முதல் பகுதி இங்கே. நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா, அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க . அந்த குடும்பத்தை சேர்ந்த ராக்கு முத்துத் தேவர்க்கு ஒரு அழகான மகள் இருந்தா . அவ பேரு பூவாத்தா , பூவாத்தா செக்க செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு .
ஒருநா பூவாத்தா குளத்துக்கு குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து, குளத்துக்கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, , தன் தலைக்கு சிக்கு எடுத்துகிட்டிருந்தா . அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு சூறாவளி காத்து அடித்து, அவளோட முடி, பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு . அத பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாததா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜாதான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா .
இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி, கோவத்துல தன் கையில இருந்த வாளால, கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .
தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய் செர்ந்து 'நடந்த கதை'யை தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா . அண்ணன்மார்களுக்கு கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய . அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியனும்! வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .
இதுக்கிடையில , மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு , 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன் .எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .
'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லொருமாச் சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .
குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரை பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டு பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கபடுத்துனது காணாது, பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேறதான் . அதனால , நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுகொடுக்ககூடாது' என்றார் .
பிறகு , ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி , 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம்தான் முக்கியம். இந்த ராஜாவுக்கு பெண் கட்டி கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது . ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது . அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கனும்' என்று முடிவெடுத்தாஙக .
அதுபடிக்கு மறுநாள் , அரண்மனைக்கு வார வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டு பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம் . வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .
வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி , புதுச்சேலை , சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு , சாமிகும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு , நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரிய்லே. என்றாலும் ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.
காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம் . மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் , ரொம்ப பெரிசு . அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப்பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .
மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கன்னியை (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தாணியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி , வழுவி, சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .
பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப்போயி , மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடி கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள் . அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான் . பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது .
பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள் . 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள், 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே, காடக்கன்னி குவியலில் மூழ்கி , மூச்சுத் திணறி செத்துப்போனாள் .
அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப்பூட்டி, அரண்மனைக்கு அனுப்பிவிட்டு , காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா, ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க .
அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வைச்சு கும்புடுறாங்க' .
நன்றி: மண் மணக்கும் மனுஷங்க
தெய்வங்களான பலி ஆடுகள்-2
Posted by
-L-L-D-a-s-u
at
6
comments
Labels: பொது
அவள் அப்படித்தான் - விமர்சனம்
'பண்ணீர் புஷ்பங்களே..' என்ற பாடல்தான் எனக்கு முதலில் அறிமுகம் . என் குரலுக்கு சரியாக அமையும் பாடல் என (தவறாக) நினைத்து, ஏதாவது ஒரு போட்டியில் இதை பாட வேண்டும் என எண்ணியிருந்தேன் . (நல்ல காலம் அது ஈடேரவில்லை.) பின்பு ஒரு முறை சிங்கப்பூர் வானொலியில் (ஒலி 96.8), 'உறவுகள் தொடர்கதை' என்ற பாடல் ஒலியேற்றப்பட்டபோது , அந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது . முதல்முறை அது எந்த படத்தின் பாடல் என கவனிக்கத் தவறியதால் , மீண்டும் அந்த பாடலை ஒலிபரப்புவார்களா என காத்திருந்த பொழுது, ஒலி அறிவிப்பாளர் கீதா அவர்களால் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டபோது, 'அவள் அப்படித்தான்' எனக்கு அறிமுகமானது. அதுமுதல் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவே முதலானது . நண்பர்களுடான பகிர்தலில் இது ஒரு பாலச்சந்தர் படம் என்றே தவறான தகவலே எனக்கு கிடைத்தது, ஞாயிறன்று வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்வரை .
இதுவும் ஒரு வகையான பாலச்சந்தர் வகைப் படமே . ஆனால் 'படாபட்' என கிறுக்குத்தனமாக உளரும் கதாநாயகி இல்லை இதில், லூசுத்தனமான விடுகதை போடும் கதாப்பாத்திரங்கள் இல்லை . இரத்தமும் சதையுமாக நம்மிடையே இருக்கும், நாமாக இருக்கும் கதாபாத்திரங்களே இவை . இவன் நல்லவன், இவன் கெட்டவன் என தீர்ப்புகள் இல்லை, க்ளைமாக்ஸில் திருந்துவனும் இல்லை, திருத்துபவனும் இல்லை . தீர்வும் இல்லை.
இரு கதாநாயகிகள் ஒருவனை காதலித்து, கதாநாயகன் அதில் ஒருத்தியை திருமணம் செய்யும்போது, இன்னொரு கதாநாயகி , இன்னொருவனை திருமணம் செய்தால், கற்பு போய்விடும் என, அந்த கதாநாயகியை சாகடிக்கும் தமிழ் சினிமா சூழலில் , இந்த படத்தில் , ஏற்கனவே இருவரால் காதலிக்கப்பட்டு, அதில் ஒருவனிடம் கற்பையும் பறிகொடுத்து அதனையும் மிகவும் மனத்தெளிச்சியுடனே செய்தவள், ஒரு கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள் , இந்த கதாநாயகி என்பதே ஒரு புதுமை . இதில் நடித்த ஷ்ரீப்ரியாவிற்கு பாராட்டுகள் .
'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு காபரே ஆட்டக்காரி சொல்வது முதல் ஆரம்பிக்கிறது படத்தில் சாட்டையடிகள், உங்களுக்கும் எனக்கும் . கதாநாயகன் பெண்களை பற்றி குறும்படம் எடுக்க கோவையிருந்து சென்னை வருகிறான் . பெண்ணுரிமை பேசுகிறான் . கதாநாயகியின் சோகங்களை பரிவுடனே கேட்டுக்கொள்கிறான் . அவளின் 'கற்பு' கதை தெரிந்து அவளை காதலிப்பதாக 'க்ளைமாக்'சில் , அவளிடமில்லை , அவள் தோழியிடம் சொல்லி தன் புனித பிம்பத்தை காத்துக்கொண்டு, திருமணம் செய்வதோ , 'பெண்ணுரிமை' பேசாத , ஒரு அடக்கமான பெண்ணை .. .
கதாநாயகி , போலி வேஷங்களை சாட்டையடி அடிப்பவள். சோஷியல் ஒர்க்கரை பேட்டி காண செல்லும்போது, வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , சோஷியல் ஒர்க்கர் என்னும் மேக்-அப்பே போதும் என்று சொல்பவள், ஆனால் தன் பெற்றோர் பாரிஸில் உள்ளனர் என போலி வேடம் போட எத்தளிப்பவள். சமூகத்திற்காக கணவன் மனைவியாக இருக்கும் பெற்றோர்களாலும், தன்னை காதலித்து சீரழித்தவன் தன்னையே தங்கை எனக்கூறி உறவுகளை கொச்சைப்படுத்துவதாக வாதம் செய்பவள் , உறவுகளை வெறுப்பதாக கூறுபவள் , உறவுக்காக, அன்புக்காக ஏங்கி ஒருமுறை இல்லை, இரு முறை ஏமாந்தாலும் மூன்றாம் முறையும் காதலிக்கிறாள் ஏமாறுவதற்காகவே .
மூன்றாவதாக ஒரு கேரக்டர் . கதாநாயகன் கமலின் நண்பனாக, கதநாயகி ப்ரியாவின் முதலாளியாக, ரஜினிகாந்த் . நம்மில் பலரின் பிம்பம் . பெண்களை போகப்பொருளாக எண்ணுபவன் . தன் சொந்தக்காலில் நிற்கலாம் என பெண்கள் நினைப்பதையே பாவம் என நினைக்கும் ஆச்சாரியான்(?) அவன் . சந்தர்ப்பம் கிடைக்கும்போது , கதாநாகியிடம் கலவிக்கும் ஆயத்தமாகிறான். அவள் அறைந்தவுடன் , கற்பழிக்க எத்தளிக்கவில்லை. 'உன்னை அடைந்தே தீருவேன்' என பொதுவான வில்ல வசனம் பேசவில்லை..... அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறான் . வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவன் நம்மைப்போலவே .
கதாநாயகின் இரண்டாவது காதலன். ரவீந்தர் என நினைக்கிறேன் . நல்லவன். பக்திமான் . கதநாயகியுடனான உறவுக்குப்பின் தவறு செய்துவிட்டதாக அழுகிறான் . தவறை தெரிந்தே செய்த பின் , அதனை மறைத்து, பின்னர் உணராமல் செய்து விட்டதாக பாவமன்னிப்பு கேடபவர் எத்தனை பேர். ஆனால் இச்சை முடிந்தவுடன் தன் வேஷம் கலைந்து தன் காதலியை சகோதரி என்கிறான் . பக்திமான்களுக்கே உரிய புத்தி. குரூரம். வெளிவேஷம் .
க்ளைமாக்சில் நாயகன் மனைவியிடம் (சரிதா?), நாயகி 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்' எனக்கேட்க, அவள் ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என 'அதனால்தான் நீ சந்தோஷமாய் இருக்கிறாய்' என்பாள் கதாநாயகி. ’அவள் மீண்டும் இறந்து போனாள், அவள் இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . . அவள் அப்படிதான்’’என்ற பின் குரலோடு படம் முடியும் . இந்த படத்தில் எந்த தீர்ப்பும் சொல்லப்படவில்லை . யாரும் திருந்தவில்லை. எனவே அவள் மட்டுமில்லை அவர்கள் எல்லோருமே அப்படித்தான் .
இயக்குனர் ருத்ரையா மனித உறவுகள் , எண்ணங்களோடு ஒரு காவியமே உருவாக்கியிருக்கிறார் . பாலச்சந்தர் போன்றவர்கள் அளவுக்கு மீறி போற்றப்படும் சூழலில், ருத்ரையா போன்றோர் வாய்ப் பில்லாமல் தவிப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு . பெயரை வைத்து அவர் தெலுங்கர் என நினைத்தேன். ஆனால் அவர் சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்தவர் என்றும், இன்றும் திரைப்படம் எடுப்பதே இலட்சியமாக இருப்பதாகவும், கார்த்திக்கை வைத்து ஒரு த்ரில்லரை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன் . குத்தாட்ட கூமுட்டைகளிடமிருந்தும் பஞ்ச் வசன பரதேசிகளிடமிருந்தும் தமிழ் சினிமாவுக்கு எப்போது விடுதலையோ ?
Posted by
-L-L-D-a-s-u
at
15
comments
Labels: திரை
காக்காக்கூட்டம்
அடுத்த மாதம் 23-ந் தேதி முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா. இதற்காக 22 மற்றும் 23-ந் தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பாராட்டு விழா நடக்கிறது. இது குறித்து விழாக்குழுவின் தலைவர் ராம. நாராயணன், செயலாளர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கருணாநிதியின் வரிச்சலுகை, படப்பிடிப்பு கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் சிறு முதலீட்டாளர்களுடன் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற, நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், தொழிலாளர் சம்மேளனம் சார்பில் விஜயன் தலைமையில் ஒரு குழுவும், விநியோகஸ்தர் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையில் ஒரு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அண்ணாமலை, அபிராமி ராமநாதன் ஆகிய இருவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவில் கலைநிகழ்ச்சி, ஓரங்க நாடகம், காமெடி தர்பார், இன்னிசை என நவரசங்களும் இடம் பெறுகிறது. கருணாநிதியின் புகழ்பாடும் ஒரு புத்தகமும் விழாவில் வெளியிடப்படுகிறது.
அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவர். அதற்காக கவலை வேண்டாம். எப்படியும் சன் டி.வி.யில் ஒரு சன்டே இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமலா இருப்பார்கள்!
நன்றி : சினிசௌத்
Posted by
-L-L-D-a-s-u
at
3
comments
Labels: அரசியல்
தெய்வங்களான பலி ஆடுகள் ..
'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் . அதோடு பரிதாபமாக செத்த அந்த கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாக தனக்கோ , தன் குடும்பத்திற்கோ, அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப்பெண்ணை குலதெய்வமாக்கி வழிபட்டு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .
இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது . பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூறமுடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .
சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன் , வலிமையானவனை எதிர்த்து போராட முடியாமலும் , தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக்கொடுக்கமுடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தபோது , தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .
இங்கே சொல்லப்படப்போகிற கதையும் வழக்கமான 'கன்னித் தெய்வ வழிபாடு' சார்ந்த கதைதான் . ஆனால் அதில் அந்த பெண்ணை கொலை செய்த முறை மட்டும் புதுமையாக இருந்தது .. இனி கதை .. அடுத்த பதிவில் .
நன்றி : தாராமதி
Posted by
-L-L-D-a-s-u
at
1 comments
Labels: பொது
கருணாநிதி.. ஜெயலலிதா.. கிறிஸ்தவம்
'கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகக்கூடாது' என்று சிந்தித்த கருணாநிதி நாத்திகர் என சொல்லிக்கொள்வது ஒரு முரண்பாடுதான் . இதே சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு வந்தது.. அவர் இயேசு.. அவருக்கு கோபம் வந்ததாக பைபிளில் கூறப்படும் ஒரே இடம் அதுதான் . இறைவனின் இடத்தை கள்வரின் குகைகளாக்காதீர் என கோபப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .எப்போதும் அப்படித்தான் .. கள்வர்கள் குடியிருக்கும் இடம் கோவில்தான் போலிருக்கிறது .. இயேசு காலத்திலும் .. கருணாநிதி காலத்திலும் ..
ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் . 'பல்லுக்கு பல் ..கண்ணுக்கு கண் ' என்ற சட்டத்தை கடிந்து , 'இறைவனையும் மனிதனையும் அன்பு செய்வதே' தன் சட்டமாக்கி , அந்த நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க சொன்ன இயேசுவை பின்பற்றுவதாக சொல்லும் இந்த கிறித்துவ மத குருமார்கள் 'மதமாற்றம்' என்பதை இயேசுவே சொன்னதுபோல் திரித்து அலைவது இயேசுவிற்கு செய்யும் பெரும் துரோகம் .. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய பவுல் கூட , அவர் பல பிற்பட்ட சட்டங்களை வலியுறுத்தியிருந்தாலும் , மதமாற்றத்தையல்ல மனமாற்றத்தைத் தான் வலியுறுத்தியுள்ளார் . கிறிஸ்தவர்கள் தன் வாழ்வியல் நடைமுறைகளால் , மற்றோரை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார.. ஆனால் பல அரசியல்களில் சிக்குண்ட கிறிஸ்தவ மதங்கள் , கிறிஸ்துவை பின்பற்றுவதாக சொல்லும் பல போலிக்கள் இன்று பல அரசியல் காரணங்களுக்காக மதமாற்று வைபவத்தை நடத்துவது இயேசுவுக்கு செய்யும் துரோகம் . கிறித்துவம் தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் , பணத்திற்காகவோ , வியாதி , சாதீய காரணங்களுக்காகவோ, மற்ற எந்த காரணத்திற்காகவோ மதம் மாறுவதும் தடை செய்யப்படவேண்டும்., இதனை செய்யவேண்டியது மதகுருமார்கள் .. இதனை இந்த போலிக்கள் செய்யாமல், கிறிஸ்துவத்தை உயர்த்தும் இந்த சட்டத்தை எதிர்த்தது கேலிக்குறியது.
Posted by
-L-L-D-a-s-u
at
8
comments
Labels: அரசியல்
சினிமாவும் அரசியலும்
சினிமாவும் மக்களை ஏமாற்றுகிறது. அரசியலும் மக்களை ஏமாற்றுகிறது . சினிமாவில் காட்சிகளின் மூலம் மக்களை அழ வைக்கிறோம் . சிரிக்க வைக்கிறோம் . எமோஷனலாக வைக்கிறோம் . அரசியல் கட்சிகளும் இதே உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துகினறன. தலைவர்களின் அறிக்கைகள் , மேடை பேச்சுகளின் மூலம். இப்படி ஒரே காரியத்தைச் செய்யும் சினிமாவும் , அரசியலும் சில விஷயங்களில் மட்டும்தான் வித்தியாசப்படுகிறது .
சினிமாத் துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர்கள், விழா மேடைகளில் சந்தித்துக் கொள்ளும்போது ஆரத் தழுவி அன்பு செலுத்துவார்கள் . மைக்கைப்பிடித்து பாசமழை பொழிவார்கள். உள்ளுக்குள் ஒருத்தர்மீது இன்னொருத்தருக்கு கருத்து வேறுபாடும் , கசப்பான எண்ணமும் இருக்கும் .
அரசியலில் இதற்கு நேர்மாறானது நடக்கும், மேடைகளில் ஒருத்தரை ஒருத்தர் திட்டித் தீர்ப்பார்கள். ஜென்ம விரோதி போல் வார்த்தைகளை வீசிக் கொள்வார்கள் .ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் அன்னியோன்யத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் .
இது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர்த்து , மற்ற எல்லா வகையிலும் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை . தமிழக அரசியலில் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக சினிமா கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் இந்த ஒற்றுமைதான் காரணம்.
அரசியலை மிஞ்சியதுதான் சினிமா. கயவர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று சொல்வார்கள். சமீப காலமாக அந்த நிலைமை மாறி , சினிமா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது .
சமுதாயம், இன்று சினிமாக்காரர்களை தேவதூதர்களாக நினைக்கிறது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் சினிமாக்காரர்களின் முதுகில் பயணம் செய்கின்றன் . கட்சிகளின் இந்தக் கணக்கு புரியாமல் நம் நட்சத்திரங்கள் அரசியலில் ஆரவம் காட்டி வருகின்றனர் . இவர்களது ஆரவ்த்தின் பிண்ணணி மக்கள் சேவை அல்ல . சினிமா மீது அவர்களுக்கிருக்கும் அவநம்பிக்கைதான் .
சினிமாவில் மார்க்கெட் போய்விட்டால் மனைவிகூட மதிக்கமாட்டாள் . அப்படியொரு நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் சினிமாவைப்போலவே கவர்ச்சிகரமான தொழிலாக இருக்கும் அரசியலுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறாரகள்.
இவர்கள் அரசியலை ஆக்ரமித்தால் , எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?
சினிமாக்காரர்களுக்கு ஈகோ பல மடங்கு அதிகம் . கல்யாண வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளையாகவும் , சாவு வீட்டுக்குப் போனால் சவமாகவும் இருக்க நினைப்பார்கள். எங்கும் நாமே முதன்மையான் ஆளாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள் .
இப்படிப்பட்ட சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உடைய சினிமாக் கலைஞர்களால் அவமானத்தையோ , புறக்கணிப்பையோ தாங்கிக் கொள்ள முடியாது .
பொதுவாகவே அரசியலில் தனிப்பட்ட ஒருவர் செல்வாக்குப் பெற முடியாது . அப்படிச் செல்வாக்குத் தேடி வரும்போது, கட்சித் தலைமையே கட்டம் கட்டி, அவரைச் செல்லாக் காசாக்கி வேடிக்கை பார்க்கும் . பல கட்சிகள் உருவானதற்கும் , பல தலைவர்கள் உருவானதற்கும் இப்படியான அரசியல் விளையாட்டுக்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.
இந்த அனுபவம் சினிமா கலைஞர்களுக்கு ஏற்படும்ப்பொது அவமானத்தை அதிக நாட்கள் அவர்களால் தாங்க முடியாது. தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்காக உடனே தனிக்கட்சி தொடங்குவார்கள் . புற்றீசல் போல் பெருகும் நட்சத்திரங்களின் தனிக் கட்சிகள் தாக்குப் பிடிக்குமா என்றால் முடியாது என்ற சொல்வேன். சில வருஷங்கள் இயங்குவது போல் தெரியும். சில வருஷங்கள் பரபரப்பாக இயங்குவது போல் தெரியும் அப்புறம் அடங்கி போய்விடும் .
கலை வேறு , அரசியல் வேறு என்ற முடிவுக்கு வந்து மக்கள் தெளிந்து விடுவார்கள் . அந்த தெளிவின் அடிப்படையில் மக்கள் சொல்லும் தீர்ப்பு நட்சத்திரங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.
- கேயார் எழுதிய 'இதுதான் சினிமா'விலிருந்து உருவப்பட்டது .
சினிமாத்துறையைப் பற்றி அவர் எழுதிய மற்றொரு பகுதி கீழே கொசுறாக..
சினிமாத்தோழில் முடங்கியதற்கு , ப. சிதம்பரம் கொண்டுவந்த வி.டி.ஐ.எஸ் திட்டம் ஒரு காரணம் . இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெள்ளையாகிவிட்டது. இப்படி வெள்ளையாக்கப்பட பணம் சினிமாவில் புழங்கி வந்த பணம்தான் . வி.டி.ஐ.எஸ் திட்டத்தினால் அந்த பணத்தை இழந்துவிட்டது சினிமாத்துறை !
Posted by
-L-L-D-a-s-u
at
1 comments
பட்டம் சூட்டு விழா
மாமனிதர் மகான் ஷிவாஜி கணேஷன் அவர்களின் சிலை திறப்பிற்கு பெரும் ஆபத்து வர இருந்த நிலையில் , அவரின் ஆருயிர் நண்பரும், அரசியல் சாணக்கியரும், முக்கியமாக இன்றைய முதல்வருமாகிய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருவாரமாக தூங்காமல் உறங்காமல் மன உளைச்சல் கொண்டார்கள் .
சிலைக்காக மன உளைச்சல் கொள்வது இதுதான் முதல்முறையா? இல்லை இல்லை பல முறை பல்லாயிரம் முறை. சுனாமி அலை வந்த போது கூட வள்ளுவர் சிலைக்கு ஆபத்தோ என்று மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான் நம் முதல்வர் .
இதுமட்டுமா கண்ணகி சிலைக்காக எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் நம் தலைவர் என இந்த உலகிற்குத் தெரியாதா என்ன?
நமது முதல்வரின் மன உளைச்சல்களை பாராட்டி "சிலைகாக்க மன உளைச்சல் கொண்டான்" என்ற பட்டத்தை இம்மாமன்றம் சூட்டுகிறது .
பி.கு :
இம்சை அரசன் படத்திற்கும் இந்த பட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .
Posted by
-L-L-D-a-s-u
at
0
comments
சினிமா ...சிலை... கூத்து
சிவாஜி வேடத்தில் நாடகத்தில் ஒருவர் நடித்தாராம்.. மிகவும் நன்றாக நடித்தாராம்.. கண்டிப்பாக நனறாக நடித்திருப்பார். அவரை புகழ்ந்து பேசிய ஒருவர் அவரை 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினாராம் . ஆதலால் அவர் பெயர் சிவாஜி கணேசனாம்.. 'சிவாஜி' நாடகத்திற்கு பிறகு அவர் பாகப்பிரிவினை , தெய்வமகன் போன்ற படங்களில் பல வேடங்களில் சிறப்பான வேடங்களை வழங்கவில்லையா? அந்த வேடங்கள் பெயரில் அவர் பெயர் ஏன் மாறவில்லை . இதில் ஆரம்பித்தது.... கேப்டன் பெயர் வைத்த படத்தில் நடித்ததில் கேப்டன் என்ற பட்டம் வந்து சேர்ந்து விட்டது . அவர் 'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ? சொரிந்து விட்டவர்களுக்கு தெரியாதா எந்த இடத்தில் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்குமென்று?
ரசிகர் மன்றம் வைப்பது சாமான்யர்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலை வைக்கிறார்கள் .. மாமனிதராம் ..மஹாத்மாவாம்.. ம்ம்.. தெய்வமாவது எப்போதென்று தெரியவில்லை ? இனிமேல் மணிமண்டபம் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும் . அதற்கும் இந்த அரசாங்கம் செவிசாய்க்கும்.. சாதனைப் பட்டியலிலும் அது இடம் பெறும். இதைத்தானே இந்த அரசாங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. வள்ளுவருக்கு பெருமை சேர்க்க கோட்டம் கட்டினார்களாம், சிலை வைத்திருக்கிறார்களாம் .. வள்ளுவனுக்கு பெருமை , தமிழனுக்கு பெருமை திருக்குறள்தானே தவிர கோட்டம் இல்லை . சிலை இல்லை .
மக்களின் பணத்தை விவேகமாக செலவு செய்வது அரசாங்கத்தின் கடமை இல்லையா? அதனை ஒவ்வொருவருக்கும் சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா மக்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்?
இதில் வேறு நட்பின் இலக்கணமாக சிலை வைக்கிறார்களாம். நட்பின் இலக்கணததை காண்பிக்கவேண்டுமென்றால். தன் பணத்தில் , தன் சொந்த இடத்தில் , தங்க சிலையையே வைக்கலாமே? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்களாம் . இதுதான் நட்பாம். வெட்கமாயில்லை .
சிலை வைக்கவேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மேடையில் பேசியவர்கள், இந்த விழாவிற்கு வந்து தியாகம் செய்தவர்கள், ரசிக மகாஜனங்கள் இவர்கள் பணம் கொடுத்து, வசூல் செய்து சிலையை, தங்கள் சொந்த இடத்திலோ, தனியார் இடத்தை பணம் கொடுத்து வாங்கியோ, தங்கள் அன்பை காண்பித்திருக்கலாமே? பணம் இல்லாதவர்களா இவர்கள்? பஞ்ச பரதேசிகளான மக்களின் வரிப்பணம்தானா இவர்களுக்கு கிடைத்தது.?
மகாநடிகர் கணேசன். அவருக்கு சிலை வைத்தாயிற்று . ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் அவருக்கும் ஒரு சிலை. . சிரித்தால் குழிவிழும் பிரபுவுக்கு. அவருக்கு ஒரு சிலை . இரும்பு உடம்பு சரத்குமாருக்கு. அவருக்கு ஒரு சிலை. தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்து கதாநாயாகனாய் ஆனதற்காக தனுஷுக்கு ஒரு சிலை. அறுபதிலும் தலைகீழாய் உதைப்பதற்காக விஜய்காந்திற்கு சிலை.... போங்கடா நீங்களும் உங்க சிலையும் ...
Posted by
-L-L-D-a-s-u
at
21
comments
சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)
1)சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்... என் பல்பத்தை அவன் எடுத்துட்டான் .. என்னிடமிருந்து , பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து பல்பத்தை அவன் எடுத்துட்டான். ......
சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்.. என் தொடையை கிள்ளிட்டான் ..என்னை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னை கிள்ளிட்டான் .
- தாவியதற்கு சின்னப்புள்ளத்தனமான காரணங்களைக் கூறி சரத்குமார் ஜெயாவில் பேட்டி
2) இந்த விஜய்காந்த் ... ரஜினிகாந்த் நினைச்சா ..
- காவிரி பிரச்சினையை தீர்க்க பிரதமரை பார்க்க சென்றதாக ஊடகப் புரளிகளுக்கிடையே , இமயமலை சென்றதாக ரஜினி கூறி விமான நிலையத்தில் உளறியது ..
3)நாங்கள் இருவரும் நண்பர்கள் ..ஆதிகாலத்திலிருந்தே அடிச்சுக்குவோம்.. நான் அவனை அடிப்பேன் அவன் சுற்றியுள்ள எல்லோரையும் அடிப்பான். கவுண்டமணி செந்தில் காமெடியை விட கலக்கலா இருக்கும் .
-இதெல்லாம் யார் சொன்னது என்று சொல்லத்தேவையில்லை
4) புரச்சித்தலைவி வால்க ..புரச்சித்தலைவி வால்க ..
- பாராளுமன்றத்தில் ராமராஜனின் கன்னி மற்றும் இறுதி உரை
5)எங்க நாட்டுக்கு வராதீங்க .. அங்கே ஆடு மாடு மேய்க்கிறவர்கள்தான் இருக்கிறார்கள் என்று என் அப்பனே மலேஷியாவில் சொல்லியிருக்கான் ..
- முன்னால் எம்.எல்.ஏ ராதாரவி சிங்கப்பூரில் பிச்சை எடுக்கும்போது முழு போதையில் உளறியது
6)தலீ..வா..
- தமிழக ரசிகக்குஞ்சுகளின் தாரக மந்திரம்
Posted by
-L-L-D-a-s-u
at
7
comments
விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு
விஜயகாந்த் அவர்கள் ஊழலை ஒழிப்பதற்கான வழிகளை இரவும் பகலும் ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என நாம் அறிந்ததே.. அதன் அடுத்த கட்ட பணிகளில் இப்போது இறங்கியுள்ளார் .
நன்றி : தினமலர்
Posted by
-L-L-D-a-s-u
at
5
comments
ச்ச்சீ .. நீயெல்லாம் ஒரு தெய்வமா..??
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . நான் நினைத்திருக்கும் கடவுள் அய்யப்பனாக இருக்கலாம் .ஆனால் அக்கடவுள் மனத்தையன்றி , குறி உட்பட வேறெதும் பார்க்கமாட்டான் என்ற எண்ணம் எனக்குண்டு . தன்னை பார்க்கத்தகுதி ஆண்குறிதான் என ஒருவன் நினைத்தால் அவன் இறைவன் இல்லை , இழிபிறவி ... நான் நினைத்திருக்கும் கடவுள் இவற்றைவிட மேலானவன் .
நான் நினைத்திருக்கும் கடவுள் இயேசுவாக இருக்கலாம் . பிறந்த குழந்தை கூட , திருமுழுக்கு பெற்றால்தான் மோட்சம் என்று சொல்லும் மூடனாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .
நான் நினைத்திருக்கும் கடவுள் அல்லாவாக இருக்கலாம் . ஆனால் தீயவனைக்கூட கொன்றால்தான் மோட்சம் என்று சொல்லும் கொடியவனாக கண்டிப்பாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .
கடவுள் என்பவன் , அவனி(ளி)ன் பெயர் என்னவாக இருந்தாலும் கருணை உருவானவாகவே இருக்கமுடியுமேயன்றி , யூதர்களின் கடவுள் என்றோ , சில ஜாதியினர் மட்டுமே தொட முடியும் என்ற எண்ணம் கொண்டவனாகவோ , தெய்வ பாஷை என்று ஒன்றை கொண்டவனாகவோ , ஆண்/பெண் என்றோ , வி.ஐ.பி என்றோ , ஏன் குளித்து வருபவன்/வராதவன் என்றோ பேதம் பார்ப்பவனாகவோ எப்படி இருக்கமுடியும் . அவ்வாறு ஒரு கடவுள் இருக்கிறான் என்று சொல்லுவது ஏமாற்று வேலை அன்றி வேறென்ன? எளியோரை, ஜாதியின் பெயரால் , இனத்தின் பெயரால் , அடக்குவது தானே மதம் உருவாக்கியவர்களின் குறிக்கோள் . அது மிகவும் வெற்றிகரமான யுக்தி என மீண்டும் மீண்டும் நிருபனமாகி வருகிறதே .
உண்மையான கடவுள் எங்கும் இருக்கிறான் .. தூணிலும் இருக்கிறான் , துரும்பிலும் இருக்கிறான் .. ஆனால் அவன் வர அருவருப்படையும் ஒரு இடம் கோயிலாகத்தான் இருக்கமுடியும் . எல்லோரையும் வித்தியாசமினறி அனுமதிக்கும் ஒரு வியாபாரகூடத்திலோ, திரையரங்கிலோ இறைவன் இன்பமாக வருவானெயன்றி , சில சாதியினரை கருவரையில் அனுமதிக்கும் கோயிலுக்குள் எப்படி இறைவன் குடியிருப்பான் ? பெண்களை திருப்பீடத்தில் பூஜை செய்ய அனுமதிக்காத மாதா கோவிலுக்குள் எப்படி வருவான் ?
'பெண்கள் உள்ளே வந்தால் ஆண்களின் மனக்கட்டுப்பாடு தவறிவிடும் என்பதற்காக இப்படியொரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் பெண்களும் தைரியமாக கோயிலுக்குள் வரலாம்' ..இது நம்ம குருசாமி நம்பியார் கூறியது . அடக்கடவுளே மதவாதிகளுக்கு மட்டுமே இப்படி ஒரு லாஜிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை . ஏன் பர்தா போடுகிறார்கள் என்றாலும் , ஏன் பெண்களை திருப்பலி செய்ய அனுமதிப்பதில்லை என்றாலும் இதே மாதிரியான பதில்கள்தான் மதவாதிகளிடமிருந்து வருகிறது . ஆண் தவறு செய்வானென்றால் அவனைத்தானே கொவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது . ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும். எதற்கு பெண்ணுக்குத் தணடனை ? மதங்கள் மாறினாலும், மதவாதிகளின் எண்ணங்கள் ஏன் ஒரே மாதிரியாய் உள்ளது?
Related Links :
http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html
http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post.html
Posted by
-L-L-D-a-s-u
at
41
comments
Labels: மத அரசியல்
தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள்
கல்வெட்டு அவர்களின் ஹலோவின் மற்றும் பொங்கல் பதிவுகளை தொடர்ந்து தமிழ் கிறிஸ்தவர்களின் திருவிழாக்களை பற்றி தெரிந்த சிலவற்றை எழுதலாம் என உத்தேசித்து எழுதியுள்ளேன் .
கிறிஸ்துவர்களின் திருவிழாக்களில் கிறிஸ்துமஸ் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில், சான்டா க்ளாசும்,. கிறிஸ்துமஸ் மரமும் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன் என்பது ஒரு புரியாத புதிர்தான் .
ஆனாலும், கிறிஸ்துவ நம்பிக்கையின்படி, கிறிஸ்துமஸைக் காட்டிலும் விசேடமான நாள் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்த நாள். எல்லோருமே பிறக்கிறோம் .. ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி , உயிர்த்த ஒரே ஒருவர் இயேசுதான்..ஆதாலால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி ஈஸ்டர்தான் கிறிஸ்துமஸை விட முக்கியமான நாள்.. இது பொதுவாக ஞாயிறன்று வருவதனாலும் , பல நாடுகளில் பொது விடுமுறை அட்டவணையில் இது இடம் பெறாததாலும், பலருக்கும் ஈஸ்டர் பற்றி தெரிவதில்லை . ஆனால் ஈஸ்டர் ஞாயிருக்கு முன் வரும் வெள்ளியன்று வரும் 'புனித வெள்ளி', பொது விடுமுறை நாள் என்பதால் பலருக்கும் தெரிந்த விழா.. தெரியாதது அது இயேசு இறந்த தினம் என்பது . பல நண்பர்களிடமிருந்து அன்று எனக்கு வாழ்த்து வருவதும் உண்டு .
மற்ற பண்டிகைகள் எல்லாம் ஒரு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்து விடும் . அன்றைய தினங்களில் கண்டிப்பாக வழிபாட்டுக்கு வரவேண்டும் . அந்த நாட்களை 'கடன்(?)திருநாட்கள்' ' என்று சொல்வதுண்டு . பெறும்பாலும் கத்தோலிக்கர் அன்றைய தினம் திருப்பலியில் கலந்துக்கொள்வர் . அதில் முக்கியமான நாள் ஆகஸ்டு 15 அன்று வரும் 'மாதா விண்ணேற்பு' அடைந்த நாள். இயேசுவின் தாய் மேரி , உடலோடும் ஆன்மாவோடும், விண்ணுலகம் சென்றதாக 'கத்தோலிக்கர்'களால் மட்டும் நம்பப்படும் நாள். அன்று இந்திய சுதந்திர தினமென்பதால் . வழிபாட்டில் கன்னிமேரியும், தாய்த்திருநாடும் நினைவுகூறப்படுவர் .
நவம்பர் முதல்தேதியன்று 'புனிதர் நாள்' கொண்டாடப்படும் . இதுவும் ஒரு கடன் திருநாள்தான் . ஒரு நீண்ட வழிபாடு இருக்கும். என்னை போன்றவர்களால் சுரத்தேயின்றி கொண்டாடப்படும் நாள் அது . அமெரிக்காவில் ஹலோவியன் பண்டிகையாக மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைதான் இது என்று நினைக்கிறேன்.
மற்றும் தமிழரின் நன்றித்திருவிழாவான் பொங்கல் பண்டிகை , கத்தோலிக்க தேவாலயங்களில் , முக்கியமாக கிராமப்புறங்களில் , பொங்கல் , மஞ்சு விரட்டு என மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . இதற்கு 'கடன் திருவிழா' என்ற tag இல்லாவிடினும் உற்சாகத்தோடும், உண்மையான மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாக 'பொங்கல்' உள்ளது.
தீபாவளி - தீபத்திருநாளாய்' - 'உலகின் ஒளி இயேசு' என பாவித்து கொண்டாடப்படுவதும் உண்டு .
Posted by
-L-L-D-a-s-u
at
10
comments
Labels: பொது
தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்!!
இவர் ஒரு தீவிர அ.தி.மு.க ஆதரவாளர் ..எம்.ஜி.ஆர் வழியும் ஜெயலலிதா வழியும் நடப்பதுதான் இவர் கொள்கை .. இவரது பேட்டி சமீபத்தில் குமுதத்தில் வந்துள்ளது . (பலமுறை பல பத்திரிகைகளில் இவர் பேட்டி வரும் .. அதில் அவர் அடிக்கடி கூறுவதுதான் இது !!).. Over to kumudam ..
சட்டசபைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்பது போல, இன்று வரை எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவில்லை. கேட்டால், ‘அ.தி.மு.க.வினர் அராஜகத்தை ஏவி விடுவார்கள்’ என்கிறீர்கள். அப்படியென்றால், சட்டசபை உறுப்பினருக்குண்டான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாமே?
‘‘சட்டசபை செத்துவிட்டது’’ என்று கூறி, எம்.ஜி.ஆர். சட்டமன்றத்துக்கே வராமல் இருந்தார். சட்டமன்றத்தில் நான் ‘பட்ஜெட்’ படிக்க எழுந்தபோது, அதைத் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விட்டுப் பிடுங்கச் சொல்லி, கிழித்தெறிந்து என்னையும் தாக்கி விட்டு, பிறகு சபைக்கே ஜெயலலிதா வராமல் இருந்தார். உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடித்து அதற்கு முன்மாதிரி இருந்தால் சொல்லுங்கள், அதன்படி நடக்கிறேன்.
Posted by
-L-L-D-a-s-u
at
3
comments
Labels: அரசியல்
பட்டத்து ராசா
இளையராஜாவை இனிமேல் 'இசைஞானி' என அழைக்கவேண்டுமென்று சொன்னேன் . அந்த சிறப்புப் பட்டம் , அவருடன் ஒட்டிக்கொண்டது . ஊரில் - நாட்டில் - உலகத்தின் மூலை முடுக்குகளில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைவருக்கும், அவர் அன்று முதல் 'இசைஞானி'யாகவே ஆகிவிட்டார் .
அந்த எழுச்சிமிகுந்த விழாவில்தான் நான் கமலுக்குக் 'கலைஞானி' என்ற பட்டமும் சூட்டி மகிழ்ந்தேன் .
இனிமேல் இவர் கவிஞர்(!) கண்ணதாசன் என்றேன் . அன்று அவருக்குக் 'கவிஞர்' என்று நான் சூட்டிய பட்டம்தான் , அவர் மறைகின்ற வரையில் , கவிஞர் என்றாலே. அது கண்ணதாசன் தான் என்கிற அளவுக்கு நிலைத்து நின்றது .
கவிஞர் வாலிக்கு 'காவியக் கவிஞர்' என்ற பட்டத்தைச் சூட்டியதும் நான் தான் .
தம்பி வைரமுத்துவை நான் 'கவிப் பேரரசு' என்று அழைத்ததுதான் , இன்றைக்கும் என்றைக்கும் தமிழர் வாழும் பகுதிகள் எங்கும் நின்று நிலைத்துவிட்ட பெயராக ஆகியுள்ளது .
தமிழுக்கு செந்தமிழ் என்று பட்டம் சூட்டியதும் நான் தான்.
....தொடரும் ....
என்னை கரு...தி என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது .
Posted by
-L-L-D-a-s-u
at
9
comments
சிங்கப்பூருக்கான இந்திய பாஸ்ப்போர்ட்
இது நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது .. நடந்த நாளும் கொஞ்சம் வித்தியாசமான நாள் தான். 1999 வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி .9/9/99 .. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் மலேஷியா கம்பனி ஒன்றில் வேலை கிடைத்திருந்தது . விசா எடுக்க மலேஷிய ஹைகமிஷன் செல்ல ஆட்டோ எடுத்தேன் . பொதுவாக சென்னையில் , பஸ்ஸில் செல்ல பிடிக்காமல் , ஆட்டோ எடுக்க வசதியுமில்லாமல் , சைக்கிளில் செல்வதுதான் என் வழக்கம் . ஆனால் பாஸ்ப்போர்ட் மற்றும் சில முக்கியமான படிவங்கள் இருந்த நிலையில் ஆட்டோவில் செல்வதே பாதுகாப்பாக தோன்றியது ..
பத்திரிகைகளில் ஆட்டோ சூடு என்றால் என்ன என்று படித்திருந்ததும் , மிடில் க்ளாஸ் புத்தி என்று ஏதோ சொல்வார்களே அதுவும் சேர்ந்து , ஒரு இருபது பைசாவுக்கும் அடுத்த இருபது பைசாவிற்கும் உள்ள கால இடைவெளியை கணக்கிட்டு கொண்டே வந்ததில் , ஆட்டோவில் சூடு வைத்திருந்தது உறுதியாய் தெரிந்தது .. தேர்தல் பிரச்சார காலம் என்பதால் , ஆட்டோ சென்னையை சுற்றியதில் வேறு, மீட்டர் போன்றே B.P யும் எகிற , மலேஷிய ஹைகமிஷனை விசாரித்து சென்றுவிடலாம் என்று எண்ணி , அதன் அருகிலிருக்கும் கல்லூரி வாசலில் (கல்லூரி பெயர் நியாபகம் இல்லை) இறங்கினதும் ஏதோ தோன்ற, என்னுடைய ஃபைலை சோதனை செய்ததில் பாஸ்ப்போர்ட் அங்கே இல்லை ..
அடுத்த வந்த ஆட்டோவை பிடித்து , நான் வந்த ஆட்டோவை பிடிக்கலாம் என்றெண்ணி பார்த்தால் முன்னால் செல்வதோ மூன்று ஆட்டோக்கள் .. மூன்றும் திரும்புவது மூன்று திசைகளில் .. நான் எங்கே ஆட்டோ நம்பரை பார்த்தேன், பார்த்ததெல்லாம் ரேட்டுதான் .
புது பாஸ்ப்போர்ட்டுக்கு அலைந்தது எல்லாம் தனிக்கதை .. இடையில் சிங்கப்பூரிலும் வேலை கிடைத்து , பாஸ்ப்போர்ட் ஆஃபிசரின் நேர்முக விசாரனையின்போது , தெரிவு சிங்கப்பூர் வேலையாகவே இருந்தது .. ஒரு வருட 'validity' மற்றும் சிங்கப்பூர் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் மட்டுமே பாஸ்ப்போர்ட் தரமுடியும் என்ற கண்டிஷனோடு எனக்கு பாஸ்ப்போர்ட் வழங்கப்பட்டது . பார்க்க படம் ..
என்னுடைய கேள்வி இதுதான் ? கடவுச்சீட்டு 'இந்திய குடிமகன்' என்ற அடையாள அட்டை இல்லையா? , அது ஒரு பயணப்பத்திரம் மட்டும்தானா? 'சிங்கப்பூர் மட்டுமே எனக்குறிப்பிட்டுள்ளதால் இந்த கேள்வி.. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் ..
Posted by
-L-L-D-a-s-u
at
6
comments
Labels: பொது
கங்குலி.. கருத்து சுதந்திரம்.. பச்சை விளக்கு ....
கருத்து சுதந்திரத்தை பாருங்கப்பா.. கங்குலி சரியா விளையாடலையாம் . இந்தியா மானம் போயிடுச்சாம் .. (என்னமோ இந்தியாவின் கௌரவமும் மானமும் கங்குலி மட்டையிலும், அவர் பந்தில் துப்புற எச்சியிலும் இருக்கிறமாதிரி ) ..அப்படியே மானம் போனாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மானம் அல்லவா போகும் .. வாரிய நிர்வாகிகளுக்கல்லவா சொரனையும் சூடும் இருக்கவேண்டும் ... நம்மவர்களுக்கு வருகிற ஆத்திரத்தை பாருங்கள் .. குஜராத் கலவரத்தினால் வராத ஆத்திரம், சாதி கட்சிகளின் கொட்ட்த்தினால் வராத ஆத்திரம் , தீவிரவாதிகளின் மேல் வராத ஆத்திரம், சரியாக மட்டை அடிக்கவில்லை என மட்டையடித்து ஒரு வெப்சைட் www.ihateganguly.com .. அதிகப்படியாக ஒரு பதிவு போடலாம் (தற்காப்பு ஆட்டம்!!) அதற்குமேலான முக்கியத்துவம் எதற்கு? எங்கேயாவது ஒரு செஞ்சுரி அடித்தால், ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றால் திரும்பவும் அவர் கடவுளாகிவிடுவார் .. இங்குதான் கோயிலும் கட்டுகிறார்கள் செருப்பையும் தூக்குகிறாரகள். என்றுதான் நிதான நடைமுறை வருமோ?
அப்பாடா .. எதோ ஒரு பதிவு போட்டாச்சு.. இன்னும் மூன்று மாதத்திற்கு கவலையில்லை.. பச்சைவிளக்கு எரியும் (என நினைக்கிறேன்)
Posted by
-L-L-D-a-s-u
at
3
comments
Labels: பதிவர்வட்டம்
தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..
என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..
1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?
2) ஓட விட்டு, டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?
3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?
ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!
டிஸ்க்ளைமர் ...
டிஸ்க்ளைமர் ...
அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..
ஆ) தங்கர் நடிகைகளை திட்டினதில் எனக்கு ஒரு வருத்தமுமில்லை .
இ) தஙகர் மன்னிப்பு கேட்டதும் என்னை பாதிக்கவுமில்லை ..
ஈ) பாலியல் தொழிலாளிகளின் மேல் மரியாதை வைத்திருப்போர் , நடிகைகளை அவர் பாலியல் தொழிலாளிகளோடு ஒப்பிட்டதை கண்டித்து கொதித்து எழுந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது .. அவர்கள் தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .
எனக்குள்ள ஒரே வருத்தம்.. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும் தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..
Posted by
-L-L-D-a-s-u
at
15
comments
குப்பயிலே மாணிக்கம்..??
முன்னொரு காலத்துல சொன்ன பச்சோந்தி, நாயி, சிங்கம் , கொரங்கு, நரி,கழுதப்புலி கதைகளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ..கணேசன் பதிவிலயும்,குயிலி பதிவிலயும் ஒரு அனானிமசு நண்பர் நம்மல குப்பயிலே கிடக்கிற மாணிக்கம்னு (LLTrashu) சொன்னதால ஒரேதா புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத எழுதறேன் .
முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வச்சுக்கிச்சாம் . முயல் வேகமா முன்னேறி ஓடிக்கிட்டு இருக்கும்போதே ' நாமதான் ரொம்ப வேகமா ஒடுரமே.. நம்மல எங்கே இந்த ஆமை முந்த போகுதுன்னு நினைச்சுக்கிட்டு, அங்கினக்குள்ளயே படுத்து தூங்கிடுச்சாம் .. மெதுவா ஊர்ந்து போன ஆமை வெற்றிக்கோட்டைத் தாண்டி ஜெயிச்சிருச்சாம் ..
நீதி : நாம எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் , எடுத்த செயலை முடிக்குமளவுக்கும் தடம் மாறிடக்கூடாது .
முயல் தன்னோட தப்ப உணர்ந்துச்சாம். அது , ஆமைக்கிட்டே போய் இன்னொருதடவை போட்டிக்கு அழைச்சுச்சாம் . இந்த போட்டியில, முயல் ஓட ஆரம்பிச்சு , எல்லைக்கோட்டைத் தாண்டும் வரை வேற சிந்தனையே இல்லாம , ஜெயிக்கனும்கிற குறிக்கோளோட ஓடி முதல்ல வெற்றிக்கோட்டை சேர்ந்துருச்சாம் .
நீதி : ' நாம செஞ்ச தப்புக்களிலிருந்து பாடம் படிச்சுக்கிட்டு அதை திருத்திக்கிட்டோம்னா வெற்றி நமக்குத்தான்'.
இப்ப ஆமை யோசித்துச்சாம்.. நாம எத்தன தடவ தரையில பந்தயம் வச்சாலும் தோத்துருவோம் . அதனாலே இப்ப தண்ணியில(குளம், ஆறுல இருக்கிற தண்ணிங்க!!) பந்தயம் வைக்கலாம்னு நினைச்சு முயல போட்டிக்கு கூப்பிட்டிச்சாம் .. முயலும் வந்து தண்ணிக்குள்ள நீச்சலடிக்க முடியாமே,தரையிலேயே தவிக்க, ஆமை நீந்தி ஜெயிச்சிருச்சாம் .
நீதி : 'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் , நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்' .
இருவருக்குமுள்ள தனித்திறமையை இருவரும் புரிஞ்சுக்கிட்டு, ரெண்டு பேரும் ஆலோசனை செஞ்சு , தரையிலே பிரயாணம் செய்றப்போ முயல் ஆமையை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும், தண்ணியில நீஞ்சிரப்போ ஆமை முயலை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டு , அப்படியே செஞ்சு சந்தோஷமாக நட்போட இருந்துச்சுங்களாம் ..
நீதி : இதுதாங்க கூட்டுப்பணி (Team work) . ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட திறமையை அங்கீகரிச்சு அதனோட பயனை அனுபவிச்சு, சண்ட போடாம(சாத்தான் வேதம்!!), சந்தோசமாக வாழனும்ங்க ..
Posted by
-L-L-D-a-s-u
at
16
comments
Labels: பொது
ராமதாஸ் செய்த கேவலம்..
ராமதாஸ் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வளவு கேவலமாக சென்றுவிடுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை . அதுவும் இலங்கை மண்ணில் .. இது நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது .. தற்போதுதான் என் கவனத்திற்க்கு வந்தது .இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை..
ராமதாஸ் என்னும் பெயரை வீரர்கள் பட்டியலில் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வாறு ஆகும் என எனக்கு தெரியவில்லை? ஒரு ஈரிலக்க ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை .. தொடக்க ஆட்டக்காரராக எவ்வளவு நம்பிக்கையுடம் மேற்கிந்திய அணி அவரை அனுப்பியது .. 9 பந்துக்களை சந்தித்து 1 ஓட்டம்தான் எடுக்கமுடிந்ததா அந்த ராமதாஸ் ர்யானுக்கு ..இது கேவலமில்லையா? நம்பிக்கை துரோகம் இல்லையா? எத்தனை கோடி இந்தியர்கள் மற்றும் மேற்கிந்திய சகோதரர்களை
ஏமாற்றியிருக்கிறார் . ஒரு 4 இல்லை.. ஒரு 6 இல்லை.. ரன்னும் ஆக குறைந்து. Strike Rate எல்லோரையும் விட குறைவு ...
R Ramdass b Maharoof 1 9 0 0 11.11
சுட்டி இங்கே ...
பின்னூட்டமிடுகிறவர்க்கு ஒரு டெம்ப்லேட் ..
மருத்துவர் மீதான ஊடக வன்முறையை பற்றி ஏற்கவவே இங்கு கூறியுள்ளேன் ..
அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள் என்று சமீபத்தில் 1958யில் என் நண்பர் ரங்காச்சாரியிடம் கூறினது இப்போது நியாபகம் வந்தது . இது என்ன ஹைப்பர்லிங் என்று தெரியவில்லை .
உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 112.75-ஆவது நாளை எட்டியுள்ளது ..
Posted by
-L-L-D-a-s-u
at
18
comments
Labels: நகைச்சுவை
திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...
கனடா வாழ் தமிழர்களின் தமிழுணர்வை பாராட்டியதற்காக பொங்கியெழுந்த முகமூடியின் பதிவிற்கான பின்னூட்டமாக இதனை எழுதுகிறேன் . ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் . கனடாவிலும் அவ்வாறே என எண்ணுகிறேன் .. அவ்வாறு இல்லாதபட்சத்தில் திருமாவின் அறியாமையை சுட்டிக்காட்டலாமே ஒழிய அதில் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை .. இதை கூறியதும் தமிழ்நாட்டு பத்திரிகையில்தான் என்பதால் 'இடம்' என்பதிலும் பிர்ச்சினையில்லை ..கமலின் சிங்கப்பூர் பேட்டிக்கும் , திருமாவின் குமுதம் பேட்டிக்கும் இடம் மிகப்பெரிய வேறுபாடு .. கமலின் புரிதலும் தவறு என்பது சிங்கப்பூரில் சில காலம் வாழ்பவன் என்ற முறையில் கூற முடியும் .
சிங்கப்பூரில் தமிழ் தேசிய மொழியாக இருத்தலும் , தமிழ் வளர்ச்சிக்காக அரசாங்கமும் தமிழார்வலர்களின் பணிகளும் தமிழ் ஊடகங்களின் உச்ச்ரிப்புகளும் பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும் , கமல் எண்ணியிருப்பது போலல்லாமல் பொது மக்களிடையே ஆங்கிலம் கலக்காத தமிழோ, தமிழரிடையே தமிழ் என்ற எண்ணமோ தமிழக தமிழரிடையும் குறைவாகத்தான் உள்ளது .. ஒப்பு நோக்கி தமிழகத்தை குறை கூற வேண்டுமென்றால் அவர் சார்ந்த ஊடகந்தான் மிகத்தகுதியானது . அவர் பினாத்தியது தான் உண்மையென்று அவர் எண்ணியிருந்தால் அதனை அவர் தமிழகத்திலே, குறைந்தபட்சம் அவருடைய விசிலடிச்சான் கும்பல்களிடம் கூறியிருக்கலாம் அல்லது சிங்கப்பூரை புகழ்ந்துமட்டும் பேசியிருக்கலாம். அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .
இதனை விட கொடுமையாக தமிழகமக்களை மாடு மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்) போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .
ராதாரவிக்கு ஓட்டளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது தான் தமிழன் செய்தது ..
அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..
Posted by
-L-L-D-a-s-u
at
30
comments