ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும் - ஒரு அலசல் Part-I

ஒரு கோழையாக முதுகெலும்பு இல்லாதவராக , தமிழக ஊடகங்களால் நடத்தப்படும் ஊடக வன்முறையை எதிர்கொண்டு, ஓ. பன்னீர்செல்வம் அவர்களை பற்றி சொல்வது என் கடமையென நினக்கிறேன் . பன்னீர்செல்வத்தை இவ்வாறு தாக்குபவர்கள் க.அன்பழகனை , நெடுஞ்செழியனை, வைகோவை இவ்வாறு சொல்வதில்லையே ஏன் .. சாதிபற்றுதானே என நான் கூறினால் , என்னை சாதி வெறியனாக மட்டையடிக்க கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும் சில உண்மை விடயங்களை கூறுவது என் கடமையென விழைகின்றேன் .

திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் தமிழகத்தின் முதல்வராக முடியும் எனும் துர்பாக்கிய நிலையை முறியடித்து , அரிதாரம் பூசாத, சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் .. சாதீய உணர்ச்சிகளை தூண்டி, கூட்டம் சேர்த்த சாதீய தலைவர்கள் கூட செய்ய முடியாத சாதனைகளை , அமைதி புரட்சியை நடத்திக்காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் . இவரில்லாமல் யார் யாரையோ புரட்சி தலைவர், தலைவி என காவடி தூக்குகிறது தமிழ் சமுதாயம் . ஆடை அவிழ்ப்பில் புரட்சி செய்தவர் தன்னை புரட்சி தலைவியாகவும், அச்சு பிச்சு கவிதை எழுதுபவர் தம்மை கலைஞராகவும், மற்ற உடண்பிறப்புகளை விட சற்றே அதிகம் படித்தவர் பல்கலைகழமாகவும் , அந்த அடையாளங்கள் கூட இல்லாதவர் தன் ஊர் பெயரை இணைத்து ஆர்க்காட்டார் , வாழ்ப்பாடியார் எனவும் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் சூழலில், முதல்வர் பொறுப்பு இருந்தபோதும் பட்ட பெயரகளை பற்றி சற்றொப்ப கூட கவலைப்படாமல் மேல்மக்கள் மேல்மக்களே என ஒவ்வொரு அரசியல்வாதியையும் வெட்கப்படவைத்தவர் அவர் .

அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் , தமிழகத்தை பாதுகாத்தவர் அவர் .

அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது? நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற பயத்தினால்தானே .

அவர் ஆட்சியிலே நடைபெற்ற கல்வி கொள்கை சீர்திருத்தம் , கவர்னர் பற்றிய டெல்லி மாநாட்டில் அனைவரின் பாரட்டையும் பெற்ற தலைவரின் உரை, கண்ணகி சிலை அகற்ற படுத்தியதால் திணிக்கப்பட்ட போராட்டம் , இந்தியா டுடே போன்ற பார்ப்பணீய ஏடுகள் அவர்க்கு எதிராக் நடத்திய ஊடக வன்முறை போன்றவற்றை அடுத்தடுத்த படிவுகளில் பதிகிறேன்,. நன்றி ..

சிங்கப்பூரில் தமிழ் பட்டப்படிப்பு

இன்றைய வசந்தம் சென்ட்ரலில் வந்த செய்தி தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.. சிங்கப்பூர் மேலான்மை-திறந்தவெளி பல்கலைக்கழகம் (SIM-OUC ) , மதுரை காமராஜர் பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பத்திருக்கிறது. தமிழ் வளர இந்த மாதிரியான ஆக்கபூர்வமான செயல்களில் சிந்திக்காமல் தியேட்டர்களில் தமிழை தேடும் கும்பலை என்னவென்று சொல்வது ?

எந்தவொரு நல்ல நிகழ்ச்சியிலும் நம்மையும் தொடர்பு படுத்திப்பார்ப்பதும் ஒரு சந்தோஷம்தானே .. நான் படித்த பல்கலைக்கழகமும் , நான் சில வருடங்கள் முன்பு வேலை பார்த்த SIM-OUC ம் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பித்திருப்பதும் என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது ... மல்ட்டி லின்குவல் வெப்சைட் என்பதால் பூச்சி பூச்சியான சீன எழுத்துகளோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு தமிழை கையாலும் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தமாகவும் உள்ளது .

சந்திரமுகியும் டாக்டர் பிரகாசும் ..

சந்திரமுகி கதை பல வழிகளில் தெரிந்ததாலும் , சிங்கப்பூரில் டிக்கெட் விலை 15 வெள்ளியாய் இருப்பதாலும் (மற்ற படங்கள் 8 அல்லது 10 வெள்ளிகள்) , தியேட்டர் சென்று படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை . தீபாவளியன்று வசந்தம் சென்ட்ரலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன் .. இணைய தளத்தில் சந்திரமுகியை இலவசமாக கிடைக்கிறது என்றும் அதற்கு காரணம் புலித்தலைவர் பிரபாகரன்(?) முதற்கொன்டு இலங்கை தொழிலதிபர் வரை பல செய்திகள் வர, டாக்டர் பிரகாசின் வலைத்தள முகவரிகளை பிரசுரித்த நம் பத்திரிகைகள் கண்டிப்பாக இதனையும் பிரசுரிப்பார்கள் என தேடினேன்.. சமூக பொறுப்புணர்வோடு(!!) யாரும் இந்த வலைத்தளங்களை பிரசுரிக்கவில்லை .

கார்த்திக் அரசியல்-2

Image hosted by Photobucket.com
நம் தமிழர் கூட்டம் இவ்வாறு நடிகர் பின்னே அலைகிறதே என கவலையாகயிருந்தாலும் , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காத, ஓப்பனிங் கொடுக்கமுடியாத கார்த்திக்குக்கே இவ்வளவு கூட்டம் வரும்போது , விஜயக்காந்த் போன்றோர்க்கு வரும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அவ்ருடைய பலத்தை (?) கண்டு நிம்மதியாய் உள்ளது .