குப்பயிலே மாணிக்கம்..??

முன்னொரு காலத்துல சொன்ன பச்சோந்தி, நாயி, சிங்கம் , கொரங்கு, நரி,கழுதப்புலி கதைகளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ..கணேசன் பதிவிலயும்,குயிலி பதிவிலயும் ஒரு அனானிமசு நண்பர் நம்மல குப்பயிலே கிடக்கிற மாணிக்கம்னு (LLTrashu) சொன்னதால ஒரேதா புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத எழுதறேன் .

முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வச்சுக்கிச்சாம் . முயல் வேகமா முன்னேறி ஓடிக்கிட்டு இருக்கும்போதே ' நாமதான் ரொம்ப வேகமா ஒடுரமே.. நம்மல எங்கே இந்த ஆமை முந்த போகுதுன்னு நினைச்சுக்கிட்டு, அங்கினக்குள்ளயே படுத்து தூங்கிடுச்சாம் .. மெதுவா ஊர்ந்து போன ஆமை வெற்றிக்கோட்டைத் தாண்டி ஜெயிச்சிருச்சாம் ..
நீதி : நாம எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் , எடுத்த செயலை முடிக்குமளவுக்கும் தடம் மாறிடக்கூடாது .

முயல் தன்னோட தப்ப உணர்ந்துச்சாம். அது , ஆமைக்கிட்டே போய் இன்னொருதடவை போட்டிக்கு அழைச்சுச்சாம் . இந்த போட்டியில, முயல் ஓட ஆரம்பிச்சு , எல்லைக்கோட்டைத் தாண்டும் வரை வேற சிந்தனையே இல்லாம , ஜெயிக்கனும்கிற குறிக்கோளோட ஓடி முதல்ல வெற்றிக்கோட்டை சேர்ந்துருச்சாம் .
நீதி : ' நாம செஞ்ச தப்புக்களிலிருந்து பாடம் படிச்சுக்கிட்டு அதை திருத்திக்கிட்டோம்னா வெற்றி நமக்குத்தான்'.

இப்ப ஆமை யோசித்துச்சாம்.. நாம எத்தன தடவ தரையில பந்தயம் வச்சாலும் தோத்துருவோம் . அதனாலே இப்ப தண்ணியில(குளம், ஆறுல இருக்கிற தண்ணிங்க!!) பந்தயம் வைக்கலாம்னு நினைச்சு முயல போட்டிக்கு கூப்பிட்டிச்சாம் .. முயலும் வந்து தண்ணிக்குள்ள நீச்சலடிக்க முடியாமே,தரையிலேயே தவிக்க, ஆமை நீந்தி ஜெயிச்சிருச்சாம் .
நீதி : 'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் , நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்' .

இருவருக்குமுள்ள தனித்திறமையை இருவரும் புரிஞ்சுக்கிட்டு, ரெண்டு பேரும் ஆலோசனை செஞ்சு , தரையிலே பிரயாணம் செய்றப்போ முயல் ஆமையை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும், தண்ணியில நீஞ்சிரப்போ ஆமை முயலை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டு , அப்படியே செஞ்சு சந்தோஷமாக நட்போட இருந்துச்சுங்களாம் ..
நீதி : இதுதாங்க கூட்டுப்பணி (Team work) . ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட திறமையை அங்கீகரிச்சு அதனோட பயனை அனுபவிச்சு, சண்ட போடாம(சாத்தான் வேதம்!!), சந்தோசமாக வாழனும்ங்க ..

ராமதாஸ் செய்த கேவலம்..

ராமதாஸ் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வளவு கேவலமாக சென்றுவிடுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை . அதுவும் இலங்கை மண்ணில் .. இது நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது .. தற்போதுதான் என் கவனத்திற்க்கு வந்தது .இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை..

ராமதாஸ் என்னும் பெயரை வீரர்கள் பட்டியலில் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வாறு ஆகும் என எனக்கு தெரியவில்லை? ஒரு ஈரிலக்க ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை .. தொடக்க ஆட்டக்காரராக எவ்வளவு நம்பிக்கையுடம் மேற்கிந்திய அணி அவரை அனுப்பியது .. 9 பந்துக்களை சந்தித்து 1 ஓட்டம்தான் எடுக்கமுடிந்ததா அந்த ராமதாஸ் ர்யானுக்கு ..இது கேவலமில்லையா? நம்பிக்கை துரோகம் இல்லையா? எத்தனை கோடி இந்தியர்கள் மற்றும் மேற்கிந்திய சகோதரர்களை
ஏமாற்றியிருக்கிறார் . ஒரு 4 இல்லை.. ஒரு 6 இல்லை.. ரன்னும் ஆக குறைந்து. Strike Rate எல்லோரையும் விட குறைவு ...

R Ramdass b Maharoof 1 9 0 0 11.11

சுட்டி இங்கே ...



பின்னூட்டமிடுகிறவர்க்கு ஒரு டெம்ப்லேட் ..

மருத்துவர் மீதான ஊடக வன்முறையை பற்றி ஏற்கவவே இங்கு கூறியுள்ளேன் ..


அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள் என்று சமீபத்தில் 1958யில் என் நண்பர் ரங்காச்சாரியிடம் கூறினது இப்போது நியாபகம் வந்தது . இது என்ன ஹைப்பர்லிங் என்று தெரியவில்லை .


உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 112.75-ஆவது நாளை எட்டியுள்ளது ..