பா.ர வாக துடிக்கும் பா.ரா , ர.ராக்கள் ..

சினிமா நடிகர் புகழ் பாடி புத்தகம் எழுதுவதற்கும் , கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம் . கட் அவுட் கலாச்சாரத்தை கண்டிக்கும் நம்மில் பலர் இதை வரவேற்பது ஏன் ? எழுத்துத்திறமை கட் அவுட் வைப்பவற்கு இல்லாததினாலா?
Image hosted by Photobucket.com
காந்தீய விழுமம் எழுத திறமையிருந்தும் ரஜினி சகாப்தம் எழுதும் புத்திசாலித்தனத்திற்கு வாழ்த்துக்கள். முதன்முதலில் எழுதுவதால் என் தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் .. முதன்முதலாய் விஷம் வைத்தாலும் சொல்லுங்கள்.. எல்லோரும் வாழ்த்துகிறோம் .

5 comments:

said...

அதில் ரஜினியின் புகழ் பாடி மட்டுமே எழுதப்பட்டிருக்கும் என்று எப்படி சொல்கிறீர்கள் தாஸ்?! எப்போதும் 'ரஜினி' ராம்கியாக உலவும் நண்பர் அந்த புத்தகத்திற்காக 'ஜெ. ராம்கி' என்று மாறியிருக்கிறார் தெரியுமா? (ஜெயலலிதா ராம்கி அல்ல!) நண்பர் ராம்கியின் எழுத்து திறன் குறித்து பலருக்கும் ரொம்ப நல்ல அபிப்ராயம் உண்டு. நிச்சயமாக அவர் ரஜினியை வித்தியாசமான கோணத்தில் தான் பார்த்திருப்பார் என்பது திண்ணம்..! பொறுத்திருங்கள்!!

said...

Das,
Let us wait and see, how ramki's book is written. Pl. do not pass judgement before trial :-)
enRenRum anbudan
BALA

said...

// கட் அவுட் கலாச்சாரத்தை கண்டிக்கும் நம்மில் பலர் இதை வரவேற்பது ஏன் ? எழுத்துத்திறமை கட் அவுட் வைப்பவற்கு இல்லாததினாலா? //
கட் அவுட் கலாச்சாரத்தை கண்டித்தாலும் ,கட் அவுட்டை நேர்த்தியாக வரைந்த ஓவியரின் திறமையை பாராட்டுவதில் ஒன்றும் தவறில்லை.

said...

எனக்குக் கூட அதாங்க ஆதங்கம் .. நல்ல ஓவியர் ..கட் அவுட் வைக்கிறாரேன்னு ..

said...

எனக்குக் கூட அதாங்க ஆதங்கம் .. நல்ல ஓவியர் ..கட் அவுட் வைக்கிறாரேன்னு ..