மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை

சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியில் உள்ளூர், உலக அரசியல் நடப்புகளை ஆராயும் ஒரு நிகழ்ச்சி எதிரொலி . இதில் கலந்துரையாடல்கள், கருத்தறிதல் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி . மதநல்லிணக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்பு வந்தது . ஒரு தயக்கத்துடனேதான் மேலிட அனுமதியும் கிடைத்தது (வேற யாரு, தங்கமணியிடமிருந்துதான் , உளறிவிடுவேன், பிரச்சினையாகிவிடும் என உறுதியாக நம்பினார்) .

ஒளிப்பதிவு, ஒளிபரப்பு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்றது . ஒளிப்பதிவிற்கு முன் , தயாரிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது , மதநல்லிணக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று . அதுவும் ஒரு அமைதியான குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் அவசியம்தானா? என்று என் சந்தேகத்தைக் கேட்டேன் . இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் , மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துகள் தொடர்ந்து மக்களிடம் போய் சேர, அதன் அவசியத்தை மக்கள் மேலும் உணர, அரசாங்கம் எடுக்கும் முயற்சிதான் இது பற்றிய கலந்துரையாடல்கள் எனக் கூறினார் . எனவே, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை நான் என்ன திரும்பவும் கூறப்போகிறேன் என்ற என் தயக்கம் விலகி, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை என் மொழியில் நான் கூறப்போகிறேன் என என் நம்பிக்கை கூடியது .

கிறிஸ்தவன் என்ற முறையில் நானும் , இந்து மற்றும் இஸ்லாம் மதத்திலிருந்து இரு சகோதரர்களும் கலந்துகொண்டோம் . டச்-அப்(ஹி..ஹி)க்குப் பிறகு ஒளிப்பதிவு அரங்கத்திற்கு சென்றமர்ந்தோம் . பிரதமர் திரு. லீ சியாங் லுங் ' சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் , புரிந்துணர்விற்கும் சமயத்தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களே சிறந்த வழி' என்று கூறுவதும் , அதற்கான சமயப்பெரியோர்களின் கருத்துகளும் திரையிடப்பட்டது . முஸ்லிம் மதத்தலைவர் 'தீபாவளி , கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவது இஸ்லாத்துக்கு எதிரானது' என சில முஸ்லீம்கள் கூறுவதைக் கண்டித்தார் . அயலானைப் பற்றி புனித குர்-ஆனில் கூறுகின்ற வசனத்தையும் , ஜிஹாத் என்பதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் தீமைகளுக்கு எதிரான போராட்டம் (நான் ஏற்கெனவே அறிந்திருந்ததுதான்) என்றும் விளக்கினார் . அவருடைய கருத்து மிக நன்றாக இருந்தது . அதன் பின் ஒரு முன்னோட்டக் கலந்துரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது . உடனே , படப்பிடிப்பும் ஆரம்பமானது .. நாஸ்ரத் ஹசான் (Host) அவர்கள் , நாங்கள் முன்னோட்டக் கலந்துரையாடலில் முன்வைத்த கருத்துகளைச் சொல்ல வேண்டிய வகையில் , கேள்விகளைக் கேட்டார் . எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தமிழ் வார்த்தைகளை,. ஆள் வைத்துத் தேடாமல், நல்ல தமிழில் , சரளமாக கேள்விகளைக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ..

ஆனால் , அவரும் ஒரு இடத்தில் சறுக்கினார் . எங்களை அறிமுகப்படுத்தும்போது , ' மூன்று இளையர்கள்' எனக்கூறினார் . ( 'இளைஞர்' என்ற சொல்லை 'இளையர்' என்று இங்கு சிங்கப்பூரில் கூறுகிறார்கள்) . ' அறுபத்து நான்கு' வயதினரை இளைஞர் என்று சொல்லலாமென்று தமிழ்மணத்திலுள்ளோர் எல்லோரருக்கும் தெரியும். 'முப்பத்திநான்கு'.. வயதினனை இளையர் எனச் சொல்லலாமா? எனக்குத் திரும்பவும் ஒரு கலக்கம் .. சற்றுமுன், தயாரிப்பாளர் 'வயது என்ன?' என்று என்னிடம் கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது . வயது தெரியாமல், தமிழ் கிறிஸ்தவன் யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் என்னை கூப்பிட்டுவிட்டார்களோ என ஒரு சங்கடமும் வந்தது . அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .

ஐயோ , ரஜினி அரசியலில் உளறியதிலிருந்து இப்படித்தான் , நல்ல நேரங்களில் கூட அவர் நியாபகம் வந்து தொலைத்துவிடும் .ரஜினி நினைப்புடனே வணக்கம் சொன்ன என்னை வீடியோவில் பார்க்கவும் . என்னுடைய கருத்தெல்லாம் இந்த வீடியோவில் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, நல்ல ஜல்லி என்ற பின்னூட்டமும் வரும் என்பதால் .



இந்த நிகழ்ச்சி , ஜனவரி-15 ஆம் நாள் (பொங்கலன்று) ஒளிபரப்பாகியது . எனக்காக, என் நண்பர்கள் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அந்நியனை' பார்க்காமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள் . நண்பர் ஒருவர் , 'ஜிகாத்' திற்கு உண்மையான அர்த்தத்தை அன்றுதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார் . தயாரிப்பாளர் திரு . மணிமாறன் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது

கருணாநிதி கைது...முத்துக்கருப்பன் விளக்கம்

முத்துக்கருப்பன்...

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ததன் மூலம் அதே இரவில் ஹீரோவான போலீஸ் அதிகாரி!

கருணாநிதி கைதைக் கண்டித்து அப்போது தி.மு.க. நடத்திய பிரமாண்ட ஊர்வலத்தையும் முத்துக்கருப்பனின் காவல்துறை விட்டுவைக்கவில்லை. அவர்கள் நடத்திய வன்முறையில் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டார்கள். இதற்காக பின்னாளில் விசாரணை கமிஷனே போடப்பட்டது. இந்த கைது களேபரம் அடங்குவதற்குள் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய கலவரத்தை அடக்கு வதற்காக அவர்கள் தங்கியிருந்த அரசு விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியது போலீஸ். அப்போதும் கமிஷனர் முத்துக்கருப்பன்தான்!

ஆனால், இந்த ஆட்டமெல்லாம் வெறும் ஏழு மாதங்கள்தான்! அதன்பிறகு, அவரை கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் ஜெயலலிதா. அதோடு, ‘வருமானத் துக்கு மீறி முத்துக்கருப்பன் சொத்துச் சேர்த்தார்...’ என்று அவர் மீது புகார் சொல்லப் பட... 27.6.2003ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படவே இல்லை.

அடுத்து 2006ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது. கருணாநிதி ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதி காரிகள் பலரது சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணி வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், முத்துக்கருப்பனுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் 6&ம் தேதி அவரது சஸ்பெண்ட் உத்தரவை மறுபரி சீலனை செய்யும் காலக்கெடு வந்தது. தான் எப்படியும் மீண்டும் பணிக்கு அழைக்கப் படுவோம் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், இந்த முறையும் நீட்டிப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை போலீஸ் கமிஷனராகக் கம்பீரமாக வலம்வந்த முத்துக்கருப்பன் இன்று கோயில் குளம் என்று ஆன்மிக வலம் வந்துகொண்டிருக்கிறார்!

தனது கடந்தகால நினைவுகளையெல்லாம் மனதுக் குள்ளேயே பூட்டி வைத்திருந்த அவர், முதல் முறையாக ஜூ.வி&க்காக மனம் திறக்க ஒப்புக்கொண்டார்.

‘இரண்டு பாஸ்களிடம் ஒரே நேரத்தில் நீங்கள் வேலை பார்க்கமுடியாது.இப்படித்தான் என்னிடம் சீறினார், முன் னாள் முதல்வர் ஜெயலலிதா. ‘நான் நிறைய சம்பாதித்து விட்ட தாகவும், அதனால்தான் சஸ்பெண்ட் உத்தரவை விலக்கிக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறேன்’ என்றும் பலர் பேசுகிறார்கள். இனியும் நான் அமைதியாக இருந்தால், அந்தப் பேச்சு உண்மையாகி விடும். அதனாலேயே போராடும் எண்ணத் துக்கு வந்திருக்கி றேன்...’’ என்று

பழைய நினைவு களில் மூழ்கிய முத்துக் கருப்பனிடம்,

கருணாநிதியைக் கைது செய்து அப்போதைய ஆளுங் கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டீர்கள். ஆனா லும், அந்த ஆட்சியில்தான் உங்களை சஸ்பெண்ட் செய் தார்கள். அதே கருணாநிதி தற் போது முதல்வராகி விட்ட சூழ் நிலையில் அரசு தரப்பில் உங் களை எப்படி பார்க்கிறார்கள்.?’’ என்ற கேள்வியை வைத்தோம்.

தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியைக் கைது செய்த பிரச்னையில், அறிந்தோ அறியாமலோ நான் முன்னிலைப் படுத்தப்பட்டு விட்டேன். அதனைத் தொடந்து நடந்த சம்பவங்களை வைத்து ஒரு கொடூர அதிகாரியாகத் தமிழக மக்கள் மத்தியில் சித்திரிக்கப்பட்டு விட்டேன். கருணா நிதியைக் கைது செய்வதற்கு முன்னால், ‘நிறைய யோசிக்க வேண்டும்’ என்று சொல்லி அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவிடம் துணிச்சலாக ஆட்சேபித்தேன். ஆனால், அதில் எனக்குத் தோல்விதான் கிடைத்தது. இதுதான் உண்மை. இதெல்லாம் அப்போது உயரதிகாரிகளாக இருந்த வர்கள் பலர் முன்னிலையில் நடந்ததுதான்... இந்த உண்மை களெல்லாம் முதல்வர் கருணாநிதியிடமே விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு காத்திருக் கிறேன். அப்படியரு வாய்ப்பு கிடைத்து விட்டால், என் மீதிருக்கும் தவறான அபிப்பிராயம் நிச்சயம் நீங்கும்... அதன் பிறகு எல்லாமே சுமுக மாக இருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை!’’

சரி, கருணாநிதி கைது செய்யப்பட்ட போது என்னதான் நடந்தது? விளக்க மாகச் சொல்லுங்களேன்..?’’

1996&ல் தி.மு.கழக ஆட்சியின் போது நான் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி&யாக இருந் தேன். அப்போது தமிழகத்தின் சில இடங் களில் குண்டு வெடிப்பும், குண்டுகள் கைப் பற்றப்பட்ட சம்பவமும் நடந்தது. அது தொடர் பாக அப்போதைய தி.மு.க. அரசை எதிர்த்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களோடு அறிக்கையன்றை வெளியிட்டார் ஜெய லலிதா. அதனால் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினேன். பிறகு, 2001&ல் முதல் வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன், என்னை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தார். கமிஷனராக அவரை நான் சந்தித் தேன். அப்போது, ஏற்கெனவே அவரை விசாரணை நடத்தியதையெல்லாம் ஞாபகம் வைத்து என்னிடம் கேட்டார். அப்போதே என்மீது அவருக்கு சந்தேகமும் கோபமும் இருந்திருக்க வேண்டும். அது எனக்குப் புரியாமல் போய்விட்டது. பிறகு ஒருநாள், கருணாநிதியைக் கைது செய்வதற்காக நேரம் குறித்துவிட்டு, அதுபற்றி ஆலோசிப் பதற்காக என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்தார். நானும் போனேன். அங்கே வக்கீல் ஜோதி, முன்னாள் அரசு வழக்கறி ஞர் கோமதி நாயகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆச்சார்யலு மற்றும் இன்னும் சிலர் இருந்தார்கள். என்னிடம், கருணாநிதியை உடனே கைது செய்யவேண்டும்Õ என்று ஜெய லலிதா சொன்னார். ‘ஆதாரங்களைத் திரட்டாமல் வெறும் வெள்ளைத்தாளில் எழுதித் தரப்படும் புகாரை வைத்துக் கொண்டு, அவசரகதியில் அவரைக் கைது செய்வது சரியல்ல... புகாரை முறைப் படி விசாரித்து ஆதாரங்களை சேகரிப் போம். அதனை சட்டப்படி கோர்ட்டில் தாக்கல் செய்து, அங்கிருந்து உத்தரவு வாங்கி... அதன்பிறகு, பகல் நேரத்திலேயே கைது செய் யலாம்... கருணாநிதி வயதானவர். முதல் வராக இருந்தவர். எங்கும் ஓடிஒளியக்கூடி யவர் அல்ல. அதனால் நள்ளிரவு நேரத்தில் கைது செய்ய வேண்டாம்...Õ என்று மனதில் தோன்றியதை சொன்னேன். நான் சொன்னது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. ‘எஃப்.ஐ.ஆர். போட்டுவிட்டு ஆதாரம் திரட்ட காலம் எடுத்துக் கொண்டால், விஷயம் வெளியே கசிந்து விடும். அதைவைத்து, கருணாநிதி கைது நடவடிக்கையி லிருந்து தப்பித்துவிடக் கூடும்...’ என்றவர், அங்கிருந்தவர் களை சுட்டிக்காட்டி, நீங்கள் வருவதற்கு முன்பே இங்கிருப்பவர் களிடமெல்லாம் ஆலோசனை செய்துவிட்டேன். அவர்களெல் லாம் ‘தாராளமாக கைது செய்யலாம்’ என்கிறார்கள். நீங்கள் மட்டும் இப்படிப் பேசுகிறீர்களே? என்றார். அத்துடன் அன்றைய விவாதம் முடிந்தது. அடுத்த நாளும் இரவு எட்டு மணிக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. அங்கிருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில், முக்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் சில அமைச்சர்களும் கூடி இருந்தார்கள். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்வது குறித்து மீண்டும் ஜெயலலிதா பேசினார். நான் மீண்டும் அதிலுள்ள பாதகங்களை வெளிப் படையாக எடுத்துச் சொன்னேன். என் அருகிலிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், Ôமுத்துக் கருப்பன்! சரியாகச் சொல்கிறீர்கள்... அதனைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொல்லுங்கள்...’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் சொன்னதைக் கேட்கும் மூடில் ஜெய லலிதா இல்லை. கூட்டம் முடிந்தது. அடுத்து, இன்னொரு அறையில் என்னைச் சந்தித்த ஜெயலலிதா, Ôஇந்த வழக்கைப் பதிவு செய்திருப் பது நீங்கள் அல்ல... சி.பி.சி.ஐ.டி.! அவர்களுக்கு உதவ வேண்டியது மட்டும்தான் உங்கள் தலைமையிலான சென்னை போலீஸின் வேலை. அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்... என்று காட்டமாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி. இருந்தாலும்,ஓகே மேடம்Õ என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன் படியே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்தேன். அப்போதைய மயிலாப்பூர் உதவி கமிஷனர் முருகேசனை மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரு டன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தேன். நான் அந்த நேரம் எனது அலுவலகத்தில்தான் இருந்தேன். வெளியே எங்கும் போகவில்லை. கருணாநிதி கைது செய்யப்பட்ட சமயத்தில் எப்படியோ சன் டி.வி. குழுவினர் அங்கு வந்து விட்டனர். சம்பவத்துக்குப் பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா, Ôநீங்கள்தான் சன் டி.வி&க்காரர்களை உள்ளே போக அனுமதித் தீர்களா?Õ என்று கோபத்துடன் கேட்டார். ‘இல்லை... அந்த நேரத்தில், கோபாலபுரம் வீட்டு வாசலில் காவல் பணியில் இருந்த அதி காரிதான் அவர்களை உள்ளே அனுமதித் திருக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கருணா நிதியை நள்ளிரவில் கைது செய்ய நான் ஆட்சேபம் தெரிவித்தது... சன் டி.வி. குழு வினரை உள்ளே விட்டது... இதையெல்லாம் யோசித்த ஜெயலலிதா, எனக்கும் தி.மு.க&வுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில், Ôநீங்கள் இரண்டு Ôபாஸ்Õகளிடம் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாதுÕ என்றார். ஒரு Ôபாஸ்Õ& ஜெயலலிதா. இன்னொரு Ôபாஸ்Õ& கருணாநிதி. முதல்வர் அப்படி ஒரு எண்ணத்தில் இருக்கிறார் என்றால், அதிகாரியான நான் என்ன சொல்ல முடியும்? மௌனமாக இருந்து விட்டேன்!ÕÕ

‘‘கருணாநிதி கைது சம்பவத்தைத் தொடர்ந்து அது தொடர் பாக அரசு சார்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது நீங்கள்தான். ஆனால், கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்று இப்போது சொல்கிறீர்களே... அப்படியென்றால், நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தீர்கள்?’’

ÔÔநான் செய்த மிகப் பெரிய தவறு அதுதான்! கைது செய்யப்போன சி.பி.சி.ஐ.டி. போலீஸ§க்குப் பாதுகாப்பு கொடுத்த நான், அந்த விவகாரம் பற்றி எதுவும் கருத்து சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனால், கைது நடவடிக்கை முடிந்து விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியதும், சி.பி.சி.ஐ.டி. பிரிவின் உயர் அதிகாரிகள்கூட எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நான் அப்போது கமிஷனர் பதவியில் இருந்த தால், சட்டம்&ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை. ஏதோ நானே முன்னின்று கருணாநிதியைக் கைது செய்ததுமாதிரி யான சூழல் உருவாகிவிட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்... கருணாநிதி கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைக்கப்பட்ட போது, நள்ளிரவு மணி 3 இருக்கும். அவருடைய மனைவி ராஜாத்தியம்மாள் பரிதி இளம்வழுதியுடன் என்னைச் சந்தித்தார். ‘எனது கணவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்?Õ என்று அழுதபடியே கேட்டார். ‘கைது செய்திருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அந்தப் பிரிவு அலுவலகம் இருக்கும் அட்மிரா லிட்டி ஹவுஸில்தான் விசாரணைக்காக வைத்திருக்கிறார்கள்...’ என்று சொல்லி அனுப்பினேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், கைது நடவடிக்கையில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்பது அவர்களுக்கு அன்றே மிகத் தெளிவாகத் தெரியும் என்பதற்காகத்தான்.’’

‘‘வருமானத்துக்கு அதிகமாக நீங்கள் சொத்துக் குவித்திருப் பதாகச் சொல்லித்தான் உங்களை சஸ்பெண்ட் செய்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்... அந்த வழக்கின் நிலை என்ன?’’

ÔÔஎன்மீது போடப்பட்டிருக்கும் அந்த வழக்கில் துளிகூட உண்மையில்லை என்பதெல்லாம், அதுகுறித்து விசாரித்து முடித்திருக்கும் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இந்த உண்மையைக்கூட அவர்களால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல முடியவில்லை. எனக்கு எதிரான சில சக்திகள் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டன. ரொம்ப ஜூனியரான என்னை பாரம்பரியம் மிக்க சென்னை போலீஸ§க்கு கமிஷனராக அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அந்தப் பதவியிலிருந்தது குறுகிய காலம்தான். அப்போது, அப்போதைய முதல்வருக்கு வேண்டிய சிலர், என் பதவியையும் எனது பெயரையும் பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தினார்கள். இதெல்லாம் எனக்குத் தாமத மாகத்தான் தெரியவந்தது. உடனே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உண்மையை எடுத்துச்சொல்ல முயன்றேன். ஆனால், அது அந்த மோசடிக் கும்பலுக்குத் தெரியவர... என்மீது இல்லாததும், பொல்லாததும் சொல்லி விட்டார்கள். அடுத்த சில நாட்களிலேயே என்னை கமிஷனர் பதவியிலிருந்தும் தூக்கியடிக்க வைத்துவிட்டார்கள். அதோடு விடவில்லை... தொடர்ந்து நான் போலீஸ் பணியில் இருந்தால் நல்லது இல்லை என்று முடிவெடுத்து, நயவஞ்சமாக என்னைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கியது ஜெயலலிதா நம்பிய அந்தக் கும்பல். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக என்மீது பொய்யாக வழக்குப் போட வைத்து சஸ்பெண்ட் செய்ய வைத்தார்கள். இதனாலேயே என் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கடைசிவரை அப்போதைய முதல்வரின் பார்வைக்குக் கொண்டு போகாமலேயே வைத்து விட்டார்கள். அப்போது நடந்ததைதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்களும் நன்கு விசாரித்து, உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அதனால், விரைவில் நல்லது நடக்கும். முதல்வர் கருணாநிதியை சந்திக்க முறைப்படி அனுமதி கேட்டிருக்கிறேன். அப்போது நடந்தது எல்லாவற்றையும் அவரிடம் விளக்குவேன். விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்’’ என்றார் முத்துக்கருப்பன்.

நன்றி: ஜூனியர் விகடன்



ஆட்சியாளர்களை பாஸ்களாக அரசு அதிகாரிகள் நினைக்கும்வரை இது நடக்கத்தான் செய்யும். மக்களும் சட்டமும்தான் பாஸ்கள் என என்றுதான் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் நினைக்கபோகிறார்களோ தெரியவில்லை .

முதல்வர் கருணாநிதி மேல் பல வருத்தங்கள் இருந்தாலும் , கைது அன்று டீவியில் பார்த்து கண்கள் கசிந்தன. நியாயமான காரணங்கள் இருந்தால் கைது செய்வதில் தவறில்லை. ஒரு கட்சியின் தலைவரை , விரும்புகிறோமோ இல்லையோ பல இலட்சக்கணக்கான மக்களின், ஆதர்சன நாயகனை , ஒரு முதியவரை ,இப்படி நடத்தியது கொடூரத்தின் கொடூரம் .இந்த நிகழ்வு கண்டிப்பாக செல்வி .ஜெயலலிதாவின் அரசியல் தோல்விதான் . இரு கட்சியின் பலிவாங்கும் அரசியலுக்கு அரசு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணையும் ரீடிஃப்பின் கொதிப்பும்

இன்று ரீடிஃப் வலைத்தளத்தில் ஒரு தலைப்பு 'ஏப்ரல் 15: இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதல்' என தினமலர்த்தனமான தலைப்பு சூப்பர் 8ல் தானே இவையிரண்டும் மோதுகின்றன . ஏப்ரல் 15யில் மோத கூடுதல் வாய்ப்புள்ளதே தவிர எப்படி அறுதியிட்டுக்கூற முடியும் என ஒரு சந்தேகத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன் .
ஐ சி சி வலைத்தளத்தில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் , இது வாரவிடுமுறை நாளில் , இந்த இரண்டு நாடுகளை ஆடவிட்டு, ரசிகர்களை முன்பதிவு செய்யவைக்க செய்த யுக்தி எனவும் , ஐ சி சி , மேட்ச் ஃபிக்ஸின் இறங்கியதைப் போல அந்த கட்டுரையாளர் உணர்ச்சிவசத்துடன் ஐ சி சி யை கிழி கிழியென கிழித்து, உப்புக்கண்டம் போட்டு காயவைத்துள்ளார் . இவ்வளவு முட்டாள்தனமாகவா இந்த
ஐ சி சி நடந்துகொள்ளும் என அவர்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பார்த்தால்தான் , ரெடிஃப் கட்டுரையாளரின் முட்டாள்தனம் புரிகிறது.
இவர்கள் பத்திரிகை நடத்தும் இலட்சணமும், ஒரு சாதாரண விஷயத்தை எவ்வாறெல்லாம் அதிர்ச்சியூட்டும் செய்தியாக மாற்றுகிறார்கள் எனவும் புரிந்த்தது . நீங்களே பாருங்கள்



அட்டவணை போடும்போது , ஒரு வரிசையாக 1, 2 என எழுதுவது ஒரு சாதாரண விஷயம் . ஆனால் A1 B2.. என்பது வெற்றிபெற்றவுடன் வரும் வரிசையைப்பொறுத்து என்பதை சிறுபிள்ளைக்குகூட புரியும் ஒரு விஷயம் ..
ஆனாலும் இது சிலருக்கு புரியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது என கட்டுரையாளர் எழுதியிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அவர்கள் எழுதியுள்ள தொணி .. என்ன செய்வது இதுதான் ஜர்ணலிசம் போலிருக்கிறது ..

Link : http://www.rediff.com/wc2007/2007/mar/05icc.htm

சத்யசாய் வீரப்பா சந்தனக்கடத்தல் பாபா

சத்ய சாய் பாபா . நல்ல பேச்சாளர் . மக்களை மயக்கும் சொல்வன்மை உடையவர் . அவர் வாயிலிருந்து லிங்கம் எடுப்பது , வெறும் கையிலிருந்து விபூதி எடுப்பது போன்றவற்றை செய்து, தாமே 'கடவுள்' என பறைசாற்றினார் . இதை கண்ட கூட்டம் இவரை தெய்வம் என்று வழிபட்டது . ( ரயிலை மறையச் செய்த பி.சி. சர்க்கார் இன்னும் பெரிய கடவுள்தானே!!) . இவருக்கு வெளிநாட்டு பக்தர்களும், பணக்கார/ அதிகாரவர்க்க பக்தகேடிகளும் குவிந்தனர் . இவரின் பக்தர்கள் மூலம் பெரும்வருமானம் இவருக்கு கிடைத்தது. இதன்மூலம் இவர் கல்விக்கூடங்களும் , தண்ணீர் பஞ்சம் போக்கும் பணிகளும் செய்தார் . இவரது கல்விக்கூடங்களில் படிக்கும் பக்தர்களின் குழந்தைகளை பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது , கொலைக்குற்றச்சாட்டு கூட உண்டு . இதனால் மாணவர்களே இவரை கொலை செய்யவும் முயன்றனர் . வீபூதி, லிங்கம் , செயின் எடுப்பது எல்லாம் சாதாரண, அடிமட்ட மாஜிக்குகளே என தோலுரித்துக்காட்டப்பட்டுள்ளது . ஆனாலும் , இவரின் நற்பணிகளுக்காக இவரை அரசாங்கமும் பத்திரிகைகளும் பாராட்டுகின்றன .


வீரப்பன் சந்தனகட்டை கடத்தியவர் . கொச்சையாகப் பேசக்கூடியவர். தன்னை 'பச்சைத்தமிழன்' என்று கூறிக்கொண்டார் . சில முக்கிய நபர்களை கடத்தினார். பணம் வசூல் செய்தவுடன் விடுவித்தார் . திரு.நாகப்பன் மற்றும் இவரை பிடிக்கவந்த காவல்துறையினரைக் கொன்றார் . பண வசூல் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தார் . அதன் மூலமோ மற்றும் காட்டிற்குள் தனியாக வரும் பெண்களிடமோ ஆண்களிடமோ பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் இல்லை . பல வழிகளில் முயற்சித்தும், இவரை காட்டிகொடுக்கவோ கொல்லவோ இவரிடம் உதவிபெற்றதாக சொல்லப்படும் மக்கள் செய்யவில்லை . இவரிடம் உதவிபெற்றதற்காகவும், காவல்துறையினரிடம், காட்டிகொடுக்காத , மேலும், அவர் ஒளிந்திருந்த ஊர்களில் வாழ்ந்த குற்றத்திற்காக பலர் பாலியல் பலாத்காரமும் , சிறைவாசமும் அடைந்தனர் . இவரின் குற்றத்திற்காக , காவற்துறையினாரால் கொல்லப்பட்டார் . இவரைக் கொன்றதற்காக , காவற்துறையினரை அரசாங்கமும், பத்திரிகைகளும் பாராட்டின .

நீதி: சந்தனக்கட்டையைவிட காவிச்சட்டைக்கு மதிப்பு அதிகம்.

பி.கு : தலைப்பை அப்படியேவும் படிக்கலாம் , சொற்களை மாற்றியும் படிக்கலாம் . அது உங்கள் விருப்பம் .

Inspired by : இணைய நாடோடி செல்லா , அல்வாசிட்டி விஜய்

என் கேள்விக்கு என்ன பதில்?


துளசி டீச்சர்
, இட்லி வடையைத் தொடர்ந்து எனக்கும் ஒரு சந்தேகம் . இறால்வடை என்று ஒனறு சிங்கப்பூரிலுள்ள இந்திய கடைகளில் மிகப்பிரபலம் . அதை சாப்பிடுப்பார்க்கும் தைரியம் இன்னும எனக்கு் வரவில்லை) . இறால் கொண்டு இதை செய்திருப்பார்கள் .. பார்க்க படம் .


இறாலில் செய்திருப்பதால் இது இறால் வடை .




மேலே படத்தில் நீங்கள் காணும் வடையை ஏன் 'ஆமை வடை' எனக் கூறுகிறார்கள் ?

விஜய் , சன் மற்றும் அரசியல்

சிங்கப்பூரில் சன் தொலைக்காட்சி மட்டுமே இந்திய நேரப்படி (2.30 மணி நேர தாமதத்தில் ) ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது . அதாவது ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை, அதே வேளையில் சிங்கப்பூர் நேரம் 11.30 மணிக்கு பார்க்கலாம் . மே 2006 யில் நேர மாறுதல் கொண்டுவரப்பட்டது . ஒவ்வொரு நிகழ்ச்சியும் இந்தியாவில் ஒளிபரப்பும் அதே நேரம் ஒளிபரப்பு ஆரம்பமாகியது .ஆனால் ஒரு வார கால இடைவெளியில் . அதாவது முந்தின வாரம் இந்தியாவில் ஒளிபரப்பின 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' அடுத்த ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் .ஆனால் சன் செய்திகள் மட்டும் அதே வேளையில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன . இதனால் சன் செயதிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் விளம்பரங்களை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் என்ன நல்லது தானே என்று நினைத்தாலும் , விளம்பர நேரம் எல்லாம் , சன் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பாக, திரும்ப திரும்ப மெகா சீரியல் பாட்டும் நடனமும் கழுத்தறுக்கின்றன் .

வாரநாட்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த , மெகாத்தொடர் இல்லாத நிகழ்ச்சிகளாகிய, சூப்பர் 10, திரைவிமர்சனம் போன்ற நிகழ்ச்சிகள், மீனா நடிக்கிற ஒரு மெகாத்தொடரருக்காக நேரம் மாறியதால் , சன் தொலைக்காட்சி என்றாலே மெகாத்தொடர் என்று அலுப்பாகிபோன நேரத்தில், விஜய் தொலைக்காட்சியும் சிங்கப்பூரில் ஒளிபரப்பைத் தொடங்கியது . நல்லவேளையாக மெகாத்தொடர்களை மட்டும் நம்பாமல், மற்ற சில நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது .

முதலில் கவனத்தை கவர்ந்த நிகழ்ச்சி 'க்ராண்ட் மாஸ்டர்' . 21 கேள்விகளுக்குள் , மனதில் நினைத்த நபரை திரு,ப்ரதீப் அவர்கள் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி . விளையாட்டீனூடே பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி . இது ஒரு செட்-அப் ஆக இருக்க வாய்ப்புள்ளது என சிலர் சொல்லவும் செய்தார்கள். ஆனால், உண்மையில், திரு,ப்ரதீப்புக்கு இந்த திறமை இல்லாமல் செட்-அப்பாக இருக்குமென்றால், ஏதாவது ஒரு சினிமா நடிகர்தான் இந்த நிகழ்ச்சியை செய்திருப்பார் .

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நிகழ்ச்சி 'நீயா? நானா?' .. பலமுறை விவாதங்கள் தலைப்பை விட்டு சென்றாலும், நமக்கு பிடிக்காத கருத்துகள் முட்டாள்தனமான கருத்துகள் எனத் தோன்றினாலும் , விவாதம் மிக சூடாகவும் சுவையாகுமே உள்ளது . நடத்துபவரும் திறமையான் சொல்லாடலுடன் கருத்துகளை கூறுகிறார் . ஆனால் முக்கிய விருந்தினராக வருபவர் பெரும்பாலும் சினிமா, தொலைக்காட்சித் துறையினரே .

கல்லூரி மாணவர்களுக்கிடையே கலைநிகழ்ச்சி போட்டி நடத்தும் EQவும் அருமையான நிகழ்ச்சி . அதிலும் , மெல்லிசையில், கலந்து கொள்கின்ற அனைவருமே பின்னுகிறார்கள் . டேப் ரிக்கார்டை போட்டு வாய் மட்டும் அசைக்கிறார்களோ என்ற ஐயம் வருமளவுக்கு அருமையாக பாடுகிறார்கள் . போட்டிக்கு பின் நடுவர்கள் சொல்லும் பின்னூட்டங்களும் அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கும் .
சன் தொலைக்காட்சியிலும் திரு .ரமணன் நடத்திய ஒரு நிகழ்ச்சி இருந்தது . கார்த்திக் போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிண்ணணி பாடகர்களானார்கள். இப்போது என்ன ஆனது எனத் தெரியவில்லை .

காஃபி வித் அனு .. இதுவும் வழமையான பேட்டி போல அல்லாமல் வித்தியாசமாக உள்ளது .. நடிகர் ஜெயராம் , கங்கை அமரன குடும்பம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன . இது கலந்து கொள்கின்ற விருந்தினரை பொறுத்து இனிமையாகவும் கொடுமையாகவும் அமையும்.

ஜோடி நம்பர்-1 , இது விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது . எனக்கு பொதுவாக போட்டி நிகழ்ச்சிகள் பிடிக்கும் . தொலைக்காட்சி நடிகர்கள் ஆட்டமும் அதற்கு நடுவர்கள் சொன்ன பின்னூட்டமும் சுவாரஷ்யமாகவே இருந்தது . . இதில் சேத்தன், ப்ரியதர்ஷினி , விஜய் ஆனந்த் தவிர மற்ற அனைவரும் புதுமுகமாகவே எனக்குத் தெரிந்தனர் . மெகாத்தொடர்களை பார்த்திருந்தால் எல்லோரையும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் . ராகவ் ப்ரீத்தா ஜோடி தொடர்ந்து நன்றாக ஆடினர் . விஜய் ஆனந்த் இறுதி சுற்றில் அருமையாக செய்திருப்பார் . ஆனால் , முன்றைய சுற்றுகளில் நன்றாக ஆடியிருந்தாலும் , இறுதி சுற்றில் ,பூஜா -வெங்கட் ஜோடி மற்ற இருவரை காட்டிலும் சாதரணமாகவே செய்திருந்தாலும் , அவர்களே SMS ஓட்டின் மூலம் வெற்றி பெற்றனர் . இதற்கு காரணம் திருமணம் ஆகாத பூஜாவா அல்லது மற்ற ஜோடிகளின் 'ஆத்தில்' இருந்து உறவினர்கள் கொடுத்த பேட்டிகளா எனத் தெரியவில்லை .

ஆனால் இது அடுத்த சுற்றில் மிகவும் சுவாரஷ்யமின்றி முடிந்தது . சன் குழுவினர் ஜோடி நம்பர்-1 இல் கலந்துகொள்ள கூடாது என நெருக்கடி கொடுத்ததாக வந்த செய்திக்கும் ,. நடிகர்களின்றி, நடணக்கலைஞர்களை வைத்து ஜோடி நம்பர்-1 நடந்ததற்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது .


அடுத்து 'கலக்கப்போவது யாரு' .. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது என்று நினைக்கிறேன் . வெள்ளி இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி , சனி காலையும், ஞாயிறு மாலையும் மறுஒளிபரப்பாகி கொண்டிருந்தது . ஆதலால் இந்த நிகழ்ச்சியை தவறவிடமுடியாது . சிலமுறை மூன்று தடவையும் பார்க்கும் சந்தர்ப்பம் வரும் . ஆனால் , இந்த நிகழ்ச்சிக்கிடையேயும் சன் தொலைக்காட்சி குறுக்கே வந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கிய எல்லோரும் சன் தொலைக்காட்சியில் அசத்த வந்துவிட்டார்கள் . 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல , கலைஞர்கள், தாமே சன் தொலைக்காட்சிக்கு வந்ததாக பலமுறை சொன்னார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எல்லோரையும் அப்படியே கடத்துவது எந்தளவு முறையான வியாபார முறை? . Business Etiquette உண்டா இதில்?
அதுவும் நிகழ்ச்சி பெயர் முதற்கொண்டு , எல்லாமே ஈயடிச்சான் காப்பி . சம்பந்தமே இல்லாது கோட் போட்டு கலக்கியவர்கள் , அதே சம்பந்தமே இல்லாத கோட்டுடன் வந்து அசத்துகிறார்கள் . அதில் கூட மாற்றம் இல்லை . விஜயில் விருந்தினராக வந்தவர்களின் சின்னி ஜெயந்த் நல்ல பின்னூட்டங்களையும் , சில நேரங்களில் தானே மிமிக்ரியும் பண்ணினார், ஆனால் சிரித்து மட்டுமே கொண்டிருந்த மதன் பாப், சன்னிலும் வந்து சிரிக்கிறார் ..

அது சரி , நிகழ்ச்சி சன்னில் வந்தால் என்ன , விஜயில் வந்தால் என்ன? நான் என்ன விஜயின் பங்குதாரரா .. கவலைப்படுவதற்கு .. ஆனால் நான் விரும்பும் நிகழ்ச்சி , சன்னிற்கு போனது கவலைதான் . விஜயைப் போல சன் , மறு ஒளிபரப்பு செய்யப்போவது கிடையாது . அவர்கள் நேரத்தை நிரப்ப நிறைய மெகாத்தொடர்களை வைத்துள்ளார்கள். மேலும் , ஒளிபரப்பாகும் நேரம்.. சனி இரவு 10.00 மணி . 10.30 மணிக்கு சன் செய்திகள்(சிங்கப்பூரில் சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பாவதால்) இடையூறு வேறு . 11:30 மணிக்கு முடியும் நிகழ்ச்சி .. எஸ். ஜே. சூர்யா வந்த நிகழ்ச்சி வரும் வாரம் ஒளிபரப்பாகும்.

'மக்கள் யார் பக்கம்' என்ற நிகழ்ச்சி ஈராண்டுகளுக்குமுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அரசியல் தலைவர்களும் , பத்திரிக்கையாளரும் கல்ந்துரையாடும் நிகழ்ச்சி . செல்வி .ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் ஏழு கட்சி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நேரம் . 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் திரு.பொன்முடி கலந்துகொண்டிருந்த நேரடி ஒளிபரப்பின் போது , சன் தொலைக்காடசியின் பங்குதாரராயும் இருந்த திரு.கருணாநிதி , தொலைபேசியில் தொடர்பு கொண்டு , 'மக்கள் , தாம் யார் பக்கம் என்று முடிவெடுத்துவிட்டரே!! , இன்னும் என்ன இந்த நிகழ்ச்சி என திரு.பொன்முடியையும் , விஜய் தொலைக்காட்சியையும் கடிந்துகொண்டதாக படித்தேன் . அந்த வாரம் முதல் அந்த நிகழ்ச்சி தொடரவில்லையாம் . ஒரு நிகழ்ச்சியை இடையூறு செய்வது என்ன நாகரீகமான் செயலா, அதுவும் ஒரு போட்டி தொலைக்காட்சியின் பங்குதாரர் . காரணமும் நியாயமாகப்படவில்லை .. தலைப்பைத் தெரிவு செய்வதும் அந்த தொலைக்காட்சியின் தனியுரிமை , மற்றும், 'மக்கள் அன்று உங்கள் பக்கமாய் இருந்தாலும் , அதற்கு முன் உங்கள் எதிர்ப்பக்கம் இருந்தார்கள். இனிமேலும் இருப்பார்கள் ' 'மக்கள் யார் பக்கம்?' என்பது எப்போதும் விடைதெரியா கேள்விதான் .

இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி , பெரும் வெற்றியடையக்கூடாது என விழைகிறேன் . அப்போதுதான் அதை தொடர்ந்து இடையூரில்லாமல் பார்த்து ரசிக்கமுடியும் .

மதுசூதனின் சூதுவாதம்

இந்த வாரத்தில் விழுந்த இரண்டாவது விக்கெட் விழுந்தது கொஞ்சம் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது . முதலில் விழுந்த வலையுலக டெண்டுல்கர் , க்ளீன் போல்ட் என்பதால் , இந்த விக்கெட் ஒரு சாதாரண எல் பி டபிள்யூவே என்பதால் இது கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன் .

இதே மாதிரியான பொய்களும் புரட்டுக்களையும் கடந்தே பல தடவை சென்றிருக்கிறேன் . பலமுறை மற்ற பதிவர்கள் தோலுரித்திருந்திருப்பார்கள் . இந்த விசயம் , கிறித்துவ மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்களுக்குதான் தெரியும் என்பதால் இதை எழுதுகிறேன் .

மதுசூதனின் போப் பற்றிய கேள்வியும் அதில் தன் முதுகை தட்டிக்கொண்டதுமான பற்றிய பதிவைப்பற்றிய எதிர்வினையே இந்தப்பதிவு . இதில் ஒரு கிறிஸ்தவர் இவரிடம் வந்து மத மாற்ற முயற்சி மேற்கொண்டாராம் . அதில் அவர் போப் பற்றிய கேள்வி கேட்டு அவரின் மூக்கை உடைத்தாராம் . மதமாற்ற முயற்சியை மேற்கொண்டார் . பஸ்ஸில் என்னை ப்ளேடு போட்டார் என்பதோடு நிறுத்தியிருந்தால் அதில் பொய் இருந்திருக்க வாய்ப்பில்லை . போப் பற்றி கேள்வி என்று சொல்லி தன்னுடைய அறியாமையையும் கற்பனாசக்தியையும் காட்டிக்கொண்டுள்ளார் .இதனை நண்பர் ஜோ அந்தப் பதிவிலேயே தோலுரித்தும்விட்டார் .

போப்பை தலைவராகக்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தினர் , தீவிர மதப்பிடிப்பாளர்கள் கூட, பஸ்ஸில் தெரியாதவர்களிடம் மதமாற்றப்பிரச்சாரத்தை செய்வதில்லை . அவர்கள் தான் அடிக்கடி கோயிலுக்கு போவது பற்றியும் , ஜெபமாலை செய்வது பற்றியும், வேளாங்கண்ணி வருடாவருடம் செல்வது பற்றியும் நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லி 'புனிதப்பசு'வாக காண்பிப்பதோடு அவர்கள் தன் 'ஆண்மீக' அரிப்பை தீர்த்துக்கொண்டு, தன் ஜாதி செல்வாக்கைப்பற்றிய இறுமாப்புடன் இருக்கும் சராசரி இந்தியனாகவே இருக்கிறார்கள் . பஸ்ஸில், ரயிலில் இதனை செய்வது ப்ரட்டஸ்டாண்ட்டில் உள்ள எல்லாப் பிரிவினரும்கூட இல்லை , 'இயேசு அழைக்கிறார்' , 'இயேசு இருக்கிறார்' என்றெல்லாம் பெயரை வைத்துக்கொண்டுள்ள தினகரன் வகையராக்களே .

மதுசூதன் அவர்கள் கத்தோலிக்கர் தான் செய்தார் என்பதற்கு சான்றாக தனக்குத் தெரிந்த கத்தோலிக்கர் செய்தார் என்று சொல்லியிருந்தால் அதனை நம்பியிருக்கலாம் . சில கத்தோலிக்கர் இந்த மாதிரி சபைகளுக்கு மதம் மாறி(?) இந்த கொடும்பணியை செய்வதுண்டு . அதனால் அவர் மதம் மாறினது மதுசூதனுக்குத்தெரியாமல் அவர் கத்தோலிக்கர் என சொன்னதாக நம்பலாம். ஆனால் அவர் சொன்னது ஒரு கத்தோலிக்க கோவில் பெயரை . இந்த மாதிரியான செயல்களில் கத்தோலிக்க சர்ச் ஈடுபடுவதில்லை . கோவிலில் மக்கள் முன்னால் செய்யும் பிரசங்களைத்தவிர வேறு ரயிலிலோ பஸ்ஸிலோ செய்வதை கத்தோலிக்கப் பாதிரியார்கள் கௌரவக்குறைச்சலாகவே எடுத்துக்கொள்வார்கள் .

பைபிள் என்று பொதுவாகச் சொன்னாலும் , கத்தோலிக்க பைபிளில் உள்ள எல்லாமும், மற்ற பிரிவினர் பயன்படுத்தும் பைபிளில் இருப்பதில்லை (அடுத்து பொய் சொல்லும்போது, இதை கவனத்தில் கொள்ளவும்) . தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் வித்தியாசம் . கத்தோலிக்க பைபிளின் மொழிபெயர்ப்பு அழகு தமிழில், வடமொழி கலப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும் . மற்ற சபையினரின் பைபிள் வடமொழி கலப்போடு , கொஞ்சம் வித்தியாசமான நடையிலே இருக்கும் . உதாரணமாக 'வாழ்வு' என்ற வார்த்தை 'ஜீவன்' என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் . வாக்கிய நடையும் கொஞ்சம் அந்நியமாக இருக்கும் . சிலபேர் ஆத்து, அவாள் எனக்கூறி தன் அடையாளத்தைக் காட்ட முனைவது போல , தன் மொழி நடையை மாற்றி, தான் சபையினரை சார்ந்தவன் என அடையாளத்தை காட்ட முனையும் அரசியல்தான் இது . ஒரு கத்தோலிக்க கோவிலால் அனுப்பபட்ட ஒரு கத்தோலிக்கர் , நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பே இல்லை . ஆனால் உங்களுக்கு , உங்கள் போப் பற்றிய அறிவை காண்பிக்க , அவரை 'கத்தோலிக்கர்' எனக்கூறுவது அவசியம் . நான் இங்கே எழுதுவது , கத்தோலிக்க மற்றும் பிறசபையினர் சண்டையாக திசை திருப்பப்படும். ஆனால் என்னுடைய ஒரே நோக்கம் மதுசூதனனின் பொய்யை அம்பலப்படுத்துவதுதான் .

இங்கே எனது அனுமானங்கள் .

மதுசூதனன் போப் இயற்பெயர் மற்றும் சில விபரங்களை படித்திருக்கிறார் . அப்போது இந்த விபரம் எல்லா கிறிஸ்தவர்களுக்கு தெரியுமா என்ற சந்தேகத்தில் , ஒரு கதையை எழுதியிருக்கிறார் .
(அல்லது)

மதுசூதனன் ரயிலில் சென்றபோது , ஒருவர் பிரச்சாரம் பண்ணியுள்ளார் . அவரிடம் போப் பற்றிய கேள்வி கேட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையை இங்கே அவிழ்த்துவிட்டுள்ளார் .
(அல்லது)

மதுசூதனன் ரயிலில் பிரச்சாரம் பண்ணியவரிடம், இந்த கேள்வியை கேட்டிருந்திருப்பார் . அவர் 'போப்பையும்' இரட்சிக்க அவரைத்தான் தேவன்(இறைவன்) தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற தொனியில் பேசி , மதுசூதனனை ஒரு வழி பண்ணியிருப்பார் . உனக்குத்தேவையா இது என வடிவேலு பாணியில் மதுசூதனன் நொந்துகொண்டிருந்திருப்பார்.

இதைத் தவிர வேறு எதுவும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை . இது மதுசூதனனின் பொய்யான கற்பனை .


பின்னூட்டத்தில் ஒரு அருமையான கருத்தைச் சொல்லியுள்ளார் , ஒரு கிறிஸ்தவன் , மற்ற சபையில் இருந்தால் கூட , போப் பற்றிய அறிவு இருந்திருக்கவேண்டாமா என்று .. ஒரு கிறிஸ்தவனுக்கு , அவன் கத்தோலிக்கனாய் இருந்தால்கூட, போப் பற்றிய அறிவு தேவையில்லாதது .
'ஜெய் ஹிந்த்' என சொல்லுபவர்கள் எல்லோருக்கும் , மன்மோகன் சிங் எங்கு பிறந்தார், அவர் எத்தனையாவது பிரதமர் , அவருடைய மனைவி பெயர் போன்ற விபரங்கள் தெரியவேண்டும் எனக் கூறுவது போல் . அதுவும் நீங்கள் கேள்வி கேட்டதாக கூறுவது ஒரு கத்தோலிக்கர் அல்லாதவரிடம் . இது ஒரு பாகிஸ்தானியிடம் 'மன்மோகன் சிங்' பற்றிய கேள்வியை கேட்டுவிட்டு , அவனுக்கு தெரிந்திருக்கவில்லையென்றால் ,கேலி பேசுவதற்கு ஒப்பான அறிவீனம் .

மதுசூதனன் பதிவின் பின்னூட்டத்தில் , Ven. Shravasti Dhammika அவர்களின் அனுபவம் நம்பும்படியாகவும் ,சுவையாகவும் , புத்திசாலித்தனமாகவும் இருந்தது . என்னிடம் யாரும் பிரச்சாரத்திற்கு வரும்போது இதே கேள்வியை கேட்க இதனை சேமித்துள்ளேன் . 1999 ஆண்டு , என்னுடைய ரூம் மேட் ஒருவன் , 2000 ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லிக்கொண்டே , H1Bக்காக அலைந்துகொண்டிருந்தான் . ;) ;)

ராமதாஸ் வாத்தியார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரத் தோட்டம் கிட்டத்தட்ட ஒரு காலேஜ் போலவே மாறிப்போயிருக்கிறது. எம்.எல்.ஏ., எம்.பி., நிர்வாகி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, பரீட்சை வேறு எழுதுகிறார்கள்!

தைலாபுரம் தோட்டத்தில் ஒரு அரசியல் பயிலரங்கத்தை அமைத்து அதன்மூலம் தனது கட்சியினருக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்த பார்வையை விசாலமாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். கல்வித்துறையில் பிரபலமானவர்களை வரவழைத்து வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்கிறார் அவர். அண்மைக்காலமாக வகுப்புகள் நடத்துவதோடு, தேர்வுகள் நடத்தி மார்க்கும் போட ஆரம்பித்திருக்கிறார் டாக்டர்! ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்தத் தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ள நாமும் பயிலரங்கத்துக்குச் சென்றோம்.

ஏதோ கல்லூரிக்குள் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் எட்டிப்பார்க்கும் அளவுக்குக் கையில் நோட்டுப் புத்தகத்தோடு இருந்தார்கள் பா.ம.க&வினர். சனிக்கிழமைகளில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ&க்களாக இருப்பவர்களுக்கு வகுப்புகள் அமர்க்களப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்ட அளவில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு, பெரியார் கொள்கைகள், சுயமரியாதை சம்பந்தமான விஷயங்கள், அம்பேத்கர் பற்றிய செய்தி கள், உலக வரலாறு, இந்திய, தமிழக அரசியல் வரலாறு, அரசியல் கட்சிகள் பற்றிய விவரங்கள் என பாடப்பிரிவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இவற் றோடு லேட்டஸ்ட் விவகாரங்களான துணை நகரத் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, நவீன வேளாண்மையில் இருக்கும் குறைகள் ஆகியவை குறித்த வகுப்பு களும் சேர்க்கப்பட்டிருக் கின்றன.

வகுப்புகள் தொடங்கப் படுவதற்கு முன்பாக அனைவருக்கும் ஒவ்வொரு கேள்வித்தாள் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் என்ன வகுப்புகள் எடுக்கப்பட இருக்கிறதோ அந்த சப்ஜெக்ட்களைப் பற்றிய கேள்விகள் அந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. இருபது மார்க்குக்குக் கேட்கப்படும் கேள்வித்தாளை முடிக்க வேண்டிய நேரம் பதினைந்து நிமிடங்கள்! பதினைந்தாவது நிமிடத்தில், ‘எல்லோரும் விடைத்தாள்களை ஆசிரியரிடம் கொடுத்து விடுங்கள்’ என்று அறிவிப்புச் செய்கிறார் டாக்டர் ராமதாஸ். அடுத்து விடைத்தாள்கள் அனைத்தும் பயிலரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசிரியர் குழுவால் திருத்தப்பட்டு, மார்க்குகள் போடும் பணி துவங்கி விடுகிறது. இதற்கிடையில் பயிலரங்கத்தில் வகுப்புகள் ஆரம்பமாகிவிடுகிறது. வகுப்புகள் முடியும் நேரம், தேர்வு முடிவுகளை ராமதாஸ் முன்னிலையில் ஆசிரியர்கள் வெளியிடுகிறார்கள். முதல் இடத்தைப் பிடித்த நபர்களின் பெயரைச் சொல்லும்போது, ‘எல்லோரும் கைதட்டுங்க’ என்று சொல்லும் ராமதாஸ், தானும் கைதட்டுகிறார். அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் நபர்கள் யார் என்று சொன்னாலும் யார் எவ்வளவு மார்க் என்பதை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறார்கள்.

இந்த வகுப்புகளில் பாடங்களை எடுப்பவர்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிதித்துறை செயலர் அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு சம்பளம் மணிக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மொத்தம் நான்கு வகுப்புகள், தலா ஒரு மணி நேரம் என நீள்கிறது. காலையில் நான்கு வகுப்புகள் முடிந்தபிறகு மாலையில் பல குழுக்களாகப் பிரிந்து நாட்டில் லேட்டஸ்ட் பிரச்னை என்னவோ அது பற்றிய விவாதங்களை ஆரம்பிக்கிறார்கள். விவாதம் செய்வதோடு நின்றுவிடாமல் தீர்வையும் எட்டுகிறார்கள்.

இந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழுவைச் சுற்றியும் நடந்தவாறே அவர்களது விவாதங்களைக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறார் ராமதாஸ். இலங்கைப் பிரச்னை தொடர்பாக விவாதம் செய்து கொண்டிருந்த ஒரு குழு, இலங்கை விஷயத்தில் போர்தான் தீர்வு என்ற அளவில் படு பரபரப்பாக விவாதம் செய்து கொண்டிருக்க, ‘அப்படின்னா இலங்கைக்குப் படையெடுத்துப் போகச் சொல்றீங்களா? அதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய அரசைத்தான் நாம் வலியுறுத்தணும். ஒட்டு மொத்த தமிழகத்தையும் இந்த விஷயத்தில் ஒன்று திரட்டி, நமது உணர்வுகளை வெளிப் படுத்தணும். அதுதான் அங்குள்ள தமிழனுக்கு நாம் உடனடியாக செய்யும் பேருதவி’ என்று தனது கருத்தைச் சொல்கிறார் ராமதாஸ்.

விவாதத்தில் சினிமா பற்றி இல்லாமலா? ஆனால், ரஜினி பற்றிய எந்த விஷயமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக சினிமாவில் கவர்ச்சிக் காட்சிகள், இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்துப்போகும் விஷயங்கள் தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கின்றன.

பெரும்பாலும் தேர்வுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது குறிப்பிட்ட ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான். அவர்கள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், பா.ம.க&வின் இளைஞர் அணிச் செயலாளர்களான அறிவுச்செல்வன், அருள், சென்னை மாநகாராட்சியின் நகரமைப்புக் குழு தலைவர் பிரகாஷ், எதிரொலி மணியன், டி.கே.ராஜன் ஆகியோர்தான். இவர்களில் வேல்முருகன், அறிவுச்செல்வன், அருள் ஆகியோர், ‘இதுக்கு ஏன் மார்க் போடலை சார்? இது சரியான பதில்தானே? இவருக்கு மட்டும் மார்க் போட்டிருக்கீங்க?’ என்று பள்ளிக் குழந்தைகளைப் போலவே ஆசிரியர்களிடம் போய் முறையிடுகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

‘‘அரசியலைப் பொறுத்தவரை ஒண்ணுமே தெரியாம எதையாச்சும் செஞ்சு மேல வந்துட்டாப் போதும்னுதான் நினைக்கிறாங்க. பொது மக்களுக்கு சேவை செய்யற இடத்துல இருக்கறவங்க, அரசாங்கத்தையே நடத்தப் போறவங்க அதுகுறித்த அறிவு இல்லாம இருக்கறது நாட்டுக்கு நல்லதில்ல. அதனாலதான் அய்யா இதை ஆரம்பிச்சாங்க. இந்த வகுப்புகள் எல்லாம் எங்களை எவ்வளவு தூரத்துக்கு முன்னேற்றியிருக்குன்னா ஒரு பட்ஜெட்டே போடுற அளவுக்கு முன்னேற்றியிருக்கு. ஒரு பட்ஜெட்டை சபையில படிக்கிறப்பவே அது நல்ல பட்ஜெட்டா இல்லையானு சொல்ற அளவுக்கு எல்லோரும் தேறியிருக்கோம்’’ என்றார்கள்.

வாத்தியார் அவதாரம் எடுத்திருக்கும் டாக்டர் ராமதாஸிடம் பேசினோம். ‘‘தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதி நிதிகள், அரசு போடும் திட்டங் களின் சாதக&பாதகங்களை ஆராய்ந்து, அந்தத் திட்டங்களை தங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் காலம் இது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அளவுக்கு எங்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும், இதில் அவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் நினைத்ததைவிட அனைவரும் வகுப்புகளிலும், தேர்வுகளிலும் அதிகமாகவே அக்கறை காட்டுகிறார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அல்லது அரசியலுக்கு வந்தவர்கள் பொது விஷயங்களைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிலரங்கம்’’ என்றார்.

நன்றி ஜுனியர் விகடன்

நூடுல்ஸ் செய்வது எப்படி?

எண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு , கடாயில் ஊற்றி , அது காய்ந்தவுடன் முட்டையை அடித்து ஊற்றி, கொஞ்சம் உப்பை சேர்த்தவுடன் , மூடி போட்டு , கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளவும்.

இன்னோரு கடாயில் , தண்ணீரை ஊற்றி, கொதித்தவுடன் , நூடுல்ஸை பிரித்து கொட்டி , ஒரு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் .

இதனிடையில் ,.முதல் கடாயில் உள்ள முட்டையை திருப்பி போட்டிருக்கவேண்டும் . முட்டை பர்கரிலுள்ள முட்டை போல வந்தவுடன் , அதனை கொஞசம் கிண்டிவிட்டு, வெளியில் எடுத்தவுடன் , அந்த கடாயில், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , நறுக்கிய வெங்காயமும், வெள்ளைப்பூண்டும் சேர்த்து , வதக்க வேண்டும் . பொன்னிறம் ஆகும்போது , தக்காளி வெட்டி அதனுடன் சேர்க்க வேண்டும் . இவற்றை அவ்வப்போது கிண்டிவிட்டுக்கொள்ளவேண்டும் . இதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிண்டிவிடவேண்டும் . பின், பொடியாக வெட்டிய பீன்ஸயும், தொடர்ந்து , கேரட் பச்சை பட்டாணி முதலியவற்றை சேர்த்து , கொஞ்ச நேரம் வேகவைக்க வேண்டும் . காய் வெந்தவுடன் அதன் மேல் , இன்னொரு கடாயில் வைத்திருந்த நூடுல்ஸையும் , முட்டையையும் கலக்கி, இன்னும் கொஞ்சம் நேரம் அடுப்பில் வைத்து , எடுத்து விடவும் .

என் மதமும் வெளிநாட்டுப் பணமும்

பரபரப்புக்குள்ளாயிருக்கும் ஆனந்த்ராஜ் , பிஷப் என்றே குறிப்பிடப்படுவதால் , தங்கள் மரியாதையும், புனித பிம்பங்களும் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கத்தோலிக்க பிஷப்புகள் அறிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.(Sun News) அவர்கள் அறிக்கையில் உள்ளவாறு ஆனந்தராஜுக்கும் கத்தோலிக்கிற்கும் சம்பந்தம் இல்லைதான் . ஆனால் இந்த பிஷப்புகள் மற்றும் கத்தோலிக்க குருமார்களுக்கும் , பண மோசடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை விட முடியுமா?

எனக்கும் மதமாற்ற கோஷ்டிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை, சில பேர் என்னிடமும் வந்து , அவர்கள் குழுவுக்கு மதம் மாறச் சொன்ன எரிச்சலுற்ற தருணங்கள் தவிர . மதமாற்றத்தில் ஏதாவது பண ஆதாயம் அவர்களுக்கு கிடைக்குமா என எனக்குத் தெரியாது.

நான் சொல்கிற விஷயம் எவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால் கேள்விப்பட்ட, கேள்விப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதப்படுத்துகிற நிகழ்வுகளை வைத்து அது உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன .

ஆனால் எல்லா குருமார்களும் அப்படியில்லை. சேவை செய்வதை எண்ணமாக கொண்ட பலரும் உண்டு. அப்படியொரு குரு, அவருக்கு பெல்ஜியத்திலிருந்து பணம் வந்துகொண்டிருந்தது. பல ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் . பசு மாடு, நிலம் என முடிந்தளவு செய்தார் . ஆனால் இதுவெல்லாம் தன் பணமில்லை, வெளிநாட்டிலிருந்து வருகிறது என்றும் சொன்னார். (பயணடைந்தவர் எல்லோரும் கிறித்துவர்கள் இல்லை . யாரும் மதமும் மாறவில்லை). பெல்ஜியத்திலிருந்து பணம் அனுப்பும் வெள்ளைக்காரர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தனர் . கிராமத்தினர் முன்னிலையில் , அந்த வெள்ளைக்காரர்களிடம் செலவுக்கணக்கு படித்துக்காட்டப்பட்டது. அந்த வெளிநாட்டவரிடம் பேசியபொழுது, அவர்கள் இங்கு பணம் அனுப்புவது இங்குள்ள ஏழைகளுக்கு உதவும் நோக்கம் அன்றி, அதை ஒரு இறைப்பணி என்று நினைத்து செய்வதேயன்றி வேறு எந்த உள்நோக்கம் இல்லை எனப் புரிந்தது. அதில் சிலர் கிறிஸ்தவர்கள் கூட இல்லை . சிலர் தன் வேலை நேரம் போக , பகுதி நேர வேலை செய்து, அதில் ஒருவர் பகுதி நேர வேலையாக டாய்லெட் கழுவுவதாகக்கூடச் சொன்னார் . குருமார்கள் நம்பிக்கைக்குறியவர்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் குருக்கள் மூலமாக பணம் அனுப்புகிறார்கள். ஆனால், இந்த குருவைப்போல எல்லோரும் நம்பிக்கைத்துரோகம் பண்ணாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி?


திடீரென கோவில் (சர்ச்) வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது . குடமுழுக்கு போன்ற ஒரு விழாவும் எடுக்கப்பட்டது.. பாதிரியாரும் , சில சிஷ்ய கோடிகளும் , கோவிலைச் சுற்றி புகைப்படம் எடுத்தார்கள் . மக்களுக்கு சந்தோஷம். புகைப்படம் எடுத்தது வெளிநாட்டிற்கு அனுப்ப. கோவில் கட்டியதற்கு அத்தாட்சி வேண்டாமா? .கோவில் கட்ட பணம் வாங்கி, கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது ஒரு வழக்கம் என பின்னால் அறிந்தேன் .

இன்னொரு இடத்தில் , குரு தங்கியிருந்த வீடு ஒரு டீஸன்டாகத்தான் இருக்கும் . வீட்டைச் சுற்றிலும் தோட்டமும் தென்னை மரங்கள் உட்பட நிறைய மரங்களும் அதில் இருந்தன. அவருக்கு முன் இருந்த குருக்கள் வளர்த்தது . அவர் வெளிநாடு சென்று வந்தார் . கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது . அவருடைய வீடு இடிக்கப்பட்டது , மரங்களும் வெட்டப்பட்டன . தெற்கு வடக்காக இருந்த அவருடைய வீடு கிழ்க்கு மேற்காக மாற்றப்பட்டது . பழைய வீடு அவர் டேஸ்ட்டுக்கு இல்லையோ அல்லது வாஸ்து போன்ற கருமாந்திரமோ. மரங்களை வெட்ட எப்படித்தான் மனசு வந்ததோ .

இன்னொருவர் , வெளியில் தெரியுமளவுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் . நல்ல கார் ஒன்றை வாங்கிக்கொண்டார் . தன் சகோதரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லிக்கொண்டார். (அந்த சகோதரி அந்தப் பகுதி என்பதால் அது நம்பும்படி இல்லை) வெளியில் பெயர் கெட , பிஷப் மாற்றல் உத்தரவு போட்டார். அதற்கும் அடிபணியவில்லை.அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? அமெரிக்காவுக்கு மாற்றல் . வேறு வழி ?

வேளாங்கண்ணி கோவிலில் பணி(?) செய்ய தஞ்சை மறைமாவட்ட குருக்களிடையே பெரும்போரே நடக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஒருவர் அங்கே பங்குத்தந்தையானவுடன் அவரை பணிமாற்றம் செய்வதும் பிஷப்புக்கு கடினம் . அங்கே பணி செய்ய ஏன் அவ்வளவு போட்டி என்ற காரணத்தை சொல்லியா தெரியவேண்டும் ?

இங்கே எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே சொல்லியுள்ளேன் . இதற்கும் மேல் எத்தனையோ? மாட்டிக்கொள்ளாததினால் இவர்கள் ஆனந்த்ராஜை விட உத்தமர்கள் இல்லை . ஆனால் ஒன்று, ஆனந்த்ராஜ், சங்கராச்சாரி போன்றோரே மதங்கள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை முழுமையாக புரிந்தவர்கள் . அதனை ஒழுங்காக செய்கிறார்கள் ..

மீதி அடுத்தப் பதிவில்

தெய்வங்களான பலி ஆடுகள்-2

முதல் பகுதி இங்கே. நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா, அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க . அந்த குடும்பத்தை சேர்ந்த ராக்கு முத்துத் தேவர்க்கு ஒரு அழகான மகள் இருந்தா . அவ பேரு பூவாத்தா , பூவாத்தா செக்க செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு .

ஒருநா பூவாத்தா குளத்துக்கு குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து, குளத்துக்கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, , தன் தலைக்கு சிக்கு எடுத்துகிட்டிருந்தா . அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு சூறாவளி காத்து அடித்து, அவளோட முடி, பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு . அத பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாததா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜாதான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா .

இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி, கோவத்துல தன் கையில இருந்த வாளால, கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .

தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய் செர்ந்து 'நடந்த கதை'யை தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா . அண்ணன்மார்களுக்கு கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய . அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியனும்! வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .

இதுக்கிடையில , மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு , 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன் .எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .

'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லொருமாச் சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .

குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரை பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டு பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கபடுத்துனது காணாது, பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேறதான் . அதனால , நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுகொடுக்ககூடாது' என்றார் .

பிறகு , ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி , 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம்தான் முக்கியம். இந்த ராஜாவுக்கு பெண் கட்டி கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது . ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது . அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கனும்' என்று முடிவெடுத்தாஙக .

அதுபடிக்கு மறுநாள் , அரண்மனைக்கு வார வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டு பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம் . வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .

வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி , புதுச்சேலை , சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு , சாமிகும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு , நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரிய்லே. என்றாலும் ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.

காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம் . மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் , ரொம்ப பெரிசு . அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப்பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .

மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கன்னியை (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தாணியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி , வழுவி, சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .

பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப்போயி , மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடி கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள் . அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான் . பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது .

பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள் . 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள், 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே, காடக்கன்னி குவியலில் மூழ்கி , மூச்சுத் திணறி செத்துப்போனாள் .

அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப்பூட்டி, அரண்மனைக்கு அனுப்பிவிட்டு , காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா, ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க .

அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வைச்சு கும்புடுறாங்க' .

நன்றி: மண் மணக்கும் மனுஷங்க

அவள் அப்படித்தான் - விமர்சனம்

'பண்ணீர் புஷ்பங்களே..' என்ற பாடல்தான் எனக்கு முதலில் அறிமுகம் . என் குரலுக்கு சரியாக அமையும் பாடல் என (தவறாக) நினைத்து, ஏதாவது ஒரு போட்டியில் இதை பாட வேண்டும் என எண்ணியிருந்தேன் . (நல்ல காலம் அது ஈடேரவில்லை.) பின்பு ஒரு முறை சிங்கப்பூர் வானொலியில் (ஒலி 96.8), 'உறவுகள் தொடர்கதை' என்ற பாடல் ஒலியேற்றப்பட்டபோது , அந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது . முதல்முறை அது எந்த படத்தின் பாடல் என கவனிக்கத் தவறியதால் , மீண்டும் அந்த பாடலை ஒலிபரப்புவார்களா என காத்திருந்த பொழுது, ஒலி அறிவிப்பாளர் கீதா அவர்களால் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டபோது, 'அவள் அப்படித்தான்' எனக்கு அறிமுகமானது. அதுமுதல் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவே முதலானது . நண்பர்களுடான பகிர்தலில் இது ஒரு பாலச்சந்தர் படம் என்றே தவறான தகவலே எனக்கு கிடைத்தது, ஞாயிறன்று வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்வரை .

இதுவும் ஒரு வகையான பாலச்சந்தர் வகைப் படமே . ஆனால் 'படாபட்' என கிறுக்குத்தனமாக உளரும் கதாநாயகி இல்லை இதில், லூசுத்தனமான விடுகதை போடும் கதாப்பாத்திரங்கள் இல்லை . இரத்தமும் சதையுமாக நம்மிடையே இருக்கும், நாமாக இருக்கும் கதாபாத்திரங்களே இவை . இவன் நல்லவன், இவன் கெட்டவன் என தீர்ப்புகள் இல்லை, க்ளைமாக்ஸில் திருந்துவனும் இல்லை, திருத்துபவனும் இல்லை . தீர்வும் இல்லை.

இரு கதாநாயகிகள் ஒருவனை காதலித்து, கதாநாயகன் அதில் ஒருத்தியை திருமணம் செய்யும்போது, இன்னொரு கதாநாயகி , இன்னொருவனை திருமணம் செய்தால், கற்பு போய்விடும் என, அந்த கதாநாயகியை சாகடிக்கும் தமிழ் சினிமா சூழலில் , இந்த படத்தில் , ஏற்கனவே இருவரால் காதலிக்கப்பட்டு, அதில் ஒருவனிடம் கற்பையும் பறிகொடுத்து அதனையும் மிகவும் மனத்தெளிச்சியுடனே செய்தவள், ஒரு கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள் , இந்த கதாநாயகி என்பதே ஒரு புதுமை . இதில் நடித்த ஷ்ரீப்ரியாவிற்கு பாராட்டுகள் .

'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு காபரே ஆட்டக்காரி சொல்வது முதல் ஆரம்பிக்கிறது படத்தில் சாட்டையடிகள், உங்களுக்கும் எனக்கும் . கதாநாயகன் பெண்களை பற்றி குறும்படம் எடுக்க கோவையிருந்து சென்னை வருகிறான் . பெண்ணுரிமை பேசுகிறான் . கதாநாயகியின் சோகங்களை பரிவுடனே கேட்டுக்கொள்கிறான் . அவளின் 'கற்பு' கதை தெரிந்து அவளை காதலிப்பதாக 'க்ளைமாக்'சில் , அவளிடமில்லை , அவள் தோழியிடம் சொல்லி தன் புனித பிம்பத்தை காத்துக்கொண்டு, திருமணம் செய்வதோ , 'பெண்ணுரிமை' பேசாத , ஒரு அடக்கமான பெண்ணை .. .

கதாநாயகி , போலி வேஷங்களை சாட்டையடி அடிப்பவள். சோஷியல் ஒர்க்கரை பேட்டி காண செல்லும்போது, வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , சோஷியல் ஒர்க்கர் என்னும் மேக்-அப்பே போதும் என்று சொல்பவள், ஆனால் தன் பெற்றோர் பாரிஸில் உள்ளனர் என போலி வேடம் போட எத்தளிப்பவள். சமூகத்திற்காக கணவன் மனைவியாக இருக்கும் பெற்றோர்களாலும், தன்னை காதலித்து சீரழித்தவன் தன்னையே தங்கை எனக்கூறி உறவுகளை கொச்சைப்படுத்துவதாக வாதம் செய்பவள் , உறவுகளை வெறுப்பதாக கூறுபவள் , உறவுக்காக, அன்புக்காக ஏங்கி ஒருமுறை இல்லை, இரு முறை ஏமாந்தாலும் மூன்றாம் முறையும் காதலிக்கிறாள் ஏமாறுவதற்காகவே .

மூன்றாவதாக ஒரு கேரக்டர் . கதாநாயகன் கமலின் நண்பனாக, கதநாயகி ப்ரியாவின் முதலாளியாக, ரஜினிகாந்த் . நம்மில் பலரின் பிம்பம் . பெண்களை போகப்பொருளாக எண்ணுபவன் . தன் சொந்தக்காலில் நிற்கலாம் என பெண்கள் நினைப்பதையே பாவம் என நினைக்கும் ஆச்சாரியான்(?) அவன் . சந்தர்ப்பம் கிடைக்கும்போது , கதாநாகியிடம் கலவிக்கும் ஆயத்தமாகிறான். அவள் அறைந்தவுடன் , கற்பழிக்க எத்தளிக்கவில்லை. 'உன்னை அடைந்தே தீருவேன்' என பொதுவான வில்ல வசனம் பேசவில்லை..... அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறான் . வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவன் நம்மைப்போலவே .

கதாநாயகின் இரண்டாவது காதலன். ரவீந்தர் என நினைக்கிறேன் . நல்லவன். பக்திமான் . கதநாயகியுடனான உறவுக்குப்பின் தவறு செய்துவிட்டதாக அழுகிறான் . தவறை தெரிந்தே செய்த பின் , அதனை மறைத்து, பின்னர் உணராமல் செய்து விட்டதாக பாவமன்னிப்பு கேடபவர் எத்தனை பேர். ஆனால் இச்சை முடிந்தவுடன் தன் வேஷம் கலைந்து தன் காதலியை சகோதரி என்கிறான் . பக்திமான்களுக்கே உரிய புத்தி. குரூரம். வெளிவேஷம் .

க்ளைமாக்சில் நாயகன் மனைவியிடம் (சரிதா?), நாயகி 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்' எனக்கேட்க, அவள் ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என 'அதனால்தான் நீ சந்தோஷமாய் இருக்கிறாய்' என்பாள் கதாநாயகி. ’அவள் மீண்டும் இறந்து போனாள், அவள் இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . . அவள் அப்படிதான்’’என்ற பின் குரலோடு படம் முடியும் . இந்த படத்தில் எந்த தீர்ப்பும் சொல்லப்படவில்லை . யாரும் திருந்தவில்லை. எனவே அவள் மட்டுமில்லை அவர்கள் எல்லோருமே அப்படித்தான் .

இயக்குனர் ருத்ரையா மனித உறவுகள் , எண்ணங்களோடு ஒரு காவியமே உருவாக்கியிருக்கிறார் . பாலச்சந்தர் போன்றவர்கள் அளவுக்கு மீறி போற்றப்படும் சூழலில், ருத்ரையா போன்றோர் வாய்ப் பில்லாமல் தவிப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு . பெயரை வைத்து அவர் தெலுங்கர் என நினைத்தேன். ஆனால் அவர் சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்தவர் என்றும், இன்றும் திரைப்படம் எடுப்பதே இலட்சியமாக இருப்பதாகவும், கார்த்திக்கை வைத்து ஒரு த்ரில்லரை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன் . குத்தாட்ட கூமுட்டைகளிடமிருந்தும் பஞ்ச் வசன பரதேசிகளிடமிருந்தும் தமிழ் சினிமாவுக்கு எப்போது விடுதலையோ ?

காக்காக்கூட்டம்

அடுத்த மாதம் 23-ந் தேதி முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா. இதற்காக 22 மற்றும் 23-ந் தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பாராட்டு விழா நடக்கிறது. இது குறித்து விழாக்குழுவின் தலைவர் ராம. நாராயணன், செயலாளர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கருணாநிதியின் வரிச்சலுகை, படப்பிடிப்பு கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் சிறு முதலீட்டாளர்களுடன் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற, நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், தொழிலாளர் சம்மேளனம் சார்பில் விஜயன் தலைமையில் ஒரு குழுவும், விநியோகஸ்தர் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையில் ஒரு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அண்ணாமலை, அபிராமி ராமநாதன் ஆகிய இருவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழாவில் கலைநிகழ்ச்சி, ஓரங்க நாடகம், காமெடி தர்பார், இன்னிசை என நவரசங்களும் இடம் பெறுகிறது. கருணாநிதியின் புகழ்பாடும் ஒரு புத்தகமும் விழாவில் வெளியிடப்படுகிறது.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவர். அதற்காக கவலை வேண்டாம். எப்படியும் சன் டி.வி.யில் ஒரு சன்டே இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமலா இருப்பார்கள்!
நன்றி : சினிசௌத்

தெய்வங்களான பலி ஆடுகள் ..

'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் . அதோடு பரிதாபமாக செத்த அந்த கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாக தனக்கோ , தன் குடும்பத்திற்கோ, அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப்பெண்ணை குலதெய்வமாக்கி வழிபட்டு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது . பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூறமுடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .

சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன் , வலிமையானவனை எதிர்த்து போராட முடியாமலும் , தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக்கொடுக்கமுடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தபோது , தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .

இங்கே சொல்லப்படப்போகிற கதையும் வழக்கமான 'கன்னித் தெய்வ வழிபாடு' சார்ந்த கதைதான் . ஆனால் அதில் அந்த பெண்ணை கொலை செய்த முறை மட்டும் புதுமையாக இருந்தது .. இனி கதை .. அடுத்த பதிவில் .

நன்றி : தாராமதி

கருணாநிதி.. ஜெயலலிதா.. கிறிஸ்தவம்

'கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகக்கூடாது' என்று சிந்தித்த கருணாநிதி நாத்திகர் என சொல்லிக்கொள்வது ஒரு முரண்பாடுதான் . இதே சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு வந்தது.. அவர் இயேசு.. அவருக்கு கோபம் வந்ததாக பைபிளில் கூறப்படும் ஒரே இடம் அதுதான் . இறைவனின் இடத்தை கள்வரின் குகைகளாக்காதீர் என கோபப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .எப்போதும் அப்படித்தான் .. கள்வர்கள் குடியிருக்கும் இடம் கோவில்தான் போலிருக்கிறது .. இயேசு காலத்திலும் .. கருணாநிதி காலத்திலும் ..

ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் . 'பல்லுக்கு பல் ..கண்ணுக்கு கண் ' என்ற சட்டத்தை கடிந்து , 'இறைவனையும் மனிதனையும் அன்பு செய்வதே' தன் சட்டமாக்கி , அந்த நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க சொன்ன இயேசுவை பின்பற்றுவதாக சொல்லும் இந்த கிறித்துவ மத குருமார்கள் 'மதமாற்றம்' என்பதை இயேசுவே சொன்னதுபோல் திரித்து அலைவது இயேசுவிற்கு செய்யும் பெரும் துரோகம் .. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய பவுல் கூட , அவர் பல பிற்பட்ட சட்டங்களை வலியுறுத்தியிருந்தாலும் , மதமாற்றத்தையல்ல மனமாற்றத்தைத் தான் வலியுறுத்தியுள்ளார் . கிறிஸ்தவர்கள் தன் வாழ்வியல் நடைமுறைகளால் , மற்றோரை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார.. ஆனால் பல அரசியல்களில் சிக்குண்ட கிறிஸ்தவ மதங்கள் , கிறிஸ்துவை பின்பற்றுவதாக சொல்லும் பல போலிக்கள் இன்று பல அரசியல் காரணங்களுக்காக மதமாற்று வைபவத்தை நடத்துவது இயேசுவுக்கு செய்யும் துரோகம் . கிறித்துவம் தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் , பணத்திற்காகவோ , வியாதி , சாதீய காரணங்களுக்காகவோ, மற்ற எந்த காரணத்திற்காகவோ மதம் மாறுவதும் தடை செய்யப்படவேண்டும்., இதனை செய்யவேண்டியது மதகுருமார்கள் .. இதனை இந்த போலிக்கள் செய்யாமல், கிறிஸ்துவத்தை உயர்த்தும் இந்த சட்டத்தை எதிர்த்தது கேலிக்குறியது.

சினிமாவும் அரசியலும்

சினிமாவும் மக்களை ஏமாற்றுகிறது. அரசியலும் மக்களை ஏமாற்றுகிறது . சினிமாவில் காட்சிகளின் மூலம் மக்களை அழ வைக்கிறோம் . சிரிக்க வைக்கிறோம் . எமோஷனலாக வைக்கிறோம் . அரசியல் கட்சிகளும் இதே உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துகினறன. தலைவர்களின் அறிக்கைகள் , மேடை பேச்சுகளின் மூலம். இப்படி ஒரே காரியத்தைச் செய்யும் சினிமாவும் , அரசியலும் சில விஷயங்களில் மட்டும்தான் வித்தியாசப்படுகிறது .

சினிமாத் துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர்கள், விழா மேடைகளில் சந்தித்துக் கொள்ளும்போது ஆரத் தழுவி அன்பு செலுத்துவார்கள் . மைக்கைப்பிடித்து பாசமழை பொழிவார்கள். உள்ளுக்குள் ஒருத்தர்மீது இன்னொருத்தருக்கு கருத்து வேறுபாடும் , கசப்பான எண்ணமும் இருக்கும் .
அரசியலில் இதற்கு நேர்மாறானது நடக்கும், மேடைகளில் ஒருத்தரை ஒருத்தர் திட்டித் தீர்ப்பார்கள். ஜென்ம விரோதி போல் வார்த்தைகளை வீசிக் கொள்வார்கள் .ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் அன்னியோன்யத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் .

இது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர்த்து , மற்ற எல்லா வகையிலும் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை . தமிழக அரசியலில் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக சினிமா கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் இந்த ஒற்றுமைதான் காரணம்.

அரசியலை மிஞ்சியதுதான் சினிமா. கயவர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று சொல்வார்கள். சமீப காலமாக அந்த நிலைமை மாறி , சினிமா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது .
சமுதாயம், இன்று சினிமாக்காரர்களை தேவதூதர்களாக நினைக்கிறது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் சினிமாக்காரர்களின் முதுகில் பயணம் செய்கின்றன் . கட்சிகளின் இந்தக் கணக்கு புரியாமல் நம் நட்சத்திரங்கள் அரசியலில் ஆரவம் காட்டி வருகின்றனர் . இவர்களது ஆரவ்த்தின் பிண்ணணி மக்கள் சேவை அல்ல . சினிமா மீது அவர்களுக்கிருக்கும் அவநம்பிக்கைதான் .

சினிமாவில் மார்க்கெட் போய்விட்டால் மனைவிகூட மதிக்கமாட்டாள் . அப்படியொரு நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் சினிமாவைப்போலவே கவர்ச்சிகரமான தொழிலாக இருக்கும் அரசியலுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறாரகள்.

இவர்கள் அரசியலை ஆக்ரமித்தால் , எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?

சினிமாக்காரர்களுக்கு ஈகோ பல மடங்கு அதிகம் . கல்யாண வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளையாகவும் , சாவு வீட்டுக்குப் போனால் சவமாகவும் இருக்க நினைப்பார்கள். எங்கும் நாமே முதன்மையான் ஆளாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள் .

இப்படிப்பட்ட சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உடைய சினிமாக் கலைஞர்களால் அவமானத்தையோ , புறக்கணிப்பையோ தாங்கிக் கொள்ள முடியாது .

பொதுவாகவே அரசியலில் தனிப்பட்ட ஒருவர் செல்வாக்குப் பெற முடியாது . அப்படிச் செல்வாக்குத் தேடி வரும்போது, கட்சித் தலைமையே கட்டம் கட்டி, அவரைச் செல்லாக் காசாக்கி வேடிக்கை பார்க்கும் . பல கட்சிகள் உருவானதற்கும் , பல தலைவர்கள் உருவானதற்கும் இப்படியான அரசியல் விளையாட்டுக்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.

இந்த அனுபவம் சினிமா கலைஞர்களுக்கு ஏற்படும்ப்பொது அவமானத்தை அதிக நாட்கள் அவர்களால் தாங்க முடியாது. தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்காக உடனே தனிக்கட்சி தொடங்குவார்கள் . புற்றீசல் போல் பெருகும் நட்சத்திரங்களின் தனிக் கட்சிகள் தாக்குப் பிடிக்குமா என்றால் முடியாது என்ற சொல்வேன். சில வருஷங்கள் இயங்குவது போல் தெரியும். சில வருஷங்கள் பரபரப்பாக இயங்குவது போல் தெரியும் அப்புறம் அடங்கி போய்விடும் .

கலை வேறு , அரசியல் வேறு என்ற முடிவுக்கு வந்து மக்கள் தெளிந்து விடுவார்கள் . அந்த தெளிவின் அடிப்படையில் மக்கள் சொல்லும் தீர்ப்பு நட்சத்திரங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.


- கேயார் எழுதிய 'இதுதான் சினிமா'விலிருந்து உருவப்பட்டது .


சினிமாத்துறையைப் பற்றி அவர் எழுதிய மற்றொரு பகுதி கீழே கொசுறாக..

சினிமாத்தோழில் முடங்கியதற்கு , ப. சிதம்பரம் கொண்டுவந்த வி.டி.ஐ.எஸ் திட்டம் ஒரு காரணம் . இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெள்ளையாகிவிட்டது. இப்படி வெள்ளையாக்கப்பட பணம் சினிமாவில் புழங்கி வந்த பணம்தான் . வி.டி.ஐ.எஸ் திட்டத்தினால் அந்த பணத்தை இழந்துவிட்டது சினிமாத்துறை !

பட்டம் சூட்டு விழா

மாமனிதர் மகான் ஷிவாஜி கணேஷன் அவர்களின் சிலை திறப்பிற்கு பெரும் ஆபத்து வர இருந்த நிலையில் , அவரின் ஆருயிர் நண்பரும், அரசியல் சாணக்கியரும், முக்கியமாக இன்றைய முதல்வருமாகிய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருவாரமாக தூங்காமல் உறங்காமல் மன உளைச்சல் கொண்டார்கள் .

சிலைக்காக மன உளைச்சல் கொள்வது இதுதான் முதல்முறையா? இல்லை இல்லை பல முறை பல்லாயிரம் முறை. சுனாமி அலை வந்த போது கூட வள்ளுவர் சிலைக்கு ஆபத்தோ என்று மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான் நம் முதல்வர் .

இதுமட்டுமா கண்ணகி சிலைக்காக எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் நம் தலைவர் என இந்த உலகிற்குத் தெரியாதா என்ன?

நமது முதல்வரின் மன உளைச்சல்களை பாராட்டி "சிலைகாக்க மன உளைச்சல் கொண்டான்" என்ற பட்டத்தை இம்மாமன்றம் சூட்டுகிறது .

பி.கு :

இம்சை அரசன் படத்திற்கும் இந்த பட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .

சினிமா ...சிலை... கூத்து

சிவாஜி வேடத்தில் நாடகத்தில் ஒருவர் நடித்தாராம்.. மிகவும் நன்றாக நடித்தாராம்.. கண்டிப்பாக நனறாக நடித்திருப்பார். அவரை புகழ்ந்து பேசிய ஒருவர் அவரை 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினாராம் . ஆதலால் அவர் பெயர் சிவாஜி கணேசனாம்.. 'சிவாஜி' நாடகத்திற்கு பிறகு அவர் பாகப்பிரிவினை , தெய்வமகன் போன்ற படங்களில் பல வேடங்களில் சிறப்பான வேடங்களை வழங்கவில்லையா? அந்த வேடங்கள் பெயரில் அவர் பெயர் ஏன் மாறவில்லை . இதில் ஆரம்பித்தது.... கேப்டன் பெயர் வைத்த படத்தில் நடித்ததில் கேப்டன் என்ற பட்டம் வந்து சேர்ந்து விட்டது . அவர் 'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ? சொரிந்து விட்டவர்களுக்கு தெரியாதா எந்த இடத்தில் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்குமென்று?

ரசிகர் மன்றம் வைப்பது சாமான்யர்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலை வைக்கிறார்கள் .. மாமனிதராம் ..மஹாத்மாவாம்.. ம்ம்.. தெய்வமாவது எப்போதென்று தெரியவில்லை ? இனிமேல் மணிமண்டபம் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும் . அதற்கும் இந்த அரசாங்கம் செவிசாய்க்கும்.. சாதனைப் பட்டியலிலும் அது இடம் பெறும். இதைத்தானே இந்த அரசாங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. வள்ளுவருக்கு பெருமை சேர்க்க கோட்டம் கட்டினார்களாம், சிலை வைத்திருக்கிறார்களாம் .. வள்ளுவனுக்கு பெருமை , தமிழனுக்கு பெருமை திருக்குறள்தானே தவிர கோட்டம் இல்லை . சிலை இல்லை .

மக்களின் பணத்தை விவேகமாக செலவு செய்வது அரசாங்கத்தின் கடமை இல்லையா? அதனை ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா மக்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்?

இதில் வேறு நட்பின் இலக்கணமாக சிலை வைக்கிறார்களாம். நட்பின் இலக்கணததை காண்பிக்கவேண்டுமென்றால். தன் பணத்தில் , தன் சொந்த இடத்தில் , தங்க சிலையையே வைக்கலாமே? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்களாம் . இதுதான் நட்பாம். வெட்கமாயில்லை .

சிலை வைக்கவேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மேடையில் பேசியவர்கள், இந்த விழாவிற்கு வந்து தியாகம் செய்தவர்கள், ரசிக மகாஜனங்கள் இவர்கள் பணம் கொடுத்து, வசூல் செய்து சிலையை, தங்கள் சொந்த இடத்திலோ, தனியார் இடத்தை பணம் கொடுத்து வாங்கியோ, தங்கள் அன்பை காண்பித்திருக்கலாமே? பணம் இல்லாதவர்களா இவர்கள்? பஞ்ச பரதேசிகளான மக்களின் வரிப்பணம்தானா இவர்களுக்கு கிடைத்தது.?

மகாநடிகர் கணேசன். அவருக்கு சிலை வைத்தாயிற்று . ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் அவருக்கும் ஒரு சிலை. . சிரித்தால் குழிவிழும் பிரபுவுக்கு. அவருக்கு ஒரு சிலை . இரும்பு உடம்பு சரத்குமாருக்கு. அவருக்கு ஒரு சிலை. தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்து கதாநாயாகனாய் ஆனதற்காக தனுஷுக்கு ஒரு சிலை. அறுபதிலும் தலைகீழாய் உதைப்பதற்காக விஜய்காந்திற்கு சிலை.... போங்கடா நீங்களும் உங்க சிலையும் ...

சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)

1)சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்... என் பல்பத்தை அவன் எடுத்துட்டான் .. என்னிடமிருந்து , பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து பல்பத்தை அவன் எடுத்துட்டான். ......

சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்.. என் தொடையை கிள்ளிட்டான் ..என்னை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னை கிள்ளிட்டான் .


- தாவியதற்கு சின்னப்புள்ளத்தனமான காரணங்களைக் கூறி சரத்குமார் ஜெயாவில் பேட்டி




2) இந்த விஜய்காந்த் ... ரஜினிகாந்த் நினைச்சா ..

- காவிரி பிரச்சினையை தீர்க்க பிரதமரை பார்க்க சென்றதாக ஊடகப் புரளிகளுக்கிடையே , இமயமலை சென்றதாக ரஜினி கூறி விமான நிலையத்தில் உளறியது ..


3)நாங்கள் இருவரும் நண்பர்கள் ..ஆதிகாலத்திலிருந்தே அடிச்சுக்குவோம்.. நான் அவனை அடிப்பேன் அவன் சுற்றியுள்ள எல்லோரையும் அடிப்பான். கவுண்டமணி செந்தில் காமெடியை விட கலக்கலா இருக்கும் .
-இதெல்லாம் யார் சொன்னது என்று சொல்லத்தேவையில்லை



4) புரச்சித்தலைவி வால்க ..புரச்சித்தலைவி வால்க ..

- பாராளுமன்றத்தில் ராமராஜனின் கன்னி மற்றும் இறுதி உரை



5)எங்க நாட்டுக்கு வராதீங்க .. அங்கே ஆடு மாடு மேய்க்கிறவர்கள்தான் இருக்கிறார்கள் என்று என் அப்பனே மலேஷியாவில் சொல்லியிருக்கான் ..

- முன்னால் எம்.எல்.ஏ ராதாரவி சிங்கப்பூரில் பிச்சை எடுக்கும்போது முழு போதையில் உளறியது



6)தலீ..வா..

- தமிழக ரசிகக்குஞ்சுகளின் தாரக மந்திரம்

விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு

விஜயகாந்த் அவர்கள் ஊழலை ஒழிப்பதற்கான வழிகளை இரவும் பகலும் ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என நாம் அறிந்ததே.. அதன் அடுத்த கட்ட பணிகளில் இப்போது இறங்கியுள்ளார் .


Image hosted by Photobucket.com
நன்றி : தினமலர்