பட்டம் சூட்டு விழா

மாமனிதர் மகான் ஷிவாஜி கணேஷன் அவர்களின் சிலை திறப்பிற்கு பெரும் ஆபத்து வர இருந்த நிலையில் , அவரின் ஆருயிர் நண்பரும், அரசியல் சாணக்கியரும், முக்கியமாக இன்றைய முதல்வருமாகிய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருவாரமாக தூங்காமல் உறங்காமல் மன உளைச்சல் கொண்டார்கள் .

சிலைக்காக மன உளைச்சல் கொள்வது இதுதான் முதல்முறையா? இல்லை இல்லை பல முறை பல்லாயிரம் முறை. சுனாமி அலை வந்த போது கூட வள்ளுவர் சிலைக்கு ஆபத்தோ என்று மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான் நம் முதல்வர் .

இதுமட்டுமா கண்ணகி சிலைக்காக எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் நம் தலைவர் என இந்த உலகிற்குத் தெரியாதா என்ன?

நமது முதல்வரின் மன உளைச்சல்களை பாராட்டி "சிலைகாக்க மன உளைச்சல் கொண்டான்" என்ற பட்டத்தை இம்மாமன்றம் சூட்டுகிறது .

பி.கு :

இம்சை அரசன் படத்திற்கும் இந்த பட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .

0 comments: