர்களிடமிருந்து அன்று எனக்கு வாழ்த்து வருவதும் உண்டு .

மற்ற பண்டிகைகள் எல்லாம் ஒரு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்து விடும் . அன்றைய தினங்களில் கண்டிப்பாக வழிபாட்டுக்கு வரவேண்டும் . அந்த நாட்களை 'கடன்(?)திருநாட்கள்' ' என்று சொல்வதுண்டு . பெறும்பாலும் கத்தோலிக்கர் அன்றைய தினம் திருப்பலியில் கலந்துக்கொள்வர் . அதில் முக்கியமான நாள் ஆகஸ்டு 15 அன்று வரும் 'மாதா விண்ணேற்பு' அடைந்த நாள். இயேசுவின் தாய் மேரி , உடலோடும் ஆன்மாவோடும், விண்ணுலகம் சென்றதாக 'கத்தோலிக்கர்'களால் மட்டும் நம்பப்படும் நாள். அன்று இந்திய சுதந்திர தினமென்பதால் . வழிபாட்டில் கன்னிமேரியும், தாய்த்திருநாடும் நினைவுகூறப்படுவர் .

நவம்பர் முதல்தேதியன்று 'புனிதர் நாள்' கொண்டாடப்படும் . இதுவும் ஒரு கடன் திருநாள்தான் . ஒரு நீண்ட வழிபாடு இருக்கும். என்னை போன்றவர்களால் சுரத்தேயின்றி கொண்டாடப்படும் நாள் அது . அமெரிக்காவில் ஹலோவியன் பண்டிகையாக மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைதான் இது என்று நினைக்கிறேன்.

மற்றும் தமிழரின் நன்றித்திருவிழாவான் பொங்கல் பண்டிகை , கத்தோலிக்க தேவாலயங்களில் , முக்கியமாக கிராமப்புறங்களில் , பொங்கல் , மஞ்சு விரட்டு என மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . இதற்கு 'கடன் திருவிழா' என்ற tag இல்லாவிடினும் உற்சாகத்தோடும், உண்மையான மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாக 'பொங்கல்' உள்ளது.

தீபாவளி - தீபத்திருநாளாய்' - 'உலகின் ஒளி இயேசு' என பாவித்து கொண்டாடப்படுவதும் உண்டு .

தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்!!

இவர் ஒரு தீவிர அ.தி.மு.க ஆதரவாளர் ..எம்.ஜி.ஆர் வழியும் ஜெயலலிதா வழியும் நடப்பதுதான் இவர் கொள்கை .. இவரது பேட்டி சமீபத்தில் குமுதத்தில் வந்துள்ளது . (பலமுறை பல பத்திரிகைகளில் இவர் பேட்டி வரும் .. அதில் அவர் அடிக்கடி கூறுவதுதான் இது !!).. Over to kumudam ..

சட்டசபைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்பது போல, இன்று வரை எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவில்லை. கேட்டால், ‘அ.தி.மு.க.வினர் அராஜகத்தை ஏவி விடுவார்கள்’ என்கிறீர்கள். அப்படியென்றால், சட்டசபை உறுப்பினருக்குண்டான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாமே?

‘‘சட்டசபை செத்துவிட்டது’’ என்று கூறி, எம்.ஜி.ஆர். சட்டமன்றத்துக்கே வராமல் இருந்தார். சட்டமன்றத்தில் நான் ‘பட்ஜெட்’ படிக்க எழுந்தபோது, அதைத் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விட்டுப் பிடுங்கச் சொல்லி, கிழித்தெறிந்து என்னையும் தாக்கி விட்டு, பிறகு சபைக்கே ஜெயலலிதா வராமல் இருந்தார். உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடித்து அதற்கு முன்மாதிரி இருந்தால் சொல்லுங்கள், அதன்படி நடக்கிறேன்.

பட்டத்து ராசா

இளையராஜாவை இனிமேல் 'இசைஞானி' என அழைக்கவேண்டுமென்று சொன்னேன் . அந்த சிறப்புப் பட்டம் , அவருடன் ஒட்டிக்கொண்டது . ஊரில் - நாட்டில் - உலகத்தின் மூலை முடுக்குகளில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைவருக்கும், அவர் அன்று முதல் 'இசைஞானி'யாகவே ஆகிவிட்டார் .

அந்த எழுச்சிமிகுந்த விழாவில்தான் நான் கமலுக்குக் 'கலைஞானி' என்ற பட்டமும் சூட்டி மகிழ்ந்தேன் .

இனிமேல் இவர் கவிஞர்(!) கண்ணதாசன் என்றேன் . அன்று அவருக்குக் 'கவிஞர்' என்று நான் சூட்டிய பட்டம்தான் , அவர் மறைகின்ற வரையில் , கவிஞர் என்றாலே. அது கண்ணதாசன் தான் என்கிற அளவுக்கு நிலைத்து நின்றது .

கவிஞர் வாலிக்கு 'காவியக் கவிஞர்' என்ற பட்டத்தைச் சூட்டியதும் நான் தான் .

தம்பி வைரமுத்துவை நான் 'கவிப் பேரரசு' என்று அழைத்ததுதான் , இன்றைக்கும் என்றைக்கும் தமிழர் வாழும் பகுதிகள் எங்கும் நின்று நிலைத்துவிட்ட பெயராக ஆகியுள்ளது .


தமிழுக்கு செந்தமிழ் என்று பட்டம் சூட்டியதும் நான் தான்.

....தொடரும் ....

என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது .

சிங்கப்பூருக்கான இந்திய பாஸ்ப்போர்ட்

இது நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது .. நடந்த நாளும் கொஞ்சம் வித்தியாசமான நாள் தான். 1999 வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி .9/9/99 .. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் மலேஷியா கம்பனி ஒன்றில் வேலை கிடைத்திருந்தது . விசா எடுக்க மலேஷிய ஹைகமிஷன் செல்ல ஆட்டோ எடுத்தேன் . பொதுவாக சென்னையில் , பஸ்ஸில் செல்ல பிடிக்காமல் , ஆட்டோ எடுக்க வசதியுமில்லாமல் , சைக்கிளில் செல்வதுதான் என் வழக்கம் . ஆனால் பாஸ்ப்போர்ட் மற்றும் சில முக்கியமான படிவங்கள் இருந்த நிலையில் ஆட்டோவில் செல்வதே பாதுகாப்பாக தோன்றியது ..

பத்திரிகைகளில் ஆட்டோ சூடு என்றால் என்ன என்று படித்திருந்ததும் , மிடில் க்ளாஸ் புத்தி என்று ஏதோ சொல்வார்களே அதுவும் சேர்ந்து , ஒரு இருபது பைசாவுக்கும் அடுத்த இருபது பைசாவிற்கும் உள்ள கால இடைவெளியை கணக்கிட்டு கொண்டே வந்ததில் , ஆட்டோவில் சூடு வைத்திருந்தது உறுதியாய் தெரிந்தது .. தேர்தல் பிரச்சார காலம் என்பதால் , ஆட்டோ சென்னையை சுற்றியதில் வேறு, மீட்டர் போன்றே B.P யும் எகிற , மலேஷிய ஹைகமிஷனை விசாரித்து சென்றுவிடலாம் என்று எண்ணி , அதன் அருகிலிருக்கும் கல்லூரி வாசலில் (கல்லூரி பெயர் நியாபகம் இல்லை) இறங்கினதும் ஏதோ தோன்ற, என்னுடைய ஃபைலை சோதனை செய்ததில் பாஸ்ப்போர்ட் அங்கே இல்லை ..

அடுத்த வந்த ஆட்டோவை பிடித்து , நான் வந்த ஆட்டோவை பிடிக்கலாம் என்றெண்ணி பார்த்தால் முன்னால் செல்வதோ மூன்று ஆட்டோக்கள் .. மூன்றும் திரும்புவது மூன்று திசைகளில் .. நான் எங்கே ஆட்டோ நம்பரை பார்த்தேன், பார்த்ததெல்லாம் ரேட்டுதான் .

புது பாஸ்ப்போர்ட்டுக்கு அலைந்தது எல்லாம் தனிக்கதை .. இடையில் சிங்கப்பூரிலும் வேலை கிடைத்து , பாஸ்ப்போர்ட் ஆஃபிசரின் நேர்முக விசாரனையின்போது , தெரிவு சிங்கப்பூர் வேலையாகவே இருந்தது .. ஒரு வருட 'validity' மற்றும் சிங்கப்பூர் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் மட்டுமே பாஸ்ப்போர்ட் தரமுடியும் என்ற கண்டிஷனோடு எனக்கு பாஸ்ப்போர்ட் வழங்கப்பட்டது . பார்க்க படம் ..

Image hosted by Photobucket.com

என்னுடைய கேள்வி இதுதான் ? கடவுச்சீட்டு 'இந்திய குடிமகன்' என்ற அடையாள அட்டை இல்லையா? , அது ஒரு பயணப்பத்திரம் மட்டும்தானா? 'சிங்கப்பூர் மட்டுமே எனக்குறிப்பிட்டுள்ளதால் இந்த கேள்வி.. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் ..

கங்குலி.. கருத்து சுதந்திரம்.. பச்சை விளக்கு ....

கருத்து சுதந்திரத்தை பாருங்கப்பா.. கங்குலி சரியா விளையாடலையாம் . இந்தியா மானம் போயிடுச்சாம் .. (என்னமோ இந்தியாவின் கௌரவமும் மானமும் கங்குலி மட்டையிலும், அவர் பந்தில் துப்புற எச்சியிலும் இருக்கிறமாதிரி ) ..அப்படியே மானம் போனாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மானம் அல்லவா போகும் .. வாரிய நிர்வாகிகளுக்கல்லவா சொரனையும் சூடும் இருக்கவேண்டும் ... நம்மவர்களுக்கு வருகிற ஆத்திரத்தை பாருங்கள் .. குஜராத் கலவரத்தினால் வராத ஆத்திரம், சாதி கட்சிகளின் கொட்ட்த்தினால் வராத ஆத்திரம் , தீவிரவாதிகளின் மேல் வராத ஆத்திரம், சரியாக மட்டை அடிக்கவில்லை என மட்டையடித்து ஒரு வெப்சைட் www.ihateganguly.com .. அதிகப்படியாக ஒரு பதிவு போடலாம் (தற்காப்பு ஆட்டம்!!) அதற்குமேலான முக்கியத்துவம் எதற்கு? எங்கேயாவது ஒரு செஞ்சுரி அடித்தால், ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றால் திரும்பவும் அவர் கடவுளாகிவிடுவார் .. இங்குதான் கோயிலும் கட்டுகிறார்கள் செருப்பையும் தூக்குகிறாரகள். என்றுதான் நிதான நடைமுறை வருமோ?


அப்பாடா .. எதோ ஒரு பதிவு போட்டாச்சு.. இன்னும் மூன்று மாதத்திற்கு கவலையில்லை.. பச்சைவிளக்கு எரியும் (என நினைக்கிறேன்)

தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..

என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..

1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?

2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?

3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?

ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!

டிஸ்க்ளைமர் ...

டிஸ்க்ளைமர் ...

அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..
ஆ) தங்கர் நடிகைகளை திட்டினதில் எனக்கு ஒரு வருத்தமுமில்லை .
இ) தஙகர் மன்னிப்பு கேட்டதும் என்னை பாதிக்கவுமில்லை ..
ஈ) பாலியல் தொழிலாளிகளின் மேல் மரியாதை வைத்திருப்போர் , நடிகைகளை அவர் பாலியல் தொழிலாளிகளோடு ஒப்பிட்டதை கண்டித்து கொதித்து எழுந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது .. அவர்கள் தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .


எனக்குள்ள ஒரே வருத்தம்.. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும் தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..

குப்பயிலே மாணிக்கம்..??

முன்னொரு காலத்துல சொன்ன பச்சோந்தி, நாயி, சிங்கம் , கொரங்கு, நரி,கழுதப்புலி கதைகளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ..கணேசன் பதிவிலயும்,குயிலி பதிவிலயும் ஒரு அனானிமசு நண்பர் நம்மல குப்பயிலே கிடக்கிற மாணிக்கம்னு (LLTrashu) சொன்னதால ஒரேதா புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத எழுதறேன் .

முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வச்சுக்கிச்சாம் . முயல் வேகமா முன்னேறி ஓடிக்கிட்டு இருக்கும்போதே ' நாமதான் ரொம்ப வேகமா ஒடுரமே.. நம்மல எங்கே இந்த ஆமை முந்த போகுதுன்னு நினைச்சுக்கிட்டு, அங்கினக்குள்ளயே படுத்து தூங்கிடுச்சாம் .. மெதுவா ஊர்ந்து போன ஆமை வெற்றிக்கோட்டைத் தாண்டி ஜெயிச்சிருச்சாம் ..
நீதி : நாம எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் , எடுத்த செயலை முடிக்குமளவுக்கும் தடம் மாறிடக்கூடாது .

முயல் தன்னோட தப்ப உணர்ந்துச்சாம். அது , ஆமைக்கிட்டே போய் இன்னொருதடவை போட்டிக்கு அழைச்சுச்சாம் . இந்த போட்டியில, முயல் ஓட ஆரம்பிச்சு , எல்லைக்கோட்டைத் தாண்டும் வரை வேற சிந்தனையே இல்லாம , ஜெயிக்கனும்கிற குறிக்கோளோட ஓடி முதல்ல வெற்றிக்கோட்டை சேர்ந்துருச்சாம் .
நீதி : ' நாம செஞ்ச தப்புக்களிலிருந்து பாடம் படிச்சுக்கிட்டு அதை திருத்திக்கிட்டோம்னா வெற்றி நமக்குத்தான்'.

இப்ப ஆமை யோசித்துச்சாம்.. நாம எத்தன தடவ தரையில பந்தயம் வச்சாலும் தோத்துருவோம் . அதனாலே இப்ப தண்ணியில(குளம், ஆறுல இருக்கிற தண்ணிங்க!!) பந்தயம் வைக்கலாம்னு நினைச்சு முயல போட்டிக்கு கூப்பிட்டிச்சாம் .. முயலும் வந்து தண்ணிக்குள்ள நீச்சலடிக்க முடியாமே,தரையிலேயே தவிக்க, ஆமை நீந்தி ஜெயிச்சிருச்சாம் .
நீதி : 'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் , நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்' .

இருவருக்குமுள்ள தனித்திறமையை இருவரும் புரிஞ்சுக்கிட்டு, ரெண்டு பேரும் ஆலோசனை செஞ்சு , தரையிலே பிரயாணம் செய்றப்போ முயல் ஆமையை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும், தண்ணியில நீஞ்சிரப்போ ஆமை முயலை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டு , அப்படியே செஞ்சு சந்தோஷமாக நட்போட இருந்துச்சுங்களாம் ..
நீதி : இதுதாங்க கூட்டுப்பணி (Team work) . ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட திறமையை அங்கீகரிச்சு அதனோட பயனை அனுபவிச்சு, சண்ட போடாம(சாத்தான் வேதம்!!), சந்தோசமாக வாழனும்ங்க ..

ராமதாஸ் செய்த கேவலம்..

ராமதாஸ் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வளவு கேவலமாக சென்றுவிடுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை . அதுவும் இலங்கை மண்ணில் .. இது நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது .. தற்போதுதான் என் கவனத்திற்க்கு வந்தது .இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை..

ராமதாஸ் என்னும் பெயரை வீரர்கள் பட்டியலில் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வாறு ஆகும் என எனக்கு தெரியவில்லை? ஒரு ஈரிலக்க ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை .. தொடக்க ஆட்டக்காரராக எவ்வளவு நம்பிக்கையுடம் மேற்கிந்திய அணி அவரை அனுப்பியது .. 9 பந்துக்களை சந்தித்து 1 ஓட்டம்தான் எடுக்கமுடிந்ததா அந்த ராமதாஸ் ர்யானுக்கு ..இது கேவலமில்லையா? நம்பிக்கை துரோகம் இல்லையா? எத்தனை கோடி இந்தியர்கள் மற்றும் மேற்கிந்திய சகோதரர்களை
ஏமாற்றியிருக்கிறார் . ஒரு 4 இல்லை.. ஒரு 6 இல்லை.. ரன்னும் ஆக குறைந்து. Strike Rate எல்லோரையும் விட குறைவு ...

R Ramdass b Maharoof 1 9 0 0 11.11

சுட்டி இங்கே ...



பின்னூட்டமிடுகிறவர்க்கு ஒரு டெம்ப்லேட் ..

மருத்துவர் மீதான ஊடக வன்முறையை பற்றி ஏற்கவவே இங்கு கூறியுள்ளேன் ..


அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள் என்று சமீபத்தில் 1958யில் என் நண்பர் ரங்காச்சாரியிடம் கூறினது இப்போது நியாபகம் வந்தது . இது என்ன ஹைப்பர்லிங் என்று தெரியவில்லை .


உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 112.75-ஆவது நாளை எட்டியுள்ளது ..

திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...

கனடா வாழ் தமிழர்களின் தமிழுணர்வை பாராட்டியதற்காக பொங்கியெழுந்த முகமூடியின் பதிவிற்கான பின்னூட்டமாக இதனை எழுதுகிறேன் . ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் . கனடாவிலும் அவ்வாறே என எண்ணுகிறேன் .. அவ்வாறு இல்லாதபட்சத்தில் திருமாவின் அறியாமையை சுட்டிக்காட்டலாமே ஒழிய அதில் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை .. இதை கூறியதும் தமிழ்நாட்டு பத்திரிகையில்தான் என்பதால் 'இடம்' என்பதிலும் பிர்ச்சினையில்லை ..கமலின் சிங்கப்பூர் பேட்டிக்கும் , திருமாவின் குமுதம் பேட்டிக்கும் இடம் மிகப்பெரிய வேறுபாடு .. கமலின் புரிதலும் தவறு என்பது சிங்கப்பூரில் சில காலம் வாழ்பவன் என்ற முறையில் கூற முடியும் .

சிங்கப்பூரில் தமிழ் தேசிய மொழியாக இருத்தலும் , தமிழ் வளர்ச்சிக்காக அரசாங்கமும் தமிழார்வலர்களின் பணிகளும் தமிழ் ஊடகங்களின் உச்ச்ரிப்புகளும் பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும் , கமல் எண்ணியிருப்பது போலல்லாமல் பொது மக்களிடையே ஆங்கிலம் கலக்காத தமிழோ, தமிழரிடையே தமிழ் என்ற எண்ணமோ தமிழக தமிழரிடையும் குறைவாகத்தான் உள்ளது .. ஒப்பு நோக்கி தமிழகத்தை குறை கூற வேண்டுமென்றால் அவர் சார்ந்த ஊடகந்தான் மிகத்தகுதியானது . அவர் பினாத்தியது தான் உண்மையென்று அவர் எண்ணியிருந்தால் அதனை அவர் தமிழகத்திலே, குறைந்தபட்சம் அவருடைய விசிலடிச்சான் கும்பல்களிடம் கூறியிருக்கலாம் அல்லது சிங்கப்பூரை புகழ்ந்துமட்டும் பேசியிருக்கலாம். அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .

இதனை விட கொடுமையாக தமிழகமக்களை மாடு மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்) போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .
ராதாரவிக்கு ஓட்டளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது தான் தமிழன் செய்தது ..

அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..

தேசப்பற்று - 8 வரி கவிதை

மசூதி இடித்து தேசமானம் காத்த அத்வானி நமஹ ..
இஸ்லாமியர் குறைத்து இந்தியர் சதவீதம் கூட்டிய மோடி நமஹ ..
இந்தியர் ஒற்றுமைக்காக செங்கல் அனுப்பிய ஜெயலலிதா நமஹ..
தேசத்திற்காக முற்றும் துறந்த உமாபாரதி நமஹ...
மாற்றான் தோட்டத்தின் ஒரே இந்தியன் பெர்ணான்டஸ் நமஹ..
இந்தியர் மானம் காக்கும் வாஜ்பாய் நமஹ..
இந்தியபற்றென்று கட்டுரை வடிக்கும் குருமூர்த்தி நமஹ..
தவிர்த்த மற்றெல்லோரும் - நமஹ நஹி .. நமஹ நஹி ...


8 வரி கவிதைப்போட்டிக்கு ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...


முகமூடியின் செக்கூலரிசம் - 8 வரி கவிதை பதிவிற்கும் இந்த பதிவிற்கும் உண்டு தொடர்பு என கூறிக்கொள்கின்றேன்.

வினை எதிர்வினை

ராமதாஸ் , திருமாவைப்போல் ஊடகத்தாக்குதலுக்குள்ளானோர் எவருமல்லர் என்பது குழலி அவர்களின் விசனம் .. இது உண்மையா..? வேறு எவரும் இவர்களைப் போல விமர்சிக்கப்படவில்லையா என்பதின் மேலோட்டமான என் எண்ணங்கள் ..

இந்திரா காந்தியின் 'எமர்ஜென்சி' காலம் இன்றும் விமர்சிக்கப்படவில்லையா? ராஜீவ் மீதான போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எத்தனை கட்டுரைகள், எத்தனை மேடைப்பேச்சுகள். குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்னரே அவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லையா நாமும் நம் பத்திரிகைகளும் ..

கருணாநிதியின் வாரிசு அரசியலை கேலி செய்யும் செய்திகளை பார்த்ததேயில்லையா நீங்கள் .. வைகோவை கட்சியை விட்டு நீக்கின காலக்கட்டத்தில் கருணாநிதியின்பால் விழுந்த விமர்சனங்கள் எத்தனை? ஊழலின் ஊற்றுக்கண்ணாக கருணாநிதியை கூறுகிறவர்கள் எத்தனை பேர்? .. ஜெ.வின் ஆணவ ஆட்சிக்காகவும், ஊழலுக்காகவும் , ஆடம்பர திருமணத்திற்காகவும் அவர் மேல் விழுந்த விமர்சனங்கள் கருணாநிதி அனுபவித்த விமர்சனங்களை விட குறைந்ததா என்ன?

ஜெவின் ஊழலை எதிர்த்து வைகோ தொடங்கிய நடைபயணம் போயஸ் தோட்டத்தில் நிறைவு பெற்றப்பொது வைகோவுக்கு விழுந்த ஊடக அடிகள் எத்தனை? அவர் தி மு க வுடன் திரும்பவும் கூட்டணி அமைத்துக்கொண்டபோது அவர்க்கு கிடைத்த விமர்சங்கள் மறந்துவிட்டதா?

அத்வானியின் தேர்பயணத்திற்கும் , பாபர் மசூதி இடிப்பிற்கும் பத்திரிகைகளில் விமர்சனம் இல்லையா என்ன? குஜராத் படுகொலைகளுக்கு மோடியின் மேல் விழுந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடக விமர்சனங்கள் எத்தனை ?

ஏன் ரஜினி , விஜய்காந்த் போன்றோரின் திரைப்பட வசனங்களுக்காக அவர்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டதில்லையா என்ன?

மோடியின் குஜராத் படுகொலைகளையோ , மசூதி இடிப்பையோ , வாரிசு , ஆடம்பர, ஊழல் அரசியலையோ நியாபடுத்தவில்லை நான் .. ஒவ்வொருவர் செய்த வினைகளுக்கு தகுந்த எதிர்வினைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள் என்பதே என் கருத்து .

மரம் வெட்டியதும், வாரிசு அரசியலும் , ஆபாச பேச்சுக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது எனறு நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை .. திருமா விடயத்தில் அவரின் தலித் முன்னேற்ற பணிகள் விமர்சிக்கப்படவில்லை(ஆதரிக்கப்படவில்லையெனினும்) .. அவரின் ராஜினாமா பலராலும் பாராட்டவேப்பட்டது .. நான் முன்பே கூறியது போல சிறிதும் முக்கியமும் அவசியமும் இல்லாத திரைப்பட பெயர் மாற்றம் போன்ற அரசியலே விமர்சிக்கப்பட்டது ..ராமதாஸ் , திருமா கூட்டணி குறித்தான விமர்சனங்களும் தி மு க , ம தி மு க கூட்டணி குறித்தான விமர்சனங்களை ஒத்ததே என எண்ணுகிறேன் .

வேண்டுமானால் உங்களுக்காக ராமதாஸுக்கு என்னாலான ஊடகத்தடவல் ..

தமிழ்நாட்டின் நலனுக்காக தன் தாய்மேல் பழி வந்தாலும் பரவாயில்லை என ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நம் அன்பு தலைவர் , தன் மகனை இந்திய நலனுக்காக மந்திரியாக்கி தியாகம் புரிந்தவர் .. தன் வாரிசுகளிடமிருந்து தமிழைக் காப்பாற்ற அவர்களுக்கு ஆங்கில கல்வி கொடுக்குமளவுக்கு தமிழுணர்வு மிக்கவர் .

அந்நியன்

படம் டிபிக்கல் ஷங்கர் பார்முலாவுக்குள் அடங்குகிறது. அநியாயங்களைத் தட்டிக் கேட்க தள்ளப்படும் சாதாரணமான கதாநாயகன், ஆங்காங்கே புகுத்தப்பட்ட கிராபிக்ஸ், கொஞ்சமாய் ரிசர்ச் செய்து சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயமாக ‘கருடபுராணம்’ .அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூடா எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது?

அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே .ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் அம்பியின் காரெக்டரில் நல்ல நகைச்சுவை மற்றும் நறுக் நாட்டு நல சிந்தனைகள். அன்னியனா அம்பியா என்று கேட்டால், அன்னியன் காரெக்டருக்குத் தான் முதல் பரிசு.

இன்னொரு ஹீரோ பீட்டர் ஹெய்ன்! ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை ..குறிப்பாக , கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி. பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.

விவேக் - வாரே வாவ். நீண்ட நாளுக்கப்புறம் ஒரு கலக்கல் காமெடி செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார்.

சதா அழகாயிருக்கிறார். பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.அந்நியனிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும் அந்த சில நிமிடங்களில் சதாவிடமிருந்து அருமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குனர். சதா சாதா..

லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பனன் மட்டுமே யோக்கியமானவன் போல காட்டப்படுவதும், அயோக்கியர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதோர் போன்று சித்தரிக்கப்படுவதும் இயக்குனரின் ஆதிக்க வெறியை நிலைநாட்டும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. சற்றே உற்று நோக்கினீர்களேயானால், சங்கீத அகாடெமி தலைவராக இருக்கும் நீலுவின் பாத்திரம் மட்டும் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்பட்டு, தவறு செய்பவராகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் கூட அன்னியரால் மிரட்டப்படுகிறாரேயொழிய, கொலை செய்யப்படுவதில்லை என்று ஆராய்ந்து நோக்கினால் யாராலும் சுலபமாய் கண்டுபிடிக்க முடியும்.’


பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரில் வாசகர் கேள்விகள் எல்லாம் எழுதுவாரே…அவரது பெயர் கூட படத்தில் ஒரு கதாபாத்திரமாய் உலாவ விட்டிருப்பது, ஷங்கர் டச் தான்.

பின் குறிப்பு:

இந்த விமர்சனத்திற்கான உளவியல் காரணீகளுக்கான காலக்கட்டம் 'அந்நியன்' வெளிவந்த அன்று முதலில் வெளியான விமர்சனத்திலிருந்து , நேற்று இரவு நான் அப்படத்தை பார்த்த பின் நண்பர் படத்தை பற்றிய கருத்தை கேட்கும்போது நான் முழித்த வரையிலான காலக்கட்டம் .

கருத்து உதவி : ஷங்கர் .

தொழில்நுட்ப உதவி : கன்ட்ரோல் சி, கன்ட்ரோல் வி ..

பொது சிவில் சட்டம்

இடஒதுக்கீடு, இரண்டாயிரம் வருடம் வன்கொடுமைகள் அனுபவித்தற்காக தாழ்த்தப்பட்டோர்க்கு வழங்கும் ஒரு சலுகை எனக்கூறும் நம் அரசாங்கங்கள், அந்த சலுகையை கிறிஸ்தவ தலித்களுக்கு வழங்க மறுப்பது எப்படி நீதியாகும்? கிறிஸ்தவருக்குள் சாதியில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் , கிறிஸ்தவ தலித்களும் இரண்டாயிரம் வருடமாக வன்கொடுமையை அனுபவித்தவர்களின் வாரிசுகள்தானே?

'சிறுபான்மையர் சட்டங்களை வைத்து தன் சொத்துக்களை காத்தும், தன் பாக்கெட்டுகளை நிரப்பும் ,தம் அதிகாரங்கள் குறைக்கப்படும் சூழல்களின் மட்டும் பொங்கியெழும் மத குருமார்களும், பணக்காரர்களும் , சாதாரண பொது மக்களின் பிரச்சினைகளின்போது 'மறு கன்னத்தையும்' காட்ட அறிவுரை வழங்கவும் தவறுவதில்லை ..பொது சிவில் சட்டம் பேசும் கட்சிகளும் , இந்த உரிமையை 'பொது சிவில்' சட்டதிற்குள் கொண்டு வருவதே இல்லை .


என்னுடைய முந்தைய பதிவில் இந்த கருத்து பத்தோடு பதினொன்றாக மறைந்துவிட்டது ..அந்த கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பதிவின் நோக்கம் .

வலைப்பதிவில் தமிழ் துரோகம் ..

மறைமுகமாக ஒரு தமிழின துரோகம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது ..இது எத்தனை பேருக்கு புரிந்துள்ளது எனத் தெரியவில்லை.. சொரணை கெட்ட தமிழன் எப்போதும் அப்படித்தான். தன் உரிமை பறிபோவதுகூட தெரியாமல் பராக்கு பார்த்துக்கொண்டிருப்பான் . தனக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைக்கும் வலைப்பதிவாளன் கூட இந்த விடயத்தில் ஏமாந்துதான் போகிறான் .. என்ன செய்வது அவனும் தமிழன் தானே .

நான் சொல்ல வருவது இன்னுமா புரியவில்லை.. தமிழனுக்கு புரியாது !.. பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகளை தெரியவிடாமல் , வலைப்பதிவில்(blogspot) உள்ள தமிழின துரோகிகள் , தமிழ்பெயர்களை ?????? என்று மாற்றும் தொழில்நுட்பத்தை செய்து, எல்லோரையும் ஆங்கிலத்தில் தம் பெயர்களை மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர் . நம் வலைப்பதிவரும் அவர்களின் சூழ்ச்சி தெரியாமல் , பெயர்களை ஆங்கிலத்தின் எழுதும் அவலச்சூழலில் மாட்டிகொண்டுள்ளனர் ..

இதனை கண்டிக்கும் வகையில் , என் பெயரை -L-L-D-a-s-u--..(எழுத்துகளின் மீது தார் அடிக்க முடியாமல் செய்திருக்கும் மைக்ரோசாஃப்டின் தமிழ் துரோகத்தையும் கண்டிக்கிறேன் )..

Image hosted by Photobucket.com

மாற்றியுள்ளேன் ..

பி.கு ...

தார் அடித்து நான் தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கையில் , என்னை தமிழ் வளர்ப்போர் லிஸ்டில் சேர்க்காமல், தன் பெயரிலே ஆங்கிலத்தை கலக்கும் அல்வாசிட்டி ,மற்றும் மாயவரத்தான், இட்லி வடை , பாலா போன்றோரை சேர்த்த தினமலர் போன்ற பார்ப்பண ஏடுகளை கண்டிக்கிறேன் .

பிதாவே எங்களை மன்னியும்

அன்பு சகோதரர்க்குள் சாதி பார்த்து தீண்டாமை வளர்த்து, தேவாலயத்தை பூர்வாஷிரமாக்கியதற்காக ,பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கல்லூரி , பள்ளி சொத்துக்களை காக்க உரிமை குரல் கொடுத்துவிட்டு , ஈராயிர வருஷ கொடுமைகளுக்கு ஆளான தலித்தின் உரிமைகளுக்கு (சாதி எங்களுக்குள் இல்லையென பொய் சொல்லி ) குரல் கொடுக்காத குற்றத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

அன்பை பரப்ப சொன்னவர் நீர் .. அரசியல், கலாச்சார விடயங்களுக்கான மதமாய் மாற்றி , வன்முறையில் செயல்படுவற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

கட்டாய மத மாற்றத்தை நீர் வெறுப்பீர் எனத்தெரிந்தும், சட்டம் கொண்டு வந்தோரை எதிர்த்து அரசியல் நடத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

யார் ஆட்சிக்கு வந்தாலும், மாலையோடு காத்திருக்கும் குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமது வார்த்தைகளை பேசாமல் , அரசியல் தலைவரின் கொ.ப.சே வாக இருந்ததற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் விழாக்களின் நாயகராக நீரில்லாமல், அரசியல் தலைவர்களின் நாயகர்களாக்கி, அவர்களின் நாய் பேச்சுகளுக்கு கைதட்டியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

எங்கள் கூட்டத்தை நாடக குழுவாக்கி , ஊனமுற்றோராய் நடிப்போரை கதாநாயகர்களாக ஆக்கும் எங்கள் அவலங்களுக்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உமக்கு ஏஜண்டுகள் நாங்கள், நாங்கள் ஜெபித்தால்தான் நீர் செவிமடுப்பீர் என ஊரை ஏமாற்றி ,ஜெபிக்க சொல்வோரிடம் , கூலி கேட்கும் ஏஜண்டாக இருப்பதற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

'மருத்துவர் நோயுற்றோர்க்கே' என்று நீர் சொன்னதை மறந்து , எங்கள் கான்வென்டுகளில் படித்த பணக்கார குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் கயமைத்தனத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .

யாருக்கும் தெரியாத மொழி ஒன்றை பேசி இது உமது மொழியென கூறி உம்மை தனிமைப்படுத்திய குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .


பாப் பாடலை எதிர்த்து, அதற்கு சற்றும் குறைவில்லாத 'அல்லேலூயா' நடனம் ஆடி உம்மை கேவலப்படுத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .

உலகம் அழிய தேதி குறித்தமைக்காகவும், தேதியை வெட்கமில்லாமல் மாற்றி திரிந்தமைக்காகவும்,பிதாவே எங்களை மன்னியும் .

நானும் ரஜினியும்: ஒரு ஃப்ளாஷ் பேக்

பள்ளியில் படிக்கும்போது ஆன்டுக்கொருமுறை சினிமா கூட்டி செல்லும் என் அப்பா , ‘ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் ‘ என்ற எண்ணமுடையவராதலால் என்னை ரஜினி படம் பார்க்க அழைத்து கொண்டு போகாததில் வியப்பேதும் இல்லை . ஆதலால் நான் காலேஜ் வருமளவும் ரஜினி படம் பார்த்ததில்லை . ஆனால் அவர் படம் பார்க்கும் முன்னால் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு என் மெட்ராஸ் மாமாவின்
‘இன்ஃபுலன்ஷினால்’ வந்தது . ஏ வி எம்மில் மாப்பிள்ளை ஷூட்டிங் . என் வயது சிறுவன் ஒருவனும்( ஒரு டைரக்டர் பையன் , உம்மனாம் மூஞ்ஜீ .. விஜயாக இருக்குமென்று எனக்கு இப்போது சந்தேகம் .. நாட் ஷுயர்) நானும் நட்பாகி கொன்டு , மற்றவர்களோடு ரஜினிக்காகவும் அமலாவுக்காகவும் வெயிட் பண்ணிகொண்டிருந்தோம் . ரஜினி பைக்கில் ஸ்டையிலாக வருவார் , மேக்-கப் போட்டு கொள்ளமாட்டார் , தலை சீவ மாடார் என ரஜினி ரசிகனான என் நண்பன் சொன்ன வார்தைகளை நம்பி ரஜினியை பைக்கில் எதிர்பார்த்துகொன்டிருக்க, அவர் வந்ததோ காரில் .. முதல் ஏமாற்றம் .. மேக்-கப் போட்டிருந்ததும் , தலை சீவியதும் அடுத்தடுத்த எமாற்றங்கள் . ஏதோ அவரிடம் கை கொடுத்து , சிரிப்பை தனியே வாங்கினாலும் ரஜினிமட்டில் எனக்கு ஏமாற்றம் தான் . ‘சின்ன சின்ன ‘ நடிப்பசைவுகலுக்கும் சுற்றி இருந்தோர் கை தட்டியதும் நடிப்பு ஈஸி என்ற மன நிலையே வந்தது . ‘முதல் இரவு’ காட்சியாக அப்போது கருதப்பட்ட , ரஜினி-அமலா காலேஜ் சந்திப்பு காட்சியும் , ரஜினி- சிவாஜி ராவ் என்ற கமெடியனும் காலேஜ் ஹாஸ்டல் கேட் ஏறி குதிக்கிற ஸீனும் பார்த்துவிட்டு வந்தேன் . (வேறு ஷூட்டிங்கில் சீதாவை பார்க்கும் அவசரத்தில் சீதா அப்பா-அம்மாக்கிடையில் புகுந்ததால் சீதா அப்பா கோபம் கொண்டு திட்டியது தனி கதை) . .

கல்லூரி நாட்களில் ரஜினி படத்தை விடாது பார்த்தாலும் , பிறகு ரஜினியின் பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை, முக்கியமாக தில்லு முல்லு , ஜானி , முள்ளும் மலரும் , நெற்றிக்கன் ரசித்தாலும் மாப்பிள்ளை மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை .

பி . கு : தலைப்பு மட்டும் ஜூ.வி , குமுதம் ,…….. தலைப்புகளின் பாதிப்பு . கொஞ்சம் ஓவர்தான்னு தெரியும் .

சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!

இந்த தலைப்புதான் இந்த செய்தியை படிக்கத்தூண்டியது ..அடுத்த தேர்தலுக்குள் பல வாய்ப்புகளையும் எடை போடும் கட்டத்திற்குள் ஐயா உள்ளதால் , ரஜினியையும் கட்டிப்பிடிக்க ஆயத்தமாகிறார் என்ற எண்ணத்தோடு படிக்கும்போது , ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வாசிக்க நேர்ந்தது .( சுகாதாரத்துறை அமைச்சரை பாராட்டியது அதிர்ச்சி இல்லை!!) .

நுழைவுத்தேர்வை தடை செய்ததால்( இது சரியா என்பது தனி), ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசையை குலுக்கல் முறையில் தெரிவு செய்ய போகிறார்களாம் .. இந்த யோசனையை சொன்ன அதிகாரியை 'தமிழின(?) துரோகி' என ராமதாஸ் சொன்னாலும், 'முட்டாள் அதிகாரி' என்பதே சரி என நினைக்கிறேன் ..

மருத்துவ , பொறியர்துறை மேற்படிப்பு காரணீயாக தமிழ் இல்லாத காரணத்தால் , தமிழை கவனமெடுத்து படிக்கும் உந்துதல் தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்களுக்கே இருப்பதில்லை ..பலர் தமிழை ஒரு பாடமாகவே கூட தேர்வு செய்வதில்லை . தமிழையும் காரணீ பாடமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில், குலுக்கல் முறையை தேர்வு செய்த தமிழக அரசை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக கோரிக்கை விடுத்த முனைவர் ராமதாஸை இந்த விடயத்தில் பாராட்டுகிறேன்.

அடைக்கலராசும் பார்ப்பணீய சூழ்ச்சியும்

நம் வாழுகின்ற இந்த தருணத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சில பெரியோரை பற்றியும், அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட அடிகளையும், பார்ப்பணீயத்தினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் பதிந்து , இருநூறாயிரம் ஆண்டுகட்கு பிறகும் இணையத்தை பார்க்கும் நம் வழித்தோன்றல்களுக்கு , இந்த சூழ்நிலையை படம் பிடித்து காட்டும் புனிதப்பணியை மேற்கொண்டுள்ளேன் .

தமிழகத்தின் புனித பூமியாம் திருச்சியில் , நகரத்தந்தை என அழைக்கப்பட்டவரும் , சுதந்திர போராட்ட வீரருமான திரு லூர்துசாமியின் தவப்புதல்வராக பிறந்தவர் அடைக்கலராசு . சிறுவயதிலே ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உறுதுணையாகவும் இருந்தவர் இவர் . அன்னை இந்திராவின் சோசலிச கொள்கையினால் கவரப்பட்டு , இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சியான காங்கிரசில் இணைத்துக்கொண்டபோது, அன்னை இந்திரா எவ்வளவு மகிழ்ச்சியுற்றார் என்பதை திரு . எஸ் கே சாவ்லா தன் நூலில் விவரித்துள்ளார் .

ஏழைகளுக்கும் கூலி தொழிலாளர்க்கும் வேலை கொடுக்க எத்தனை கட்டடங்களை கட்டினார் , மக்களுக்கு மகிழ்ச்சியுற எத்தனை தியேட்டர்களை திறந்தார்.. ஏன், அவர் 80 அடி கட்-அவுட் தமிழகத்தில் முதன்முதலில் நிறுவியதும் ஏழைகளுக்காகத்தானே என நான் கூறினால் என்னை ஜாதி வெறியன் என ஜல்லியடிக்ககூடிய சாத்திய கூறுகள் இருந்தாலும் , நம் தமிழ் மக்களுக்கு உண்மைகளை உரக்கக்கூற நான் பின்வாங்கவில்லை .

சிங்கப்பூர்க்கு அவர் வருகை அளித்தபோது, அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு மணிநேரத்திலும், தமிழ், தமிழ் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய 'தமிழ்த்தாய்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அவரின் தமிழ்பற்றும் , இலக்கிய இலக்கண அறிவும் உங்களுக்கு விளங்கும் .

அவர் நாடாளுமன்றத்தில் இடியென முழங்கி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் எத்தனை ? அதனையெல்லாம் செய்தியாக வராமல் பார்த்துக்கொண்டன இந்த பார்ப்பண பத்திரிகைகள் .. இவரை விட்டால் , தமிழ்நாட்டை இஸ்ரேலுடன் இணைக்கும் தம்முடைய கனவுக்கு குறுக்குசால் ஓட்டி விடுவார் என பயந்த சோ போன்ற பார்ப்பணகும்பல் , மூப்பனார் என்ற நேர்மைய்ற்றவருடன் கூட்டு சேர்ந்து ஓரம் கட்டியதை மறுக்கமுடியுமா?

பின் குறிப்பு: தலைவர் ஓ.ப(http://lldasu.blogspot.com/2005/05/part-i.html), சோசலிசவாதி அண்ணன் அ.ரா போன்ற தமிழகத்தின் தலை சிறந்தோரைக்கூட அறிமுக படுத்த வேண்டியுள்ள இந்த தமிழ் சூழல் மிகுந்த அலுப்பினை தருகிறது .. நான் இந்த பணியை என் பணிச்சுமைக்குமிடையே செய்ய வேண்டியுள்ளது .. அடுத்து நீதியரசர் தூத்துக்குடி பெரியசாமியை இந்த தமிழ் மக்களுக்கும் , வழித்தோன்ரல்களுக்கும் அறிமுகப்படுத்துவேன் . இந்த கேடுகெட்ட தமிழர்க்காக, அய்யா தமிழ்க்குடிதாங்கியின் பெருமைகளை அலசிய குழலியாரும் (http://kuzhali.blogspot.com/2005/04/1.html) , அண்ணன் தொல். திருமாவை பற்றி மணிக்கூண்டாரும்(http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_111655887144691553.html) எழுதி இந்த திருப்பணியை என்க்கு முன்னரே செய்துள்ளனர் .

விஜயகாந்த் புது கட்சி

சிவாஜி , விஜய ராஜேந்தர் , பாக்யராஜ் வழியில் , கேப்டன் என அறுவருப்பே இல்லாமல், தன்னை வருணித்துக்கொள்ளும் திரு. விஜயகாந்த் அவர்கள் , புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாராம் .

http://thatstamil.indiainfo.com/news/2005/06/01/vijay.html

ரஜினிக்கு 6 தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு இவருக்கு தமிழ்நட்டின் 239 தொகுதிகளிலும் கிடைக்க வாழ்த்துகிறேன் .

பல சினிமா கதாநாயர்களை புறக்கணித்த தமிழ் சமூகம் இந்த 'மகாநடிகனை'யும் புறக்கணிக்கும் . தமிழ் சமுதாயம் சினிமா மாயையில் இல்லை என்பதையும் உலகுக்கு நிரூபிக்கும் .

ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும் - ஒரு அலசல் Part-I

ஒரு கோழையாக முதுகெலும்பு இல்லாதவராக , தமிழக ஊடகங்களால் நடத்தப்படும் ஊடக வன்முறையை எதிர்கொண்டு, ஓ. பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சொல்வது என் கடமையென நினக்கிறேன் . பன்னீர்செல்வத்தை இவ்வாறு தாக்குபவர்கள் க.அன்பழகனை , நெடுஞ்செழியனை, வைகோவை இவ்வாறு சொல்வதில்லையே ஏன் .. சாதிபற்றுதானே என நான் கூறினால் , என்னை சாதி வெறியனாக மட்டையடிக்க கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும் சில உண்மை விடயங்களை கூறுவது என் கடமையென விழைகின்றேன் .

திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் தமிழகத்தின் முதல்வராக முடியும் எனும் துர்பாக்கிய நிலையை முறியடித்து , அரிதாரம் பூசாத, சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் .. சாதீய உணர்ச்சிகளை தூண்டி, கூட்டம் சேர்த்த சாதீய தலைவர்கள் கூட செய்ய முடியாத சாதனைகளை , அமைதி புரட்சியை நடத்திக்காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் . இவரில்லாமல் யார் யாரையோ புரட்சி தலைவர், தலைவி என காவடி தூக்குகிறது தமிழ் சமுதாயம் . ஆடை அவிழ்ப்பில் புரட்சி செய்தவர் தன்னை புரட்சி தலைவியாகவும், அச்சு பிச்சு கவிதை எழுதுபவர் தம்மை கலைஞராகவும், மற்ற உடண்பிறப்புகளை விட சற்றே அதிகம் படித்தவர் பல்கலைகழமாகவும் , அந்த அடையாளங்கள் கூட இல்லாதவர் தன் ஊர் பெயரை இணைத்து ஆர்க்காட்டார் , வாழ்ப்பாடியார் எனவும் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் சூழலில், முதல்வர் பொறுப்பு இருந்தபோதும் பட்ட பெயரகளை பற்றி சற்றொப்ப கூட கவலைப்படாமல் மேல்மக்கள் மேல்மக்களே என ஒவ்வொரு அரசியல்வாதியையும் வெட்கப்படவைத்தவர் அவர் .

அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் .

அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது? நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற பயத்தினால்தானே .

அவர் ஆட்சியிலே நடைபெற்ற கல்வி கொள்கை சீர்திருத்தம் , கவர்னர் பற்றிய டெல்லி மாநாட்டில் அனைவரின் பாரட்டையும் பெற்ற தலைவரின் உரை, கண்ணகி சிலை அகற்ற படுத்தியதால் திணிக்கப்பட்ட போராட்டம் , இந்தியா டுடே போன்ற பார்ப்பணீய ஏடுகள் அவர்க்கு எதிராக் நடத்திய ஊடக வன்முறை போன்றவற்றை அடுத்தடுத்த படிவுகளில் பதிகிறேன்,. நன்றி ..

சிங்கப்பூரில் தமிழ் பட்டப்படிப்பு

இன்றைய வசந்தம் சென்ட்ரலில் வந்த செய்தி தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.. சிங்கப்பூர் மேலான்மை-திறந்தவெளி பல்கலைக்கழகம் (SIM-OUC ) , மதுரை காமராஜர் பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பத்திருக்கிறது. தமிழ் வளர இந்த மாதிரியான ஆக்கபூர்வமான செயல்களில் சிந்திக்காமல் தியேட்டர்களில் தமிழை தேடும் கும்பலை என்னவென்று சொல்வது ?

எந்தவொரு நல்ல நிகழ்ச்சியிலும் நம்மையும் தொடர்பு படுத்திப்பார்ப்பதும் ஒரு சந்தோஷம்தானே .. நான் படித்த பல்கலைக்கழகமும் , நான் சில வருடங்கள் முன்பு வேலை பார்த்த SIM-OUC ம் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பித்திருப்பதும் என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது ... மல்ட்டி லின்குவல் வெப்சைட் என்பதால் பூச்சி பூச்சியான சீன எழுத்துகளோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு தமிழை கையாலும் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தமாகவும் உள்ளது .

சந்திரமுகியும் டாக்டர் பிரகாசும் ..

சந்திரமுகி கதை பல வழிகளில் தெரிந்ததாலும் , சிங்கப்பூரில் டிக்கெட் விலை 15 வெள்ளியாய் இருப்பதாலும் (மற்ற படங்கள் 8 அல்லது 10 வெள்ளிகள்) , தியேட்டர் சென்று படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை . தீபாவளியன்று வசந்தம் சென்ட்ரலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன் .. இணைய தளத்தில் சந்திரமுகியை இலவசமாக கிடைக்கிறது என்றும் அதற்கு காரணம் புலித்தலைவர் பிரபாகரன்(?) முதற்கொன்டு இலங்கை தொழிலதிபர் வரை பல செய்திகள் வர, டாக்டர் பிரகாசின் வலைத்தள முகவரிகளை பிரசுரித்த நம் பத்திரிகைகள் கண்டிப்பாக இதனையும் பிரசுரிப்பார்கள் என தேடினேன்.. சமூக பொறுப்புணர்வோடு(!!) யாரும் இந்த வலைத்தளங்களை பிரசுரிக்கவில்லை .

கார்த்திக் அரசியல்-2

Image hosted by Photobucket.com
நம் தமிழர் கூட்டம் இவ்வாறு நடிகர் பின்னே அலைகிறதே என கவலையாகயிருந்தாலும் , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காத, ஓப்பனிங் கொடுக்கமுடியாத கார்த்திக்குக்கே இவ்வளவு கூட்டம் வரும்போது , விஜயக்காந்த் போன்றோர்க்கு வரும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அவ்ருடைய பலத்தை (?) கண்டு நிம்மதியாய் உள்ளது .

வில்லன் விவேக்

சுனாமி மீட்பு பணியில் விவேக் ஓபராய் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது . அவரின் உடலுழைப்பும், செலவிட்ட காலமும் .... பிரமிப்பாக உள்ளது . இப்படியும் ஒரு மனிதர், அதுவும் சினிமா நடிகர் தற்போது இருப்பாரா என ஆச்சரியமாக உள்ளது . ஒரு ஹிந்தி நடிகர் செய்கிறாரே, லட்ச லட்சமாக தமிழில் சம்பாதித்த தமிழ் நடிகர்கள் ஒன்றும் பெரிதாக செய்யவில்லையே என்ற குரலும் தமிழகத்திலே கேட்கத்தான் செய்கிறது .

21 லட்சம் கொடுத்து விட்டு தன் 'தனி வழி'யில் போவதையோ அல்லது ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதையோ நாம் விமர்சிக்கமுடியாது . அது அவரவர்களின் சொந்த விருப்பம் . ஒவ்வொருவரும் அவரவருடைய பணத்தின், நேரத்தின் முதலாளிகள் .
ஆனால் ,அவர்கள் 'தமிழனுக்காக உயிரை கொடுப்பேன் ' என பஞ்ச் டயலாக் விடும்போது நம் தமிழினம் அவர்களின் பொய் முகத்தை உணர வேண்டும். தமிழக தமிழரை மேல் நாட்டு மேடைகளிலே விமர்சித்துவிட்டு வரும் நடிகர்களுக்கு மாலை போட , அவர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய போட்டி போடும் நம் தமிழினம் இனியாவது உணர்ந்து திருந்துமா? நல்ல வேலை, அவர்களில் எவரும் விவேக்கைப் போல் சேவை செய்யவில்லை . சிறு சிறு அசைவுகளுக்கும் அதிக சம்பளம் வங்கும் இவர்கள் , அதே விகிதப்படி , இந்த சேவைக்கு முதல்வர் நாற்காலி எதிர்பார்ப்பார்கள் .

ஒன்று மட்டும் நிச்சயம் , விஜயக்காந்த் , ரஜினிக்காந்த் போன்றோர்க்கு விவேக் ஒரு கொடூரமான வில்லன் . காமெடி விவேக்கின் கோபமே அதற்கு சாட்சி .

அஞ்சலி

போப் ஜான் பால் , தன்னை துப்பாக்கியால் சுட்ட மெஹ்மெட் அலி அக்கவோடு




Image hosted by Photobucket.com

ஒரு தமிழனின் புலம்பல்கள்

ஐயா .. அம்மா ஆட்சி சரியில்லையா .. எல்லோரையும் சந்தொஷப்படவைக்கிறாங்க.. ஆனா நல்லது செஞ்சு இல்லையா.. ஐயாவை ஜெயில்லெ தள்ளி ஒரு பக்கத்தை சந்தோஷபடுதுறாங்க ..சாமியாரை கைது பண்ணி அடுத்தபக்கத்தை சந்தோஷ படுத்துராங்க.. அரசு ஊழியரை உள்ளே தள்ளி மத்தவுகளை சந்தோஷபடுத்துறாங்க .. எல்லோரும் சந்தொஷமாத்தேன் இருக்கோம் .. ஆனா ஒரு யூஸும் இல்லையா . அவுகளை மாத்தனுமையா? அடுத்தபக்கம் ஐயா அவுக.. என்னையா வித்தியாசம் அம்மாக்கும் ஐயாவுக்கும் ? . அம்மா படப்படன்னு செய்யுறதை ஐயா அடக்கி செய்வாரு . அம்மாக்கு உடன்பிறவா சகோதரி குடும்பமுனா ஐயாக்கு சொந்த குடும்பம் ..என்னையா ஒரு ஆறு வித்தியாசம் கூட இல்ல. வேற ஆளு நல்ல ஆளா நல்ல கச்சியா பாக்கனும்யா . காங்கிரசு காரவுக.. அடுத்தவன் வேட்டிய அவுக்கிறதிலே இருக்கிறாங்கையா… வேட்டி அவுத்துட்டு அறிவாலயத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் டெல்லிக்கும் ரூட்டு போடவே டைம் பத்தலாயா அவுங்களுக்கு ..இதுல எங்கையா நம்மல பத்தி கவலப்பட போறாங்க . பி ஜே பின்னு ஒரு கச்சி .. அவுக கோயிலு கட்டித்தான் நாட்டை முன்னேத்தனுமாம் .. சாமியார் தப்பு பண்ணாலும் அவரு வால் புடிப்போம்னு இருகாங்கே.. வேணாமுயா அவிங்க .. வந்தாங்கயினா தமிழ்நாடும் குசராத்தா மாறிரும் .. சரியா.. இன்னொருத்தரு.. அவரை நினைச்சா துக்கம் தொண்டைய அடைக்குது .. அழுகை வைகோவாய் சாரி.. வைகையாய் வருது.. பாவம்யா .. அவரு.. அவர் தனியா அழட்டும்.. நம்ம அவரை முதல்வராக்கி தொந்தரவு பண்ண வேணாமுயா . ..அப்பறம் இருக்காரு பாருங்க இன்னொரு அய்யா.. குரங்குல இருந்துதான் மனுஷன் பிறந்தான்னு நிரூபிக்க கஷ்டபடுற விஞ்ஞானியா அவரு . அப்புறம் நம்ம கி.சாமி .. அவரு சு. சாமியோட வரும்போதே அவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு தெரியும்யா.. ஆனா இன்னொருத்தர் இருக்காரே ..சாதி கட்சினாலும் பாவபட்ட சனத்துக்குதானே போராடுறரு , எம்மெல்லெ பதவியெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டாருன்னு .. நல்லவராத்தே இருப்பாருன்னு பார்த்தா போட்டாரே ஒரு கூட்டு சேதுராமனோடையும் மருத்துவரோடையும் .. அவரு.............................. வேனாமுயா பொல்லாப்பு .. அப்புறம் ஒருத்தரு பட்செட்டுன்னா படிச்சாரு. நல்ல அறிவாளியா இருப்பாரோன்னு பாத்தா அவரு ரசினி பின்னாடி விசய் பின்னாடியெல்லாம் அலைஞ்சு இப்ப சேலை பின்னாலே ஒளிஞ்சுட்டாரு .. எதோ இன்னும் பட்செட்டெல்லாம் படிச்சிக்கிட்டு நல்ல சீவனந்தான் நடத்துராரு ..ஆனா நம்ம ஊருக்கு என்ன பிரயொசனமுன்னு தெரியலெ
அப்புறம் சாதி கச்சி தலைவருங்க.. சமய கச்சி தலவருங்க .. அவுக எல்லாம் கூட்டணி யரொடவாவது வச்சமா.. எம்மெல்லெ ஆனமா .. முதல்வரை புகழ்ந்துட்டே இஞ்சினியர் காலேஸ் வச்சமான்னு திரியிராங்கே.. அவங்கள பத்தி பேசி என்ன பன்ன? ..
சரி புது ஆளுக யாராவது வருவாக முதல்வராக்கலாம்னு பாத்தா.. ரசினியின்னு சொல்ராக.. விசயகாந்துன்னு சொல்ராக.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. சினிமாக்காரக மட்டும் முதல்வராக தமிழ்நாடென்ன திரைப்படக்கல்லூரியா?

பா.ர வாக துடிக்கும் பா.ரா , ர.ராக்கள் ..

சினிமா நடிகர் புகழ் பாடி புத்தகம் எழுதுவதற்கும் , கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம் . கட் அவுட் கலாச்சாரத்தை கண்டிக்கும் நம்மில் பலர் இதை வரவேற்பது ஏன் ? எழுத்துத்திறமை கட் அவுட் வைப்பவற்கு இல்லாததினாலா?
Image hosted by Photobucket.com
காந்தீய விழுமம் எழுத திறமையிருந்தும் ரஜினி சகாப்தம் எழுதும் புத்திசாலித்தனத்திற்கு வாழ்த்துக்கள். முதன்முதலில் எழுதுவதால் என் தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் .. முதன்முதலாய் விஷம் வைத்தாலும் சொல்லுங்கள்.. எல்லோரும் வாழ்த்துகிறோம் .

கார்த்திக் அரசியல் ..

பஞ்ச் வசனம் பேசாமல் நடிக்கும் நடிகர் என்பதால் கார்த்திக் மேல் நல்ல அபிமானம் எனக்கு உண்டு .
அவராலேயே அவரது சில பழக்கவழக்கங்களை மாற்றமுடியாமல் , ஊரை மாற்ற புறப்பட்டிருக்கும் அவரை நினைத்தால்..
இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பதுதான் முதல்வராவதற்கு தகுதி என நினைத்திருக்கிறாரோ என்னவோ?

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்

'இளையராஜா மகளுக்கும் கமல் மகளுக்கும் தமிழ் தெரியாது ' ..என கேட்க நேரும்போது இளையராஜாவைத்தான் குறைகூறவே எனக்குத்தோன்றும் . அதற்கு காரணம் இளையராஜாவின் மேல் நான் வைத்துள்ள மதிப்பீடுதான் . மதிப்பீடு உடையும்போது கோபம் வருவதுதானே இயற்கை . கமல் பற்றிய செய்தி எனக்கு ஆச்சரியமில்லை ..இங்கே வந்து ஜாதியால் தான் இளையாராஜவை குறைகூறுகிறாய் என்றால் , அது என்னளவில் பிரச்சினை இல்லை ..'ஜாதி' கண்ணாடியை கழற்றிவிட்டு பார் .

திருமாவை பற்றிய என் காமெண்டு தனி மனிதனை பற்றியதுதான்..நான் ஜாதி கண்ணாடி அணியும் பழக்கம் இல்லாததால் ஜாதியை பார்க்கவில்லை ..மேலேயிருந்த படம் பிஜேபியின் மூத்திர விற்பனை பற்றியிருந்திருந்தால், 'மூத்திரம்' குடிப்பதை தொடர்பு படுத்தியிருந்திருப்பேன் . இதனை எல்லோரும் அவ்வாறே பார்த்துள்ளனர், ஒரே ஒரு கண்ணாடி அணிந்திருந்தவர் தவிர .. அவர் எழுதிய 'அணிந்துரைக்கு' அப்புறம் தான்.. கூட்டத்தோடு 'கோவிந்தா'.. அப்படியே பழகிவிட்டது நமக்கு..

கொவிந்தா ஆசாமிகளில் ஒருவர் எனக்கு அறிமுகமானவர்.. அவரின் ஜாதிய வெறியை நானறிவேன்.. 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ' பற்றி என்ன சொல்ல...


நம்மில் எத்தனை பேர் நல்ல வசதியிருந்தும் , நல்ல சூழ்நிலை இருந்தும் , 'இட ஒதுக்கிடு' மூலம் இடம் பிடித்தோம், நம்மால் வாய்ப்பை இழக்கப்போவது நம்மில் வசதியில்லாது ஒருவர்தான் என்ற உணர்வே இல்லாமல் ..? நமக்கு இப்படி குதிக்க என்ன தகுதியுள்ளது என 'கோவிந்தா'க்கள் மனசாட்சி இருந்தால் கேட்டுக்கொள்ளட்டும் ..

'என் ஜாதியினர் மலம் சுமக்கிறார்கள் .. எனக்கு வேலை கொடு '..எனக்கூறுவதில் என்ன நியாயம் சொல்லமுடியும் ?

பிகு ..
நான் எழுதுவது எல்லாவற்றிலும் என் பெயர் இருக்கும். பெயரில்லாமல் நான் எழுதுவதில்லை ..


'ஜாதி சங்கத்திற்குள்' நான் உட்காந்திருப்பது போல் அருவருப்பாய் உள்ளது சில காலமாய் .

தமிழனும் அவன் பெருமைகளும் ..

1)சினிமாவில் நடித்தவன் மட்டுமே நம்மை ஆள தகுதியானவன் என்று உறுதியாக நம்புவனே மறத்தமிழன் .
2)நடிகனை தலைவன் என்று ஏற்று அவன் உளரும் ‘பன்ச் டயலாக்’கை கொள்கை என்று ஏற்கும் மனப்பக்குவம் உள்ளவனே முழுத்தமிழன் .
3) சினிமாக்காரனும் அரசியல்வாதியும் ஒருத்தனுக்கொருத்தன் (அ)அவனுக்கவனே சூட்டிக்கொள்ளும் பட்ட பெயரை ( புரச்சி தலைவி , அறிஞர், கலைஞர் , கேப்டன், சூப்பர் ஸ்டார், டாக்டர் ஐயா …) சொல்லி சொல்லி பெருமை படுபவனே அறத்தமிழன் .
4) தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ரஜினி ராமு, கமல் கருப்பையா.. என வைத்து அலைபவனே சுத்தத்தமிழன் .
5) சுனாமி வந்தாலும் , பாகிஸ்தான் குன்டு போட்டாலும் , தன் குழந்தை பாலுக்கு அழுதாலும் சினிமாக்காரன் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுபவனே
6) தான் விரும்பும் சினிமா நடிகந்தான் மற்ற நடிகனை விட நல்லவன், கொடை வள்ளல் என எங்கிலும் சண்டை போடுபவனே வீரத்தமிழன்.

7)வீட்டுல எந்த மொழியிலாவது பேசிட்டு வெளியே தமில் தமில் என மாருல அடித்து திரிபவனே 'மாடர்ன்' தமிழன் .

ஒட்டகத்தை கட்டிப்போடு

சென்னை சென்றிருந்தபோது , என்னிடம் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் நலம் விசாரித்த அறுபது வயது பெண் , தமிழச்சிதான் என தெரிந்து அதிர்ந்துதான் போனேன் . தமிழரிடையே ஆங்கிலத்தில் பேசினால் காரியமும் எளிதாகும் மரியாதையும் கிடைக்கும் என்பதும் சில அனுபவங்களில் தெரிந்தது . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ளோம் . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ள நாம் ஏன் ஹிந்தி ஒட்டகத்தை தொழுவத்திலிருந்தே விரட்டி விட்டோம்? குதிரையோ ஒட்டகமோ அதற்குரிய இடம் தொழுவம்தானே . ஒட்டகத்தை கூடாரத்திற்குள் விடுபவனும் மூடன் . குதிரையை கூடாரத்திற்குள் வைத்துள்ளோம் என்றெண்ணி , ஒட்டகத்தை கலாயத்தில் கட்டாமல் விரட்டிவிட்டு , பாலைவன பயணத்தை வெறுப்பவனும் மூடனே .
தமிழ் பேசினால் கௌரவம் என்ற மனநிலை தமிழனுக்கு இருந்தால் அவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தமிழுக்கு அழிவில்லை. தமிழ் பேச கூச்சப்படுபவனுக்கு , ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியவேண்டியதில்லை சைகை மொழியே போதும், தமிழை அழிக்க. விரட்ட வேண்டியது ஹிந்தியையோ ஆங்கிலத்தையோ இல்லை, தமிழரின் மனநிலையைத்தான் .
வட இந்தியர் தமிழ் கற்காத போது நாம் ஹிந்தி கற்பது 'இளிச்சவாய்த்தனம்' என்பது , மொழியை ஊடகமாக பார்க்காமல் , மரியாதையை அதனுடன் இணைத்து பார்க்கும் போக்குதான். அவர்கள் தமிழ் கற்காமல் இருப்பது அவர்கள் இழப்புதான் . அதனால் அவர்கள் சில வாய்ப்புகளை இழக்கிறார்கள் . அதனால் நானும் சில வாய்ப்புகளை இழப்பேன் என்பது புத்திசாலித்தனம் இல்லையே . விரும்புகிறோமோ இல்லையோ ஹிந்தி பெரும்பான்மையான மாநிலங்களில் புரியப்படும் மொழியாக உள்ளது . அதனால் தான் அதை கற்பது தெலுங்கு , கொரிய மொழிகளை படிப்பதை விட புத்திசாலித்தனம் .
நான் ஹிந்தி வழி கல்வியை ஆதரிக்கவில்லை. அறிவியலை , வரலாறை நாம் நம் தமிழிலே கற்கலாம் .. அல்ல .. கற்கத்தான் வேண்டும் . ஹிந்தியை அதற்குரிய இடத்தில் முன்றாவது மொழியாக வைப்பதில் தவறில்லையே .ஹிந்தியை மூன்றாம் மொழியாக உள்ள கர்னாடக்கத்திலோ கேரளாவிலோ மொழிகள் அழிந்தாவிட்டது? அங்கே இலக்கியம் வளரவில்லையா? ஹிந்தி மட்டுமே நம் வளர்ச்சிக்கு தேவை என்று நான் சொல்லவில்லை . நம்முடைய திறமைகளால் இமயம் அளவு நாம் முன்னேறியிருந்தாலும் , ஹிந்தியும் தெரிந்திருந்தால் ஒரு இன்ச் அளவு அதிகமாக நாம் முன்னேறியிருப்போமே?
எனக்கு ஆயிரம் வழிகள் உள்ளது என அந்த ஆயிரம் வழிகளில் ஒன்றில் நுழைந்த அதிர்ஷ்டசாலிகளே , நான் பேசுவது அடுத்த ஆயிரத்தி ஒன்றாவது வழி பற்றி . நம்மை போல ஆயிரத்தில் ஒரு வழியில்கூட நுழைய முடியாதவனுக்காக , ஆயிரத்தியோராவது வழிக்காக , படித்தால் நஷ்டமில்லாத, அந்த ஹிந்தியை படித்தால் என்ன.?. நம்மவர்க்குத்தானே ‘ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடும்’ சிந்தனை இருந்தது .

நமக்கு தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசமும் தெரியவில்லை .மதத்திற்கும் மடத்திற்குமுள்ள வித்தியாசமும் தெரியவில்லை . மொழிக்கும் மரியாதைக்கும் சம்பதந்தமில்லை என்பதும் தெரியவில்லை .
நம்மை சுய இன்பத்தில் திலைக்க விட்டுவிட்டு ‘அவர்கள்’ போகிற பாதையை பார்த்தும் நாம் உணரவில்லையே?

முடியுமா முடியாதா ? (சிங்லீஷ் ..)

நாம் புது இடத்திற்கு வரும்போது , புதிய மொழி மற்றும் வட்டார வழக்கு மொழியினாலும் நாம் படும் மற்றும் படுத்தும் அவஸ்தைகளை நினைப்பதே ஒரு சுகம்தான் . சிங்கப்பூரில் உள்ள வட்டார வழக்கு ஆங்கிலம்- சிங்லிஷ்

நான் வந்த புதிதில் , என் சூபர்வைசர் 'Add a row' என்று கூற நான் ஒரு 'Table row' வை சேர்த்தேன் . அவர் டெண்ஷனாகி 'No I want to add a row' .. அதை தானே நான் செய்துள்ளேன் ...அவர் திருப்பி திருப்பி அதையே சொல்ல நான் புரியாமல் விழிக்க, நொந்தவராக, 'row – R O L E ' என கூற.. அப்பாடா ..

'Can' என்ற ஒரு சொல்லுக்கு Do you understand? ' , 'Can you do this?' ,'Is it enough?', 'Are you Ok?' 'Is it OK?'… என பல அர்த்தங்கள் இங்கு உண்டு . "can or canno(t)?' இந்த வார்த்தையைக் கேட்காமல் சிங்கப்பூரில் ஒருநாள் கூட இருக்கமுடியாது . 'Can also can . Cannot also can' என்ற சொற்றொடரையும் அடிக்கடி கேட்கலாம் .ஒருமுறை , புதிதாக திருமணமாகி வந்தநண்பரின் மனைவி தேங்காய் தூள் வாங்கும்போது , கடைகாரர் 'இது போதுமா?' என்ற அர்த்தத்தில் "Can?' என , நண்பரின் மனைவி , 'டப்பா'(Can-Container) என புரிந்து கொன்டு 'கேனில் வேண்டாம் . பாக்கெட்டில் தாருங்கள்' என சொல்ல அங்கு ஒரே கன்ஃப்யூஷன் , நாங்கள் இடையில் புகுந்து அவர் பாஷையில் 'Ca..n' என சொல்லவும்தான் அவர் அடங்கினார் .

சீன நண்பர் '10 மணிக்கு ஆஃபிஸ் வந்துவிடுவேன்' என்பதற்கு கூறியது "I come to office 10'oclock (al)ready" .

ஒரு பங்களா(Bangladeshi) ஊழியர் 'கடுமையான வெயிலாய் உள்ளது' என்பதற்கு கூறியது "many many sun coming ' .

நானும் மற்றவர்கள் அவரவர் மொழியில் வலைப்பூக்கள் எழுத என்னாலான உதவியை
செய்துள்ளேன். மலையாளி நண்பர்களிடம் அவர்கள் மாதிரி ஆங்கிலம் -கோஃபி , சோ(saw) - பேச முயன்று நான் சொன்னது 'ஐ சோ ஹிம் இன் த கோர்டன்' - (I saw him in the garden).

ஒரு தெலுங்கு நண்பன் "What did you bring for lunch?' என கேட்க நான் சொன்னது 'Rice and garbage' ..சொல்ல நினைத்தது 'rice and cabbage' .

டெல்லியில் , என்னுடைய கிழிந்த சட்டையை தைக்க டெய்லரிடம் செல்லும்போது , நான் ஹிந்தி பண்டிட் என நினைத்திருந்த நண்பனை , உதவிக்கு அழைத்து சென்றிருந்தேன் . அவன் டெய்லரிடம் அதே கலர் நூலில் தைக்க அறிவுறுத்தி சொன்னது 'Brown நூல் கரோ' . (கரோ- செய்)


நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு வந்த ஒரு forward mail .

This is funny......even an Englishman could not concoct sentences using numeric, which is exclusive only to Singaporeans .

Lim Ah Lek was asked to make a sentence using 1,2,3,4,5,6,7,8,9 and 10. Not only did he do it 1 to 10, he did it again from 10 back to 1. This is what he came up with......

"1 day I go 2 climb up a 3 outside a house to peep. But couple saw me, so I panic and 4 down. The man rush out and wanted to 5 with me. I run until I fall 6 and throw up. So I go into 7 eleven and grab some 8 to throw at him.Then I took a 9 and try to stab him. 10 God he run away. So, I put the 9 back and pay for the 8 and left 7 eleven. Next day, I call my boss and say I am 6. He said 5, tomorrow also no need to come back 4 work He also ask me to climb a 3 and jump down. I don't understand, I so nice 2 him but I don't know what he 1".

அதுசரி கடைசியாக ஒரு கேள்வி , எத்தனை பேர் என்னைப் போல 'Supervisor' யை
'சூப்ரவைஸர்' என கூறி நாக்கை கடித்துக்கொள்கிறீர்கள் ?

அடையாளம்

பத்தாண்டுகளுக்கு முன்னால் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு நேர்முகத் தேர்வுக்காக போபால் சென்றிருந்தேன் . அந்த நேர்முகத்தேர்வு இரண்டு, மூன்று நாட்களுக்கும் மேல் நடக்க இருப்பதாக தெரிந்தது . இதை தத்தம் வீட்டிற்க்கு தந்தி அனுப்பி தெரியப்படுத்த, நானும் , வந்த இடத்தில் நட்பாகிய தமிழ் நண்பனும் போஸ்ட் ஆஃபிஸ் செல்ல முடிவெடுத்தோம். போஸ்ட் ஆஃபிஸ் எங்கே என ஆங்கிலத்திலும், சைகையிலும் ரோட்டோரம் சென்றவர்களிடம் கேட்டோம் . யாருக்கும் புரியவில்லை . போஸ்ட் ஆஃபிஸ் என்ற ஆங்கிலமே தெரியாதது ஆச்சரியம்தான் . உண்மையிலேயே புரியவில்லையா அல்லது ‘தார்’ அடித்ததற்காக பழி வங்கினார்களா என்றும் தெறியவில்லை.(அண்ணாத்துரையின் , பெரிய துளையான ஆங்கிலத்தால் இந்த சிறு பூனைக்கு அங்கு ஒரு பயனுமில்லை) . சோர்வோடு நாங்கள் நடக்கையில் , கொஞ்ச தூரத்தில் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டியிருந்தது தெரிந்தது . நாங்கள் ஒரு முடிவோடு, மகிழ்ச்சியாக, வேகமாக சென்று பார்த்தோம் . ஆம்.. அது தமிழர் பகுதிதான் ....

காவிரி காமெடி

ஒரு ஃப்ளாஷ் பேக் .. கபிணி அணைகட்டுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு ஒருபுறம். …ஜே ஜே உண்ணாவிரதம் இருந்து ‘காவிரி கொண்ட கலைத்தாய்’ என்ற பட்டம் வாங்கியதும், வாழப்பாடி ராஜிநாமா செய்து அம்மாவின் அருளாசி பெற்ற கூத்துக்கள் என அரசியல்வாதிகள் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க .. இரு வருடங்கள் முன்னால் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என சினிமாக்காரர்கள் பண்ணிய கூத்து இருக்கே..(அது சரி .. சினிமாவையும் தமிழக அரசியலையும் பிரிக்க முடியுமா என்ன?)
கன்னட நடிகர்கள் தமிழ் படங்கள் பெங்கலூரில் ஓடுகிற வெறுப்பில் , ராஜ்குமார் ( பாபா படம் மட்டும் ரிலீஸ் பண்ண ரஜினி இவர் காலில் விழுந்தது கவனத்துக்கு உரியது) தலைமையில் ஊர்வலம் போனதில் ஆரம்பித்த காமெடி , தமிழக சினிமாக்காரர்களால் (அரசியல்வாதிகளின் இயக்கத்தில்) , இனிதே நடந்து , காவிரி பிரச்சினையே , அதில் மறைந்து போய் விட்டது .
முதலில் , கன்னட நடிகர்கள் தமிழ் படங்களை எதிப்பதால் வந்த வெறுப்பினாலும் , தமிழ் சமுதாயம் கேள்வி (தமிழ் சமுதாயம் தீர்வுகளை சினிமாக்காரர்களிடமே கேட்டு பழகி போய்விட்டது ) கேட்குமே என்றுதான் நெய்வேலி போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் . ரஜினி, கர்நாடகத்திலுள்ள தன் சொத்துகளுக்கு ஆபத்து வரும் என்ற பயத்தினாலோ , பாபா படத்திற்க்கு பங்கம் வரும் என்ற எண்ணத்தினாலோ அல்லது உண்மையான சகோதர பாசத்தினாலோ இதை எதிர்க்க இந்த காமெடியில் சூடு பிடித்துவிட்டது .
ரஜினியை ‘தமிழின துரோகி ‘ என கூறி ஓரம் கட்டலாம் என்ற அம்மாவின் ப்ளான் ஒர்க்-அவுட் ஆக நெய்வேலி போராட்டம் – கமல் சிம்ரன் காதல், ராஜேந்தர் கொதிப்பு , விஜய்க்காந்தின் கூட்டம் சேர்ப்பு, அதனால் சரத்தின் கொதிப்பு, ஸன் - ஜே ஜே டீவீக்கள் சண்டை , பாரதிராஜாவின் ‘க(த)ன்னி ‘ பேச்சு என, தமிழ் சினிமாவில்கூட காண கிடைக்காத சுவாரஷ்யமான மசாலாக்களோடு - முடிந்தது . ரஜினி அவுட்…ரஜினி ரசிகர்கள் ரஜினி கொடும்பாவி எரிப்பதாக செய்தி ..இமேஜ் போய் விட்டதாக ஒரு மாயை. என்ன செய்வது ? இமேஜையும் காப்பாற்ற வேண்டும் , சகோதரர்கள் மற்றும் ராஜ்குமாரிடம் கெட்ட பெயரும் வாங்க கூடாது .. என்ன செய்யலாம்? உண்ணாவிரதம் இரு ..கூட்டம் சேர்..பிரச்சினையை திசை திருப்பு .. நடக்கவே நடக்காத, நடந்தாலும் , இப்போ பசியை தீர்க்க உதவாத நதி இணைப்பை பேசு .. அதற்கு ஒரு கோடி என சொல்லி நல்ல பேர் வாங்கு ..என அந்த உண்ணாவிரத கூத்தும் முடிந்தது .
இதற்கிடையில் நதிநீர் இணைப்புக்காக ரஜினி டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று ஏதோ ‘கங்கை கொண்டான்’ , ‘கடாரம் கொண்டான்’ என்ற ரீதியில் பேசப்பட்டு , ஆனால் அவர் இமயமலை சென்று திரும்பும்போது , 30 வருஷ தன் பேரான ‘ரஜினி’ யை மறந்து ‘இந்த விஜயகாந்த் நினைத்தால் ..’ என்று பன்ச் டயலாக் விட்டது தனி காமெடி ட்ராக் .
ஒன்றரை ஆண்டுகள் கழிந்து , தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ‘அவுட்கோயிங்’ பிரதமரிடம் பேசியதோடு , ராமதாஸ் , சந்திரமுகி , பொண்ணு கல்யாணம் என்று போய்விட்டார் . அரசியல்வாதிகள் வழக்கம் போல அடுத்த தேர்தல் மற்றும் சண்டைகளில் இறந்கி விட்டார்கள் , பத்திரிக்கைகள் ஜெயலெக்ஷ்மி , செரீனா என்று அடுத்த ஸ்கூப் தேடி போய்விட்டன .. நாமும் நல்ல ஒரு காமெடி பார்த்த திருப்தியில் சங்கராச்சியார் ஷோ பார்த்து கொண்டிருக்கிறோம் .
இந்த போட்டியில் ஜே ஜே ஜெயித்தாரா? கருணாநிதி ஜெயித்தாரா ? ரஜினி ஜெயித்தாரா ? பாரதிராஜா , விஜயகாந்த் ஜெயித்தார்களா? அல்லது கன்னட சினிமா கூட்டம் ஜெயித்ததா? என உறுதியாக சொல்ல முடியாது . ஒன்று மட்டும் உறுதி .. ஜெயித்தது விவசாயிகள் அல்ல.. நடந்ததும் காவிரி போராட்டம் அல்ல.

இராஜேந்திர சோழன்

அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராஜேந்திர சோழன்.

இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராஜேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, ஜாவா , போர்னியோ , பிலிப்பைன்ஸ் , பார்மோஸா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . 3000 KM க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை .ஜூலியஸ் சீஸர் , அலெக்ஸான்டர் , தாமூர் , செங்கிஸ்கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .

ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராஜேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை இராஜேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

" அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி
சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய
கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடும்
அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,
ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .."

என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராஜேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை . கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான் .


நன்றி .(இதயம் - 1/6/1999 )தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் - முனைவர் .இ.ஜே. சுந்தர் .


பின்குறிப்பு :

'தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன்' என்ற புத்தகத்தை படித்தவுடன் , இந்த வரலாற்று செய்திகளை, உலகிற்கு ...அல்ல..அல்ல.. இந்தியாவிற்கு... அல்ல.. தமிழகத்து தமிழர்க்கு கூட தெரியப்படுத்த இந்த தமிழ் காப்பார்கள் ஒரு அடி கூட எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் copyright -ட்டைக் கூடப் பற்றி கவலைப்ப்டாமல் (ஆசிரியர் மன்னிக்கவும்) எழுதியது. இதில் ஏதேனும் குறை இருந்தால் சுருங்க சொல்லுகிறேன் பேர்வழி என்று நான் சுருக்கியதில் உள்ள குறையாக இருக்கும் .

தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் ?- ஒவ்வொரு சாமான்யத் தமிழனும் படிக்கவேண்டிய புத்தகம் ..





ராமதாசுக்கு ஒரு ஸ்கோப் .

சூப்பர் ஸ்டார் , மெகா ஸ்டார் , கேப்டன் என்னும் பட்ட பெயர்களை தமிழில் (சூப்பர்க்கு தமிழ் இன்னாபா?) மாற்ற போராடி தமிழை காக்கலாம்

கமலுக்கு ஒரு Suggestion

உங்கள் அடுத்த படத்துக்கு ‘திரு . ராமகிருஷ்ண லீலை‘ என பேர் வைக்கலாம் .

நிறைவேறுமா?

தமிழர்கள் திறமையானவர்கள் , படிப்பாளிகள் , தன்முனைப்பு கொண்டோர் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை . ஆனால் நாம் ‘அரசியல் முட்டாள்கள்’ என்ற வருத்தமும் உள்ளது . படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? எதிர்கால முதல்வர்களாக எதிர்பார்க்கபடுவோரும் ரஜினி , விஜய்காந்த் என்று சினிமாக்காரர்கள் கூட்டமாக உள்ளது ஏன்? சினிமா முதல்வர்களிடமிருந்தும் ஜாதி கட்சி தலைவர்களிடமிருந்தும் நாம் எப்போது நம்மை விடுதலை ஆக்கி கொள்வோம் ? நாம் ‘பொறாமை’ கொள்ளக்கூடிய அளவுக்கு சினிமா ஆசை கொண்ட நம் சகோதரர்கள் தெலுகர் கூட என்.டி.ஆரோடு சினிமா முதல்வர்களை முடித்துக்கொண்டுள்ளனர் .
எனக்கு ஒரு கனவு உண்டு . நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் . நடக்குமா ?

தமிழும் திருமாவளவனும்

தமிழ் வளர திருமா தமிழில் கணிணி மென்பொருள், தமிழ் OS , தமிழ் SMS செய்ய என்ன செய்வது என்று பேசினால் பாராட்டலாம். அவர் என்றைக்காவது அந்த முயற்சி செய்வோரை பாராட்டியது உண்டா? முயற்சி செய்வோரின் பெயர் தெரியுமா அவர்க்கு ?தமிழ் வளர்க்க இந்த முறை உள்ளது என்றாவது தெரியுமா?

தமிழை theater- ல் மட்டும் தேடுவது தமிழனுக்கு வெட்கம் . ஏன் நாம் முதல்வர்களையும் , தமிழையும் Theater-ல் தேடுகிறோம்.

அது சரி. ஏன் உங்கள் திருமா. Sun TV பேர் மாற்ற சொல்லவில்லை . Sun என்ன தமிழா?

http://www.vikatan.com/av/2005/feb/13022005/av0102.asp

'தமிழில் பேசுங்கள் ... சினிமா தலைப்புகளை நாங்கள் மாற்றச் சொல்வதையும் ஏதோ பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல ...' . இது தமிழ் காவலர் திருமா பேசிய வசனங்கள். ...Cinema , Publicity , Stunt இவை தமிழ் இல்லை என யாராவது அவரிடம் சொல்லுங்கள் ..


G K Mani ஜே ஜே விடம் வாங்கிய அடிகள் போதுமா?

தமிழை வளர்க்கும் முறைகள் ..

1)ஹிந்திக்கு தார் ஊற்றினால் தமிழ் தானே வளறும் .

2)தமிழ் வளர்த்தது , வளர்ப்பது சினிமாக்காரன் மட்டுமே என்று நம்ப வேண்டும் .

3)தமிழர்கள் =(தொண்டர்கள்+ ரசிகர்கள்) ‘தமில் வாள்க’..’அலிவது நாமாகிலும் வாள்வது தமிலாகட்டும்’ என்று கத்தினால் தமிழ் வளரும் .

4) அச்சு பிச்சு என்று கட்சி பத்திரிக்கையில் கவிதை எழுதுகிறவனுக்கு ‘முத்தமிழ் காவலன்’..என பட்டம் கொடுக்க வேண்டும் .

5) ‘தமிழர் வாழ…..’ ஐயோ நினைத்தாலே தமிழ் அழிந்துவிடும் . எனவே ‘தமிழர் முன்னேற்றம்’ என்ற கெட்ட வார்த்தை மட்டும் கனவிலும் நினைக்க கூடாது .

பின் குறிப்பு ; தமிழ் வளர்ப்பவன் தன் பிள்ளைக்கும் , பேரனுக்கும் – ஹிந்தி சொல்லி கொடுக்க வேன்டும்.. அப்படியென்றால்தான் அவன் டெல்லியில் மந்திரி ஆகும் போது முக்கிய இடம் கொடுக்க முடியும் .. மற்றும் தமிழ் வளர்ப்பவன் தன்னோட கம்பனிக்கு இங்கிலிஷ்-லதான் பேர் வைக்கனும் … சன் , மிஷன் மாதிரி ….

தொடங்குகிறேன்...

இது எனது முதல் போஸ்ட் . எனது எண்ணங்களையும் , கோபங்களையும் எழுத நினைக்கிறேன் . இது எனது கையாலகத்தினாலா என்னவோ? இந்த எண்ணங்கள் தொடரும் என எண்ணுகிறேன் .. விரும்புகிறேன் ..