நிறைவேறுமா?

தமிழர்கள் திறமையானவர்கள் , படிப்பாளிகள் , தன்முனைப்பு கொண்டோர் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை . ஆனால் நாம் ‘அரசியல் முட்டாள்கள்’ என்ற வருத்தமும் உள்ளது . படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? எதிர்கால முதல்வர்களாக எதிர்பார்க்கபடுவோரும் ரஜினி , விஜய்காந்த் என்று சினிமாக்காரர்கள் கூட்டமாக உள்ளது ஏன்? சினிமா முதல்வர்களிடமிருந்தும் ஜாதி கட்சி தலைவர்களிடமிருந்தும் நாம் எப்போது நம்மை விடுதலை ஆக்கி கொள்வோம் ? நாம் ‘பொறாமை’ கொள்ளக்கூடிய அளவுக்கு சினிமா ஆசை கொண்ட நம் சகோதரர்கள் தெலுகர் கூட என்.டி.ஆரோடு சினிமா முதல்வர்களை முடித்துக்கொண்டுள்ளனர் .
எனக்கு ஒரு கனவு உண்டு . நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் . நடக்குமா ?

5 comments:

said...

வாங்க... லா.ல தாசு,

இங்கேயும் வந்துட்டீங்களா? என்னை ஞாபகம் இருக்குதா?

said...

உங்களை தெரியாதா என்ன? உங்கள் மூலமாகத்தான் எனக்கு blogspot-ம் தமிழ்மணமும் அறிமுகம் .

உங்கள் blogspot& காந்தீய விழுமியங்கள் ன் நான் regular வாசகன் . Tsunami -ல் உங்கள் பணி பாரட்டுக்குறியது..

said...

// படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? //

You have a good point. Thanks for making me to think about the reasons for the same.

said...

Thank you PK Sivakumar for giving your comments here. Expecting your article in this topic

said...

// படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? //

நல்லவங்க எத்தனை பேரு அரசியலில் ஈடுபட விரும்பறாங்க?

அட எத்தனை பேரு ஒழுங்கா ஓட்டு போடுறாங்க...?

ஒவ்வொரு முறையும் என் தொகுதியில் நிற்பவர்களில் யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியிருப்பதை (அவர்கள் தோற்றுப் போவது தனிக்கதை - என் ராசி அப்படி) அவலம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?

நல்லவங்க அரசியலுக்கு வந்தாத்தானே என்னை போலுள்ளவங்க அவங்களுக்கு வாக்களிக்க முடியும் ?