வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்

'இளையராஜா மகளுக்கும் கமல் மகளுக்கும் தமிழ் தெரியாது ' ..என கேட்க நேரும்போது இளையராஜாவைத்தான் குறைகூறவே எனக்குத்தோன்றும் . அதற்கு காரணம் இளையராஜாவின் மேல் நான் வைத்துள்ள மதிப்பீடுதான் . மதிப்பீடு உடையும்போது கோபம் வருவதுதானே இயற்கை . கமல் பற்றிய செய்தி எனக்கு ஆச்சரியமில்லை ..இங்கே வந்து ஜாதியால் தான் இளையாராஜவை குறைகூறுகிறாய் என்றால் , அது என்னளவில் பிரச்சினை இல்லை ..'ஜாதி' கண்ணாடியை கழற்றிவிட்டு பார் .

திருமாவை பற்றிய என் காமெண்டு தனி மனிதனை பற்றியதுதான்..நான் ஜாதி கண்ணாடி அணியும் பழக்கம் இல்லாததால் ஜாதியை பார்க்கவில்லை ..மேலேயிருந்த படம் பிஜேபியின் மூத்திர விற்பனை பற்றியிருந்திருந்தால், 'மூத்திரம்' குடிப்பதை தொடர்பு படுத்தியிருந்திருப்பேன் . இதனை எல்லோரும் அவ்வாறே பார்த்துள்ளனர், ஒரே ஒரு கண்ணாடி அணிந்திருந்தவர் தவிர .. அவர் எழுதிய 'அணிந்துரைக்கு' அப்புறம் தான்.. கூட்டத்தோடு 'கோவிந்தா'.. அப்படியே பழகிவிட்டது நமக்கு..

கொவிந்தா ஆசாமிகளில் ஒருவர் எனக்கு அறிமுகமானவர்.. அவரின் ஜாதிய வெறியை நானறிவேன்.. 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ' பற்றி என்ன சொல்ல...


நம்மில் எத்தனை பேர் நல்ல வசதியிருந்தும் , நல்ல சூழ்நிலை இருந்தும் , 'இட ஒதுக்கிடு' மூலம் இடம் பிடித்தோம், நம்மால் வாய்ப்பை இழக்கப்போவது நம்மில் வசதியில்லாது ஒருவர்தான் என்ற உணர்வே இல்லாமல் ..? நமக்கு இப்படி குதிக்க என்ன தகுதியுள்ளது என 'கோவிந்தா'க்கள் மனசாட்சி இருந்தால் கேட்டுக்கொள்ளட்டும் ..

'என் ஜாதியினர் மலம் சுமக்கிறார்கள் .. எனக்கு வேலை கொடு '..எனக்கூறுவதில் என்ன நியாயம் சொல்லமுடியும் ?

பிகு ..
நான் எழுதுவது எல்லாவற்றிலும் என் பெயர் இருக்கும். பெயரில்லாமல் நான் எழுதுவதில்லை ..


'ஜாதி சங்கத்திற்குள்' நான் உட்காந்திருப்பது போல் அருவருப்பாய் உள்ளது சில காலமாய் .

0 comments: