கங்குலி.. கருத்து சுதந்திரம்.. பச்சை விளக்கு ....

கருத்து சுதந்திரத்தை பாருங்கப்பா.. கங்குலி சரியா விளையாடலையாம் . இந்தியா மானம் போயிடுச்சாம் .. (என்னமோ இந்தியாவின் கௌரவமும் மானமும் கங்குலி மட்டையிலும், அவர் பந்தில் துப்புற எச்சியிலும் இருக்கிறமாதிரி ) ..அப்படியே மானம் போனாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மானம் அல்லவா போகும் .. வாரிய நிர்வாகிகளுக்கல்லவா சொரனையும் சூடும் இருக்கவேண்டும் ... நம்மவர்களுக்கு வருகிற ஆத்திரத்தை பாருங்கள் .. குஜராத் கலவரத்தினால் வராத ஆத்திரம், சாதி கட்சிகளின் கொட்ட்த்தினால் வராத ஆத்திரம் , தீவிரவாதிகளின் மேல் வராத ஆத்திரம், சரியாக மட்டை அடிக்கவில்லை என மட்டையடித்து ஒரு வெப்சைட் www.ihateganguly.com .. அதிகப்படியாக ஒரு பதிவு போடலாம் (தற்காப்பு ஆட்டம்!!) அதற்குமேலான முக்கியத்துவம் எதற்கு? எங்கேயாவது ஒரு செஞ்சுரி அடித்தால், ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றால் திரும்பவும் அவர் கடவுளாகிவிடுவார் .. இங்குதான் கோயிலும் கட்டுகிறார்கள் செருப்பையும் தூக்குகிறாரகள். என்றுதான் நிதான நடைமுறை வருமோ?


அப்பாடா .. எதோ ஒரு பதிவு போட்டாச்சு.. இன்னும் மூன்று மாதத்திற்கு கவலையில்லை.. பச்சைவிளக்கு எரியும் (என நினைக்கிறேன்)

3 comments:

Anonymous said...

test

said...

கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்.... :-))

said...

//என்றுதான் நிதான நடைமுறை வருமோ? //

!!!